முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நங்கையின் மறவோன் - 15

 


அலுவலகத்தில், மதிய உணவு நேரத்தில் , தன் உடையில் இருந்த சுருக்கத்தைச் சரி பண்ணி விட்டு, கிஷானைப் பார்க்கப் போனாள் மௌனா. 


அப்போது தான் அவனும் உணவை முடித்திருந்தான். 


"மே ஐ கமின் சார்?" என்று அனுமதி வேண்டி நின்றாள். 


"யெஸ் வாங்க" அனுமதியளித்ததும் உள்ளே வந்தாள். 


மஹதனைப் பற்றி குறை கூறப் போகிறாளோ? என்று எதிர்பார்த்தான். 


"சார்! எனக்கு த்ரீ டேய்ஸ் லீவ் வேணும்" என்று தயக்கத்துடன் கேட்டாள். 


"லீவ் ஆ?" என்று வினவினான். 


"ஆமாம் சார். இந்த ஊருக்கு வந்து ரொம்ப நாளாச்சு. வீட்டுக்குப் போகவே இல்லை. அப்பா, அம்மாவைப் பார்க்கனும்னு தோணுது. உங்ககிட்ட நேரடியாக விஷயத்தைச் சொல்லி கேட்கனும்னு வந்தேன்" என்று உண்மையான காரணத்தைக் கூறியே விடுப்புக் கேட்டாள். 


"வேலைக்கு வந்தே கொஞ்ச நாட்கள் தான் ஆகுது மிஸ். மௌனா" 


அவன் இதைத் தான் கூறுவான் என தெரிந்து வைத்திருந்ததால் , அமைதியாக நின்றாள்.


ஆவலுடன் வந்தவளை , ஏமாற்ற விரும்பாமல், 


"லீவ் தர்றேன் மௌனா.ஆனால் ஒரு கண்டிஷன்! அடுத்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தவிர உங்களுக்கு வேறெந்த லீவ்வும் கிடையாது. இதுக்கு ஓகே சொன்னால், எனக்கும் நீங்க லீவ் எடுக்கிறதுல எந்த அப்ஜெக்ஷனும் இல்லை" என்று கேட்டான். 


ஊருக்குப் போக வேண்டும் என்ற ஆசையைக் கை விட முடியாதவளோ, 


"ஷ்யூர் சார். நான் நெக்ஸ்ட் மன்த் எந்த லீவ்வும் எடுக்க மாட்டேன்" என்று சம்மதித்தாள் மௌனா. 


" அப்போ லீவ் லெட்டரில் தெளிவாக காரணத்தை எழுதிக் கொண்டு வாங்க " என்று முடித்துக் கொண்டான். 


"தாங்க்யூ சார்" 


கடிதத்தை எழுதி அவனிடம் ஒப்படைத்து விட்டு, குதூகலமாக மாலை வீட்டிற்குச் சென்றாள். 


நீள்சாய்விருக்கையில் நலிந்த தோற்றத்துடன் அமர்ந்திருக்கும் தோழியை உற்சாகப்படுத்த முயற்சித்தாள் மௌனா. 


"அகி!! எனக்கு த்ரீ டேய்ஸ் லீவ் கிடைச்சிருக்கு. இன்னைக்கு நைட் கிளம்பினால், நாளைக்கு மார்னிங் போய் சேர்ந்திடலாம்"


 அகதா இருக்கும் மனநிலையில் மஹதன் தன்னிடம் நடந்து கொண்டதைக் கூற வேண்டாம் என்று மனதில் புதைத்து விட்டாள் மௌனா. 


இரவு ஊருக்குப் போகப் போவதால், இப்போதே தன் உடைமைகளையும், அகதாவின் உடைமைகளையும் பையில் எடுத்து வைத்தாள். 


"ஏழு மணிக்குப் பஸ் இருக்கு அகதா.சாப்பாடு இங்கேயே முடிச்சுட்டுப் போகலாம். வழியில் பசிச்சா லைட்டா எதாவது வாங்கிச் சாப்பிடலாம்" 


என்று திட்டங்கள் போட்டவள், மஹதனின் மிரட்டலை மறந்திருந்தாள். 


