முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிருதனின் பூவிழியே! - 1

  டிஸ்கிளைமர் : ஆன்ட்டி ஹீரோ கதை “நான் என்ன ஆனாலும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் செந்தா!”என்று அவளது தலையிலடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருந்தான் அறிவொளி.  “எனக்கு உங்க மேலே கொள்ளை நம்பிக்கை இருக்குத் தானுங்க! ஆனால் உங்கக் குடும்பத்தை நினைச்சா தான் பயமாக இருக்கு! என்னை அவங்க எப்படி ஏத்துப்பாங்கன்னு நெஞ்செல்லாம் திக்குத் திக்குன்னு அடிச்சுக்குது!”என்று அவனது தோளில் சாய்ந்தவாறே நடுக்கத்துடன் உரைத்தாள் செந்தாழை. “நீ எதுக்கு அதையெல்லாம் நினைச்சுக் கவலைப்பட்ற? அது தான், நான் இருக்கேன்ல? நான் எங்க வீட்டாளுங்க எல்லார் கிட்டேயும் பேசி நம்மக் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறேன் புள்ளை! அதுவரைக்கும் பொறுமையாக இரு!”என்று கூறி அவளைச் சமாதானப்படுத்த முயன்றவனிடம்,  “நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் பொறுமையாக இருப்பேனுங்க! ஆனால் என் வயித்துல வளர்ந்துட்டு இருக்குற நம்மப் புள்ளப் பொறுமையாக இருக்க மாட்டானே!”என்றவளை உச்சபட்ச அதிர்ச்சியுடன் விழிகள் பிதுங்கிப் போய் நோக்கி,  “நீ என்னடி சொல்றவ? நெசந்தானா?”எனக் கேட்டிருந்தான் அறிவொளி.  “ஆமாம் பின்னே! இந்த விஷயத்தில் யாராவது பொய் சொ...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 11

  உடலிலிருந்த வெளி மற்றும் உள் காயங்கள் மட்டுமில்லாமல் ஊமைக் காயங்களும் சேர்ந்து தீபக்கை நிலை தடுமாறி விழச் செய்தது. அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, வெளியே அழைத்து வந்தனர் மஹதனுடைய ஆட்கள். "நேராகப் பார்த்து நட!" என்ற அதிகாரக் குரலில் திடுக்கிட்டுக் கீழே விழப் போனான் தீபக். அதற்கும் கொலைவெறியோடு முறைத்துக் கொண்டே,  வெளியே கூட்டி வந்தனர். அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தான். "இது வரைக்கும் தான் உன்னைக் கொண்டு வந்து விடனுமாம். நிற்காமல் கிளம்பு, கிளம்பு!" என்ற அதட்டலில் சர்வமும் ஒடுங்கிப் போய் இருந்தவனுக்குத் துணையாக யாரும் கூட வரவில்லை. நொண்டி நடந்தவனைத் தோள் பற்றிக் கொண்டு, நடத்திப் போக ஆளில்லை.  தனது சட்டைப் பாக்கெட்டில் அவர்கள் வைத்திருந்த செல்பேசியின் இருப்பு உணர்ந்து, அதை எடுத்து அன்னைக்குக் கால் செய்தான் தீபக். ஒரு திட்டில் உட்கார்ந்து கொண்டவன், தாய் மறுமுனையில் அழைப்பை ஏற்கும் வரை பொறுமையின்றி மூச்சு வாங்கினான். "ஹலோ! தீபக்" என்ற அலறல் காதில் ஏறியதும், "அம்மா" எனச் சேய் போல தேம்பி அழ ஆரம்பித்து விட்டான் அவரது மகன். "டேய்! உனக்கு என்னடா ...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 10

லலிதாவின் குரலைக் கேட்டதும், அதிர்ந்து போன உடலுடன் எழுந்து நின்று விட்டாள் அகதா. அந்த இரைச்சல் நன்றாகவே மௌனாவிற்கும் கேட்டு விட, செல்பேசியை அப்படியே கையில் எடுத்துக் கொண்டு, என்னவென்று பார்க்க வெளியே சென்றாள். திடீரென்று மௌனா ஏன் அதைக் கவனிக்காமல் செல்கிறாள் என்ற குழப்பத்துடன் கிஷானும், மஹதனும் வீடியோ காலின் திரையில் காத்திருந்தனர். அடி வாங்கிய அலுப்பில் மயங்கிக் கிடந்த தீபக்கைத் தான் அவளிடம் காட்டிப் பேசிக் கொண்டு இருந்தனர் இருவரும். அவன் விழித்து இருந்தால் தான், தனக்காகப் பரிந்து பேச இவளிடம் கெஞ்சிக் கூத்தாடி இருப்பானே? பதறிக் கொண்டு வீட்டின் வெளிப்புறம் வந்தாள் அகதா. அவளைப் பார்த்ததும் ஆங்காரத்தில் விகாரம் கொண்டது லலிதாவின் வதனம். "ஹேய் இவளே! என் புள்ளை எங்கேடி?" என்று அவளிடம் உச்சஸ்தாயியில் கத்திக் கேட்டார். எதுவுமே புரியாதவளோ பயத்தை மறைத்தவாறு,"உங்கப் பிள்ளை எங்கே இருக்காருன்னு எனக்கு எப்படி தெரியும்?" எனக் கூறினாள். அவளுக்கு அருகே அணை போல வந்து நின்று கொண்டாள் மௌனா‌. "நீயும் வந்துட்டியா? உங்களையெல்லாம் பகைச்சுக்காதடான்னு அவனுக்குப் புத்தி சொன்னேனே! கேட்கல...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 9

