முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிருதனின் பூவிழியே - 23

  சிறிது நேரத்தில் தங்களது வீட்டை அடைந்ததும் உள்ளே சென்றனர் நஞ்சுண்டன், திருவாதிரன் மற்றும் பூவிழி.  அவர்களை வரவேற்று சாப்பாட்டு மேசைக்கு அமர வைத்தார் ராஜகுமாரி.  அப்போது தாங்களும் உணவருந்த வந்து உட்கார்ந்தனர் அறிவொளி மற்றும் செந்தாழை.  அவர்கள் அனைவருக்கும் தட்டுக்களை வைத்து அவற்றில் உணவைப் பரிமாறினார்கள் வேலையாட்கள்.  “ஆஸ்பத்திரியில் டாக்டரு என்னச் சொன்னாங்க? குழந்தையோட ஆரோக்கியம் எப்படி இருக்காம்?”எனத் தன் மூத்த மகன் மற்றும் மருமகளிடமும் வினவினார் நஞ்சுண்டன்.  உடனே,”குழந்தை ரொம்ப ஆரோக்கியமாக இருக்காம் மாமா! ஆனால் என்னைத் தான் ஓய்வு எடுக்கச் சொல்லி இருக்காங்க. அதிகமாக வேலை பார்க்கக் கூடாதுன்னுச் சொல்லி இருக்காங்க. நல்லா சத்தானதாகச் சாப்பிடச் சொல்லி இருக்காங்க!”என்று அவரிடம் விளக்கமாக கூறினாள் செந்தாழை.  அதைக் கேட்டதும்,”ம்ஹ்ம். சரித்தா. அவங்க சொன்னதை எல்லாம் தவறாமல் செய்”என்றவரோ,  “நீ உம்பொண்டாட்டிக்கு என்னத் தேவை இருந்தாலும் அதைச் செஞ்சிக் கொடு”என்று மூத்த மகனுக்கு வலியுறுத்தினார் நஞ்சுண்டன்.  அவரோ அந்தப் பேச்சு வார்த்தையை அத்துடன் முடித்து...