தன்னைத் தனியாக சந்தித்துப் பேச மஹதன் தேர்ந்தெடுக்கப் போகும், நேரமும், இடமும் தெரிந்தால் மௌனா சுதாகரித்து இருந்திருப்பாளோ? 


தன் பெற்றோருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போவதை நினைத்து கனவு கண்டு கொண்டிருப்பவளுக்கு, அதை விட பெரிய சர்ப்ரைஸ் தனக்காக மஹதன் தயார் செய்யப் போகிறான் என்று அறியாதவள், அகதாவுடன் தன் சொந்த ஊருக்குப் பயணமானாள் மௌனா. 


"நாளைக்கு ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு வந்திடு முக்தா. லன்ச் - உம் இங்கே தான். நாம் நிறையப் பேசனும்" என்று 

முக்தாவிடம் செல்பேசியில் கூறிக் கொண்டிருந்தார் கௌசல்யா. 


மறுநாள் உணவிற்கு முக்தா வரப் போகிறாள் என்று மஹதனுக்கும் தெரியும். தாயின் ஆசையை ஏன் தடுக்க வேண்டும் என்று காலை விரைவாக எழுந்து அலுவலகம் செல்ல முடிவெடுத்தான். 


தன் பிடிவாதத்தை விட்டு, அடையாளத்தைத் தேடிச் செல்ல விரும்பும் பெண்ணிற்கு முன்னால் போய் நின்று அவளது ஏமாற்றத்தை ஞாபகப்படுத்த வேண்டாம் அது மட்டுமின்றி, அவளும், தானும் சங்கடமான சூழலில் நிற்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவு. 


"முக்தாவை நான் இங்கே வர சொல்லி இன்வைட் பண்ணியிருக்கிறேன் மஹதா. நீயும் எங்களோட லன்ச்க்கு ஜாயின் பண்றியா?" என்று கேட்டார் கௌசல்யா. 


" இல்லை அம்மா. எனக்கு வேலை அதிகம் " என மறுத்து விட்டான். 


இரவு ஏழு மணியளவில், 


"அப்பாடா! சீட் கிடைச்சிருச்சு. பஸ்ஸில் கூட்டமே இல்லைல அகி?" 


ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தாள் மௌனா. 


"ஆமாம் மௌனா. ஃப்ரீயா இருக்கு"


என சாய்ந்து அமர்ந்து கொண்டாள் அகதா. 


"இந்த மூன்று நாட்களும் சந்தோஷமாக இருக்கனும் நீ" 


மௌனாவிற்குப் பெற்றோரைப் பார்க்கப் போகும் உற்சாகம் மட்டுமே இருக்க, மஹதனின் மிரட்டலை அசட்டையாக ஒதுக்கி விட்டாள். 


மூன்று நாட்கள் இங்கே இருக்கப் போவதில்லையே? தன் சொந்த ஊருக்குப் போகிறோம்! அது தெரிந்தாலும் அவன் அங்கே வந்து பிரச்சினை செய்யும் அளவிற்கு எல்லாம் போக மாட்டான் என மஹதனைத் தவறாக கணித்து விட்டிருந்தாள் மௌனா. 


அந்த மூன்று நாட்களுக்குள் மஹதனால் என்ன செய்ய முடியும், முடியாது என்பதை ஆணித்தரமாக அவளுக்கு உரைக்க வைக்கப் போகிறான் என்பது தெரிந்திருந்தால், ஊருக்குப் போவதை தள்ளிப் போட்டிருப்பாளோ, என்னவோ! 


அவர்களைச் சுமந்து கொண்டு, பேருந்து மௌனாவின் ஊருக்குச் செல்ல தொடங்கியது.


