முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிருதனின் பூவிழியே - 22

  சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு மருத்துவமனையை அடைந்தார்கள் அறிவொளி மற்றும் செந்தாழை.  அங்கே செந்தாழையின் வயிற்றில் வளரும் கருவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்தார் மருத்துவர்.  அதற்குப் பிறகுக் கணவன், மனைவி இருவரிடமும்,”கருவோட வளர்ச்சி நல்லா, ஆரோக்கியமாக இருக்கு. இவங்க நல்லா ஒய்வு எடுத்தால் போதும். நான் சில மாத்திரைகள் எழுதி தர்றேன். அதை தவறாமல் சாப்பிடனும். அதே மாதிரி அடுத்து எப்போ பரிசோதனைக்கு வரனும்ன்றதையும் நான் சொல்லிட்றேன். அதுக்குக் கண்டிப்பாக வந்துடுங்க!”என்றவருக்கு,  “ரொம்ப நன்றிங்க டாக்டரம்மா”என்று தங்களது முகங்கள் பிரகாசிக்க நன்றி தெரிவித்தார்கள் அறிவொளியும், செந்தாழையும்.  “பிரசவம் இங்கே பார்ப்பீங்களா? இல்லை…”என்று இழுக்கவும், உடனே முந்திக் கொண்டு,“இங்கே தான் பார்ப்போம் டாக்டர்! ஏன்னா, இந்த ஆஸ்பத்திரியில் தான் எல்லா வசதிகளும் இருக்கு”என்று அவரிடம் தீர்க்கமாகப் பதிலளித்து விட்டிருந்தாள் செந்தாழை.  அதைக் கேட்டுத் திருப்தியாகி,”அப்போ சரி”என்று கூறி விட்டு அவர்களுக்கு மேலும் சில அறிவுரைகளை வழங்கி விட்டு அனுப்பி வைத்தார் மருத்துவர்.  அவரது அறைய...

நிருதனின் பூவிழியே - 21

  அவரோ,”ஏன் நாளைக்கே கிளம்புறீக? ரெண்டு நாள் கழிச்சுப் போறதாகத் தானே சொல்லி இருந்தீக?”எனக் கேட்டிருந்தார் தனது மூத்த மகன் மற்றும் அவனது மனைவியிடம்.  அதற்குத் தனது அன்னையிடம் கூறிய பதிலையே அவரிடமும் உரைத்து விட்டிருந்தான் அறிவொளி.  “அதுவும் சரி தான்”எனத் தானும் அவர்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டார் நஞ்சுண்டன்.  அதற்குப் பிறகு அனைவரும் உணவுண்டு முடித்ததுமே உறங்கச் சென்றார்கள்.  தாங்கள் இருவரும் வெளியே செல்கிறோம் என்பதை அறிவித்ததும் திருவாதிரனும், பூவிழியும் அதை ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அறிந்து மனதிற்குள்ளேயே பொருமிக் கொண்டிருந்தாள் செந்தாழை.  அதனாலேயே அவளுக்குத் தூக்கம் வரவே இல்லை.  கட்டிலில் புரண்டு கொண்டு இருந்தவளைக் கவனித்து விட்டு,”என்னாச்சு ம்மா? தூக்கம் வரலையா?”எனக் கனிவுடன் வினவினான் அறிவொளி.  அவளோ,“ஆமா மாமா. வயிறு ஒரு மாதிரி உப்புசமாக இருக்கு!”என்றவுடன்,  “சாப்பிட்டவுடனே படுக்கக் கூடாதும்மா. நீ எழுந்து கொஞ்ச நேரம் மெதுவாக நட. சரி ஆகிடும்!”என்றவனோ, “ரொம்ப எல்லாம் வயிறு பிரச்சினை இல்ல மாமா. நான் தூக்கம் வர்ற வரைக்கும் எழ...

நிருதனின் பூவிழியே - 20

  அதில் அவனை மௌனமாய்ப் பார்த்து விட்டுத், தனது இதழை வளைத்துக் கசந்த புன்னகையை உதிர்த்தாள் பூவிழி.  அது அவனை என்னவோ செய்யவும்,”என்னம்மா?”என மனைவியிடம் கனிவுடன் கேட்டான் திருவாதிரன்.  அவளோ ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு,”உண்மையைச் சொல்லனும்னா எனக்கு அந்த வீட்டில் இருக்கப் பிடிக்கலைன்றதை விடவும், அங்கே இருக்கிற ஒவ்வொரு நொடியும் எனக்கு மூச்சு முட்டுற மாதிரி இருக்குதுங்க!”என்றவளைத் திடுக்கிட்டுப் போய் நோக்கியவனிடம்,  “அது நம்மக் கல்யாணத்தினால் இல்லைங்க. எங்க ஆத்தா இந்த வீட்டில் தானே உயிரை விட்டாங்க! அதை நினைச்சு, நினைச்சு எனக்கு இதயமே வெடிக்கிறா மாதிரி இருக்குதுங்க! அங்கே இருக்கிற ஓவ்வொரு நாளும் எனக்கு நரகமாக இருக்கு! உங்க வீட்டாளுங்க என்னைப் பேசுற வார்த்தைகளை விட என்னோட ஆத்தாவோட இழப்பைத் தான் என்னால் தாங்கிக்க முடியவே மாட்டேங்குது! அதனால் தான் அங்கே இருக்கப் பிடிக்காமல் காட்டு வேலை செய்றேன்னுச் சொன்னேன்! அதுக்கு நீங்க சம்மதிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க!”என்று அவனிடம் தொண்டைக் கமறக் கூறியிருந்தாள் பூவிழி.  அவளது துக்கம் அவனையும் தாக்கியதால்,”ஹேய் விழி!”என்றவனோ ஜீப்பை இ...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...