முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நங்கையின் மறவோன் - 17

  "உன்னோட அப்ளிகேஷன் ஃபார்மில் இருந்து எடுத்தேன்" என்று அலட்டிக் கொள்ளாமல் கூறினான் மஹதன்.  "இது தப்புன்னு தெரியலையா சார்?" என்று அவனுக்குக் குறையாமல் கேட்டாள் மௌனா.  அவள் வெளிப்படையாக இப்படி கேட்டதும், சிறிய அமைதிக்குப் பிறகு,  "தப்பு தான் மௌனா! ஆனால் நான் உங்கிட்ட கேட்ட அப்போவே நீ பேச வந்திருக்கலாம் தான?" என்று அவளையே குற்றம் சொன்னான் மஹதன்.  "இது என்ன பேச்சு சார்? நான் ஏன் நீங்க கூப்பிட்ட உடனே வரனும்? மறுப்புத் தெரிவிச்சா, இப்படித் தான் அதிரடியாக, ஊரைக் கண்டுபிடிச்சு , வந்து முன்னாடி நிக்கிறதா?" என்று சலனம் இல்லாமல் கேட்டவளைப் பார்த்து,  " நீ கேட்கிறது சரி தான். நான் உன்னைக் கட்டுப்படுத்தி என்கிட்ட பணிய வைக்க முயற்சி செய்யலை மௌனா. என்னோட காதலைச் சொன்னேன். இந்தக் கேள்வியை நீ கேட்டதுமே உனக்கு இதில் விருப்பம் இல்லைன்னு புரிஞ்சது" என்றான்.  "உங்க காதலைச் சொன்னது தப்பில்லை சார். ஆனால், என்னோட ப்ரைவசியில் ரொம்ப தலையிட்றீங்க! நான் இங்கே வந்ததே மனசுக்கு அமைதியைத் தேடித் தான்! ஆனால் உங்க கூட நான் பேசியே ஆகனும்னு, என்னைத் தேடி இங்கே வரைக்...

நங்கையின் மறவோன் 16

  மதியம் ஆகாரம் வயிறை நிறைத்திருக்க, முக்தாவோ,  "ரொம்ப தாங்க்ஸ் ஆன்ட்டி. சோ ஸ்வீட் நீங்க!" என்று கௌசல்யாவின் கையைப் பற்றி நன்றி தெரிவித்தாள்.  "இருக்கட்டும் முக்தா. நான் கேட்டதும் நீ இங்கே வந்து சாப்பிட, சம்மதிச்சதுக்கு தாங்க்ஸ்" என்று பரிசாக சிலவற்றைக் கொடுத்து அவளை வழியனுப்பினார் கௌசல்யா.  அதற்குப் பிறகு தான் தன் செல்பேசியையே பார்வையிட்டார்.  அதில் மஹதனின் பயணத்தைப் பற்றி தெரிந்ததும்,  'அப்படியென்ன முக்கியமான வேலை? ட்ரெஸ்ஸைக் கூட வீட்டுக்கு வந்து எடுத்துட்டுப் போகாமல், கிளம்பி இருக்கான்!' என்று அவனுடைய அலுவலக காரியதரிசிக்குக் கால் செய்து கேட்டார்.  "ரொம்ப முக்கியமான வேலைன்னு மட்டும் தான் சொன்னார் மேடம். அதையும் ஃபோன் செய்து தான் இன்ஃபார்ம் பண்ணினார்" என்று கூறவும், அழைப்பைத் துண்டித்தவர்,  "இது ஆஃபீஸ் விஷயமாகப் போன மாதிரி தெரியலையே? மஹதன் அம்மாகிட்ட எதை மறைக்கிற?"  என்று யோசித்துக் கொண்டே , மகனுக்கு அழைத்தார் கௌசல்யா.  "ஹலோ அம்மா!" என்று எப்போதும் போல பேசிய மகனிடம்,  "மஹதா! மெசேஜ் மட்டும் அனுப்பிட்டு, எங்கே போயிருக்க? என்...