 தன் அறையில் யோசித்துக் கொண்டிருந்த மஹதனுக்கு, வெகு நாட்களாக தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி தொல்லை செய்த பெண் இப்போது முழுவதுமாக அந்த எண்ணத்தைக் கை விட்டிருக்கிறாள் 


அவளுக்கும், தனக்கும் இடையே மௌனா வந்திருக்கிறாள் என்று நினைத்திருக்க, அவளுக்கும், மஹதனுக்கும் இடையில் தான் முக்தா வந்திருக்கிறாள் என்பது தாமதமாகத் தான் புரிந்தது மஹதனுக்கு. 


 தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு ஒதுங்கி இருப்பவளைச் சீண்டி, சோதனை செய்து பார்க்கத் தான் முதலில் மஹதனுக்குத் தோன்றியது. 


ஆனால், கிஷான் கொடுத்த உபதேசத்தில், மௌனாவைச் சோதனை செய்து பார்க்க நான் யார்? அது முறையும் இல்லை.


 அப்படி நடந்திருந்தால், மௌனா வாழ்நாள் முழுவதும் தன்னை வெறுத்திருப்பாள். ஒருமுறை கூட அவளது புறத்தோற்றத்தில், மஹதனுடைய கவனம் பதியவில்லை. 


மஹதன் ஒன்றும் முக்தாவை புற அலங்காரத்தைப் பார்த்து, பிடிக்காமல், மறுக்கவில்லை. 

உண்மையிலேயே அவள் மேல் தனக்கு எந்த காதல் உணர்வும் இல்லை என்பதால் தான் மறுத்தான்.


அடுத்த சந்திப்பில் , மௌனாவின் மேலுள்ள காதலை அவளுக்கு உணர்த்தி விட எண்ணினான் மஹதன். 


ஆனால், வகை தொகை இல்லாமல், தன்னைப் பார்க்கும் போதெல்லாம், தனக்கு இணையாக பேசி, கழுவி ஊற்றும் பெண்ணிற்குத் தன் மேல் காதல் மலருமா? என்பதை மஹதன் யோசித்திருக்க வேண்டும்!  


அன்றைய இரவே, மௌனா ஊருக்குக் கிளம்பி விட்டாள் என்பது அவனுக்குத் தெரியாது அல்லவா? 


அதனால், முக்தா வீட்டிற்கு வரும் நேரத்திற்கு முன்னர், கிஷானுடைய விடுதிக்கு விரைந்தான் மஹதன். 


வரவேற்பில் மௌனாவைக் காணவில்லை ஆதலால், கிஷானுக்குச் செல்பேசியில் அழைத்தான். 


"ஹாய் கிஷான்! மௌனா இன்னும் வேலைக்கு வரலையா?" என்று விசாரித்தான். 


தான் அவ்வளவு சொல்லியும் இவன் அடங்க மாட்டான் போலும்! 


"அவங்க மூன்று நாட்கள் லீவ் எழுத்து இருக்காங்க மஹத்" என்று பொறுமையாக கூறினான். 


"வாட்!! லீவ் ஆ? ஏன்? மௌனாவுக்கு என்னாச்சு?" என்று பதறியபடியே கிஷானின் அறைக்குச் சென்றான். 


செல்பேசியை அணைத்து விட்டு, 

"சொல்லு கிஷான்?" என்று நண்பனின் முகம் பார்த்தான். 


"அவங்க ஊருக்குப் போறாங்களாம் மஹத். சோ, லீவ் எடுத்துக்கிட்டாங்க" என்று பதிலளித்தான். 


"எந்த ஊருன்னு கேட்டியா?" 


ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு கேட்டான் மஹதன். 


"கேட்கலை மஹத்" என்று நண்பன் கூறிவிட, 


"நான் வர்றேன் கிஷான்" என உடனடியாக அங்கிருந்து வெளியேறினான். 


'இவன் மௌனாவோட ஊரைக் கண்டுபிடிச்சு அங்கேயே போய்ப் பார்த்துடுவானோ?' மஹதன் அதைச் செய்யக் கூடியவன் தானே! 


மீண்டும் கதவைத் திறந்து கொண்டு வந்தவன், 

"முக்தாவை இன்னைக்கு எங்க வீட்டுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் அண்ட் லன்ச்சுக்கு அம்மா இன்வைட் பண்ணியிருக்காங்க" என்ற செய்தியைத் தெரிவித்து விட்டு, கிளம்பினான் மஹதன். 


