முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 19

  தனது தந்தை உள்ளே நுழைவதைக் கண்டதும் அமர்ந்திருக்கும் இருக்கையில் இருந்து எழுந்து,”இங்கே வந்து உட்காருங்க”என்று அவருக்கு வழி விட்டு நின்றான் திருவாதிரன். உடனே அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு,”உம்பொண்டாட்டி இங்கே வேலைக்குச் சேர்ந்துருக்கே? அந்தப் பொண்ணுக்கும் இன்னைல இருந்து சம்பளம் போட்டுக் கொடுக்கனுமா?”என்று அவனிடம் ஏளனமாக வினவினார் நஞ்சுண்டன்.  அவருக்கு இணையாகத் தானும் குறையாத திமிருடன்,”ஆமாம்ப்பா. அவ தன்னோட மனசுக்கு ஆறுதலாக இருக்கும்ன்னு தான் வேலைக்கு வந்திருக்கா. ஆனால் அவ செய்ற அந்த வேலைக்கு மரியாதைக் கொடுக்கிற மாதிரி கூலி போட்டுக் கொடுத்து தான் ஆகனும்!”என்று அவரிடம் தடாலடியாக உரைத்த மகனிடம்,  “அப்போ புருஷனும், பொண்டாட்டியும் ஒரு முடிவோடத் தான் இருக்கீங்க!”என்க,  அதில் மெலிதாகப் புன்னகைத்து விட்டு,”அவ இப்போ தான் அவளோட அம்மாவை இழந்து இருக்கா! அதே மனநிலையோட வீட்டிலேயே அடைஞ்சிக் கிடக்கிறது அவளுக்கு நல்லது இல்ல! அதனால் தான் அவளோட இந்த விருப்பத்துக்கு நான் சரின்னுச் சொல்லிட்டேன்!”என அவருக்கு விளக்கம் அளித்தான் திருவாதிரன்.  “ஓஹோ!”என்றவருக்கு இப்போது தான் நிம்மதி...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 35

  மஹதனும், மௌனாவும் தங்களது தேன்நிலவிற்காக ஏற்பாடுகள் செய்ய நினைக்கும் போது, தோழியைச் செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசினாள் அகதா. "ஹாய் அகி" என்று களிப்புடன் கூறினாள். "அம்மா உன் கூடப் பேசனும்னு சொன்னாங்க. இதோ கொடுக்கிறேன்" என்ற தகவலை அவளிடம் தெரிவித்து, அன்னபூரணியிடம் செல்பேசியைத் தந்தாள் அகதா. "மௌனா‌ செல்லம்! அங்கே உனக்கு எல்லாம் செட் ஆகிடுச்சா?" என்று முதலில் மகளைப் பற்றிய விசாரிப்பை ஆரம்பித்தார் அவளது அன்னை. "ஆமாம் மா. நான் ஓகேவா இருக்கேன்" என்று அவரிடம் நேர்மறையானப் பதிலைக் கூறினாள் மௌனா. "சரி ம்மா" என்று திருப்தியுடன் கூறியவர், "அப்பறம், நாங்க ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கோம் டா" என்று மகளிடம் சொன்னார் அன்னபூரணி. "ஏன் ம்மா இவ்ளோ சீக்கிரமாகப் கிளம்புறீங்க?" என ஏமாற்றத் தொனியில், தாயிடம் வினவினாள் மௌனா. "ஆமாம் டா. நீங்க ஹனிமூனுக்குப் போகிறதுக்கு முன்னாடியே, கிளப்பிடலாம்னு தான்" என்றார் அன்னபூரணி. "ம்ஹ்ம்! நாங்க இன்னைக்குத் தான், ஹனிமூனுக்கானப் பிரிப்பரேஷனை (ஆயத்தங்கள்) ஸ்டார்ட் பண்ணோம்" என்றாள்...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 34

  அவர்கள் அவ்விடம் விட்டுச் சென்றதும், தங்களது திருமணத்தைப் பற்றிய அறிவிப்பைக் கொடுக்க, வந்து அமர்ந்தனர் கிஷானும், முக்தாவும். அனைவருக்கும் வணக்கம் வைத்தவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்னர்,"உங்க கல்யாணமும் கூடிய விரைவில், நடக்கப் போகுது, அதைப் பத்தி சொல்லுங்க சார்" என்றான் ஒரு பத்திரிக்கையாளன். "யெஸ்!" என்று இருவரும் புன்னகைத்தனர். "முக்தா மேடம்!" என ஆரம்பித்தவரின் மீது கவனம் பதித்தாள். அவளை விடவும் கூரியப் பார்வையைக் கொண்டு இருந்தான் கிஷான். "ம்ம்… சொல்லுங்க சார்" என்று பதில் சொல்லத் தயாரானாள் முக்தா. "நீங்களும், மிஸஸ்.மௌனா மேடமும் ஃப்ரண்ட்ஸ்ஸா?" என்று எடுத்தவுடனேயே இப்படியான கேள்வியை முன் வைத்தான். "ஆமாம். அதான் அவங்களே சொல்லிட்டாங்களே!" என்று சிரித்தாள். "ஆனால், அதுக்கு முன்னாடி, அவங்களைத் தாக்கினதுக்காக, உங்களை ஜெயிலுக்கு அனுப்பி வச்சாங்களே! அதைப் பத்தி சொல்லுங்க" என்று முக்தாவின் வாயைக் கிளறினார்கள். அந்தக் கேள்வியில், கோபத்தில் தன் கை முஷ்டியை மடக்கிக் கொண்டான் கிஷான். "யூ ஆர் கரெக்ட்! நான் அவங்ககிட்ட பிரச்ச...