நங்கையின் மறவோன் - 15

  அலுவலகத்தில், மதிய உணவு நேரத்தில் , தன் உடையில் இருந்த சுருக்கத்தைச் சரி பண்ணி விட்டு, கிஷானைப் பார்க்கப் போனாள் மௌனா.  அப்போது தான் அவனும் உணவை முடித்திருந்தான்.  "மே ஐ கமின் சார்?" என்று அனுமதி வேண்டி நின்றாள்.  "யெஸ் வாங்க" அனுமதியளித்ததும் உள்ளே வந்தாள்.  மஹதனைப் பற்றி குறை கூறப் போகிறாளோ? என்று எதிர்பார்த்தான்.  "சார்! எனக்கு த்ரீ டேய்ஸ் லீவ் வேணும்" என்று தயக்கத்துடன் கேட்டாள்.  "லீவ் ஆ?" என்று வினவினான்.  "ஆமாம் சார். இந்த ஊருக்கு வந்து ரொம்ப நாளாச்சு. வீட்டுக்குப் போகவே இல்லை. அப்பா, அம்மாவைப் பார்க்கனும்னு தோணுது. உங்ககிட்ட நேரடியாக விஷயத்தைச் சொல்லி கேட்கனும்னு வந்தேன்" என்று உண்மையான காரணத்தைக் கூறியே விடுப்புக் கேட்டாள்.  "வேலைக்கு வந்தே கொஞ்ச நாட்கள் தான் ஆகுது மிஸ். மௌனா"  அவன் இதைத் தான் கூறுவான் என தெரிந்து வைத்திருந்ததால் , அமைதியாக நின்றாள். ஆவலுடன் வந்தவளை , ஏமாற்ற விரும்பாமல்,  "லீவ் தர்றேன் மௌனா.ஆனால் ஒரு கண்டிஷன்! அடுத்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தவிர உங்களுக்கு வேறெந்த லீவ்வும் கிடையாது. இதுக்கு ஓக...

நங்கையின் மறவோன் 14

  "நீ வேலைப் பார்க்கிற இடத்தில் இருந்து பேசுறது முறை இல்லை. அதனால், வேலை முடிஞ்சு, வீட்டுக்குப் போய், ரெடி ஆகிட்டு வா. உன் கூட பேச வேண்டியது இருக்கு" என்று ஒரு உணவகத்தின் பெயரையும் கூறினான் மஹதன்.  சுதாரித்த மௌனா, "எங்கிட்ட நீங்க பேச என்ன இருக்கு சார்?" என்று அவன் தன்னிடம் தனியாக சந்தித்துப் பேச என்ன இருக்கப் போகிறது? அதை ஏன் இப்பொழுதே பேச மறுக்கிறான்? என்று நினைத்தாள்.  "இது ரொம்பவே பர்சனல் மௌனா. இங்கே பேசினால், உன் வேலை பாதிக்கும். அதான்" என்று அலட்டிக் கொள்ளாமல் கூறியவனைப் பிரம்மிப்பாகப் பார்த்தாள்.  "பர்சனலா? முக்தா மேடம் விஷயமா சார்?"  "ஏன் அதை தவிர வேறெதுவும் பேச எனக்கு வராதுன்னு நினைச்சுட்டியா?"  விழிகள் இடுங்க அவளிடம் கேட்டான் மஹதன்.  "வேற என்ன பேசப் போறீங்க?" என்று தவித்துப் போய்க் கேட்டாள் மௌனா.  "கண்டிப்பாக இருக்கு. அதுக்குத் தான் கேட்கிறேன்" என்று விடுவதாக இல்லை என்பது போல, பார்த்தான்.  "சார்! விஷயத்தை இங்கேயே சொல்லுங்க. இல்லைன்னா என்னை வேலையைப் பார்க்க விடுங்க. இப்படி வந்து நின்னுட்டு, பேசிட்டு இ...