அவனுடைய வீட்டிலிருந்து முக்தா செல்லும் வழியில், அவளைச் சந்தித்துப் பேசி, தன் காதலை மறுமுறை தெரிவிக்கலாமா? என்று கூட யோசித்தான் கிஷான்.


மஹதனுக்கு நன்றி தெரிவித்துக் குறுஞ்செய்தி அனுப்பினான். 


"உட்கார் முக்தா" என்று அவளை டைனிங் டேபிளில் அமர்த்தினார் கௌசல்யா. 


இத்தனை நாட்களாக தன்னிடம் அன்பு காட்டியவர்களை எல்லாம், அடிமைப்படுத்தப் பார்க்கிறார்கள் என்று அவர்களைக் கிட்டே நெருங்க விட்டதில்லை முக்தா. இப்போது தான், உண்மையான அன்பு காட்டுபவர்களை இனம் கண்டு கொண்டாள். 


"இன்னைக்கு நீ ரொம்ப அழகாக இருக்க முக்தா" என்றவாறு உணவைப் பரிமாறினார்.


"தாங்க்ஸ் ஆன்ட்டி" 


மென் புன்னகையுடன் நன்றி கூறியவளை, வாஞ்சையுடன் பார்த்தார் கௌசல்யா. 


அவளருகில் அமர்ந்தவர், 

"அப்போ அப்போ இங்கே வந்து போகனும் முக்தா. லன்ச்சுக்கு உனக்குப் பிடிச்சதை செய்யனும். என்ன வேணும்?" என்று மதிய உணவைத் தயார் செய்வதற்காக அவளது விருப்பத்தைக் கேட்டார். 


"எனக்கு நான்வெஜ் சாப்பிடனும். அதுவும் உங்க கையால் சாப்பிடனும் ஆன்ட்டி" பலநாள் ஆசை போல கேட்டவளிடம், 


"செஞ்சிட்டாப் போச்சு முக்தா. சிக்கன், மட்டன் அப்பறம் நண்டு செய்றேன்" என்று குறிப்பெடுத்துக் கொண்டார் கௌசல்யா. 


"ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க ஆன்ட்டி.எதாவது ஒரு டிஷ் போதும்" என்று அவரிடம் கூறினாள். 


"அட ! அதெல்லாம் கஷ்டம் இல்லைம்மா" என்று அவள் காலை உணவை முடித்தவுடன், டைனிங் டேபிளிலேயே அமர்ந்து, அவளுடன் பேசலானார். 


தாயுடன் பேசியது ஞாபகம் இல்லாததால், முக்தா இன்று கௌசல்யாவுடன் மணிக்கணக்கில் பேசினாள். 


அவரும் முக்தாவை முகம் வாட செய்து விடாமல், மகன் சம்பந்தப்பட்ட பேச்சை எடுக்காமல், பொதுவான விஷயங்களை மட்டும் பேசினார்.அதுவே நிம்மதியாக இருந்தது முக்தாவிற்கு. 


"அகி! வீட்டுக்கு வந்தாச்சு" என்று உற்சாகத்துடன் அவளைத் தன் வீட்டிற்கு வரவேற்றாள் மௌனா. 


காய்கறி வாங்கப் போயிருந்த அன்னபூரணி, திடீரென்று மகள் தன் வீட்டின் முன் வந்து நிற்பதைப் பார்த்ததும், ஆனந்தமாக அதிர்ந்தார்.


"ஹேய் மௌனா!" என்று கூடையை கீழே வைத்து விட்டு மகளை அணைத்துக் கொண்டார் அன்னபூரணி. 


அந்த அணைப்பில் தாயின் தவிப்பை உணர்ந்திருந்த மௌனா, அவர் விலகும் வரை காத்திருந்தாள். 


இதை அமைதியான புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அகதா. 