  இன்னும் பெரிதாக விரிந்த விழிகளோடு திடுக்கிடலை ஓரம் போட்டுக் கேட்டாள் மௌனா. "இவன்… தீபக்!" "அவனே தான்!" என்று அசூயையுடன் பதிலளித்தான் மஹதன். "இவன் எப்படி உங்ககிட்ட?" என்று பிரயத்தனப்பட்டு வார்த்தையை வெளியிட்டாள் மௌனா. "அதை நான் சொல்றேன்!" என்று வீடியோ காலின் மறுமுனையில் இருந்தவளுக்கு விளக்கம் செல்ல முன் வந்தான் கிஷான். அவனுடைய வாய் மொழிக்காக காத்திருந்தாள். "இவன் அக்காவோட முன்னால் கணவன் தான? மஹதன் சொல்லி இருக்கான். நீயும் அப்பப்போ பேசி இருக்க"என்றான். "ஆமாம் அண்ணா. இவனை எதுக்கு அடிச்சுருக்கீங்க? அதை முதலில் சொல்லுங்க?" என்று ஆர்வம் தாளாமல் வினவினாள் மௌனா. "இவனுக்கும், உன் ஃப்ரெண்ட்டுக்கும் இன்னும் டைவர்ஸ் ஆகலைல?" என்றதும், "கேஸ் நடந்துட்டு இருக்குல்ல அண்ணா!" என்று முதலிலிருந்து ஒவ்வொன்றாக விசாரிப்பவனிடம் பொறுமையாக பதில் சொன்னாள். "டைவர்ஸ் பண்ணனும்னா காசு கேட்டுப் பார்ப்போம். கொடுத்தால் போனால் போகுதுன்னு முடிச்சு விடுவோம்னு நினைச்சிருக்கான்!" என்கவும், மௌனாவின் முகம் கோபத்தில் விகாரமானது. கிஷான் ...

நிருதனின் பூவிழியே! - டீசர்

  “அந்தப் பொண்ணு இனிமேல் நம்ம வீட்டில் தான் இருக்கனும்! அதுவும் அந்தப் பொண்ணோட வீட்டாளுங்களும் நம்ம வீட்டில் தான் தங்கனும்!”என்ற இளைய மகனைக் கண்டுக் கடுங்கோபம் எழுந்தாலும் அதை அவனிடம் வெளிப்படையாக காட்டும் துணிவில்லை அவனது பெற்றோரான நஞ்சுண்டனும், ராஜகுமாரியும்.  ஏனெனில் தங்கள் குடும்பத்தின் இளைய, இரண்டாம் வாரிசு என்றாலும் கூட நஞ்சுண்டனின் தந்தையின் ஜாதக அம்சத்தில் பிறந்திருந்ததாலேயே அவனை எதிர்த்துப் பேச வாய் எடுக்காமல் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தனர்.  அதே சமயம், ஒரே நாளில் தங்களது தலைவிதி மொத்தமாக மாறி விட்டதைக் கண்டு அவர்கள் வீட்டிலிருந்த அந்தப் பெரிய அறையில் சிறை வைக்கப்பட்டிருந்த அந்த தாயும், அவரது இளம் மகள்களும் மூலைக்கொரு ஆளாக உட்கார்ந்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல், அவர்களது அந்த தலைவிதி மாறுவதற்கான சட்டத்தை இயற்றி விட்டுத் தனது வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டிருந்தான் அந்த வீட்டின் இளைய வாரிசு திருவாதிரன்! 

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 8

  பெற்றோருடன் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களுக்கு ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தாள் மௌனா. " அப்பா, அம்மா! சாப்பாடு ரெடி பண்ணிடறோம்" என்று  "மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டியா மௌனா?" என்றார் சிவமணி. "சொல்லனும் அப்பா. அவர் வொர்க்ல இருப்பார். கிஷான் வீட்டுக்கு வேற போகனும்னு சொல்லிட்டு இருந்தார்" என்று கூறினாள் மகள். "ஆமாம். எப்போ கல்யாணமாம்?" என்று விசாரிக்க ஆரம்பித்தார் அன்னபூரணி. அவர்களுடன் இணைந்து பேசியபடி உணவைத் தயாரித்தனர் தோழிகள் இருவரும்.  புடவை உடுத்தி ஆயத்தமாகி இருந்தாள் முக்தா.  திருமூர்த்தியையும், கௌசல்யாவையும் தங்கள் காரில் வர, நீலகண்டனும், முக்தாவும் அவர்களது காரில் பயணம் ஆனார்கள். அவர்களுக்கானச் சிற்றுண்டியுடன் காத்திருந்தனர் கிஷான் குடும்பத்தினர். மகிழுந்தின் சத்தம் கேட்டு வந்தவர்களை அடையாளம் தெரிந்து கொண்டு, அவர்களது கார் உள்ளே நுழைவதற்காக, இரும்புக் கதவைத் திறந்து விட்டு, காவல் நாய்களையும் அதட்டி, அடக்கி விட்டு, வழி விட்டு நின்றான் வாயிற்காவலன்.  காரிலிருந்து இறங்கிய நால்வரையும், வரவேற்றனர் கிஷானின் பெற்றோர். "முகி!" என்று மகிழ்ச்...