தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா.
அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன்.
“என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா.
“ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ,
“எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா.
அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன்.
“ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு,
“அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான்.
அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங்களோட காதலை நான் மனதால் உணர்ந்த மாதிரி, உடலாலும் உணரனும். அதுக்கேத்த மாதிரி நானும் என்னோட காதலை உங்களை உணர வைக்கனும்!” என்று கூறித் தன்னவனுடைய விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தாள் மௌனா.
அவளது ஆசையைக் கேட்ட பின்னும் அதை நிறைவேற்றத் தயக்கம் கொள்வானா அவளது ஆருயிர்க் கணவன்.
தன் மனைவியின் ஒவ்வொரு அங்கத்தையும் மெல்ல மெல்ல முத்தமிட்டுக் கொண்டே முன்னேறிச் செல்லத் தொடங்கியவனது காதலில் முக்குளித்து மோட்சம் பெறலானாள் மௌனா.
அவர்களது இல்லற வாழ்வு இன்பமயமாகத் திகழட்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோமாக!
சுபம்
இந்தக் கதையின் பாகம் மூன்றில் அகதாவின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களைப் பற்றிப் பார்க்கலாம் ஃப்ரண்ட்ஸ். ஆனால் அந்தக் கதை வருவதற்குக் கொஞ்சம் தாமதம் ஆகலாம். நன்றி.

கருத்துகள்
கருத்துரையிடுக