மகளிடமிருந்து விலகிய அன்னபூரணி, 

"அகதா ம்மா ! வாடா ! " என்று அவளையும் அணைத்து விடுவித்தார். 


அதில் வெளிவந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள். 


"வாங்க உள்ளே போகலாம்" என்று சாவி கொண்டு கதவைத் திறந்தார். 


"அப்பா எங்கே அம்மா?" என்று மௌனா தந்தையைத் தேடினாள். 


அவர் சலூன் கடைக்குப் போயிருக்கார் மா. கால் செய்து வர சொல்றேன்" என்று கணவனை செல்பேசியில் அழைத்து வீட்டிற்கு வரச் சொன்னார். 


மௌனாவும், அகதாவும் குளித்து வருவதற்குள், சிவமணி வீட்டிற்கு வந்து விட்டார். 


"உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! " என்று அன்னபூரணி சொல்லிக் கொண்டிருக்கும் போது, மௌனா வெளிப்பட்டாள். 


"செல்லம்!" என்று மகளை ஆரத் தழுவிக் கொண்டார் சிவமணி. 


மகளின் வரவு அவரை நெகிழ வைத்திருந்தது. தலையை வருடிக் கொடுத்து விட்டு, "அகதா! நல்லா இருக்கியாம்மா?" என்று அவளிடமும் பேசினார். 


"இப்போ தான் வீட்டுக்கு உயிர்ப்பு வருது. அன்னம்! சிக்கன் எடுத்துட்டு வர்றேன். பிள்ளைகளுக்குச் சமைச்சிடலாம்" என்று கறிக்கடைக்குப் போனார். 


காலை உணவு முடித்து, மகளுடனும், அகதாவுடனும் பேசிக் கொண்டே, மதியத்திற்குச் சிக்கன் சமைக்க மற்ற காய்கறிகளை வெட்டினார். 


"வேலையெல்லாம் எப்படிப் போகுது ரெண்டு பேருக்கும்?" 


"எனக்குக் கம்ப்யூட்டரில் வேலைன்றதால், கண்ணுப் போற நிலையில் இருக்கேன் மா " என்று அகதா கலகலத்தாள். 


"எனக்கு கால் வலி வந்துடும் அம்மா" என்று மௌனாவும் தன் வேலையைப் பற்றி கூறினாள். 


"அடிப்பாவிகளா! ஒருத்தராவது சூப்பரா போகுது, நல்லா போகுதுன்னு சொல்றீங்களா!" என்று செல்லமாக கண்டித்தார் அன்னபூரணி. 


"நானும் வந்துட்டேன்" சிவமணியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். 


அன்னபூரணியை மட்டும் தனியே சமைக்க விடாமல், நால்வரும் சேர்ந்து சமைத்தனர்.


தாயை அழைத்து அகதாவின் மனதில் நீங்காமல் இருக்கும், கஷ்டத்தைக் கூறினாள் மௌனா. அவளை எப்படியாவது பழையபடி மாற்றி, தன்னுடன் ஊருக்கு அனுப்பி வைக்குமாறு அவரிடம் விண்ணப்பித்தாள். 


அதேபோல, அவரும், சிவமணியும் நடந்து கொண்டனர். 


"எந்த ஊருக்குப் போய் இருப்பா?" என்று யோசித்தான் மஹதன். 


கிஷானிடம் கேட்டு பயனில்லை. தானே கண்டுபிடிக்க நினைத்து, அவனது விடுதிக்கு மௌனா அனுப்பிய, விண்ணப் படிவத்தில் அவளது ஊரை கண்டு கொண்டான். 


வீட்டிற்குப் போய் உடைகளை எடுத்துக் கொள்ள நேரமில்லை. அதனால் செல்லும் வழியிலேயே அந்த ஊரிலிருக்கும் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்தான் மஹதன். 


உடைகள் மற்றும் மற்ற பொருட்களை வழியில் கடையில் வாங்கிக் கொள்ளலாம் என்று கௌசல்யாவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, காரில் அதிவேகமாக சென்றான் மௌனாவின் ஊரை நோக்கி!!! 


                                   - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...