முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிருதனின் பூவிழியே - 37

  இதற்கு முந்தைய இரண்டு அத்தியாயங்களுக்குக் கொடுத்த அதே டிஸ்கிளைமர் தான் நண்பர்களே!!!🙏 அதைக் கவனித்து விட்டு அவரைக் கூர்மையான விழிகளால் துளைத்து எடுத்து,”என்னப்பா பதிலையே காணோம்?”என்று தந்தையிடம் கேட்டிருந்தான் திருவாதிரன்.  அதில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு,”ஆங்! அவங்களை இன்னும் கண்டுபிடிக்க முடியலை! நீயும் உன் பக்கத்தில் இருந்து விசாரிச்சுப் பாரு!”என அவனிடம் கூறவும்,  “ம்ஹ்ம். கண்டிப்பாக விசாரிச்சுப் பார்த்துட்றேன்ப்பா!”என்று அவருக்கு உறுதி அளித்தான் திருவாதிரன்.  இங்கே வீட்டிலோ செந்தாழைக்கு இருப்புக் கொள்ளவே இல்லை!  அதேபோல் முன்பு மாதிரி அந்த வீட்டின் மூத்த மருமகள் என்றச் செருக்குடன் நடமாடவும் முடியவில்லை அவளால்!  ஏனெனில் அந்த அளவிற்கு அவளை மசக்கைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது.  அதேபோல் அவளது கணவனா அறிவொளியும் அவளிடம் அனுசரணையாகத் தான் நடந்து கொற்கிறான், அவளை விட்டு இங்குமங்கும் விலகாமல் அவளைத் தன் கண்ணுக்குள் வைத்துக் காத்துக் கொண்டு இருக்கிறான் தான்!  ஆனாலும் கூட அவளது மனம் தனது தாயின் இருப்பைத் தேடியது எனலாம்!  அவர் இந்நேரம் உயிருட...

நிருதனின் பூவிழியே - 36

  “இது ரொம்ப நல்ல யோசனையாக இருக்கே சாமு! நாம முதல்ல இவகிட்ட போய்ப் பேசுவோம் வாங்க”என்றிருந்தாள் வாடாமல்லி.  “அடியேய்!”என அவர்களைத் தடுத்து நிறுத்திய மரிக்கொழுந்துவிடம்,  “அக்கா! நீ இனிமேல் எங்களைக் கட்டுப்படுத்த நினைக்காதே! நாங்க இதில் உறுதியாக இருக்கோம்”என அவளிடம் உறுதியாக கூறி விட்டுத் தாங்கள் இருவரும் பூவிழியிடம் சென்றார்கள் அவ்விருவரும்.  அவர்கள் இப்படி திடுமென தன் முன்னால் வந்து நிற்பதைக் கண்டுத் திகைத்தாலும் கூட,”என்ன ஆச்சு?”என அவர்களிடம் விசாரித்தாள்.  “நாங்க உங்க கிட்ட உதவிக் கேட்டு வந்திருக்கோம்”என்று அவளிடம் தெரிவித்தாள் சாமந்தி.  அதில் குழப்பம் அடைந்து,”உதவியா? அதுவும் எங்கிட்டயா?”எனக் கேட்டிருந்தாள் பூவிழி.  “ஆமாம். இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சின்னய்யா எங்க கிட்ட ஒரு விஷயத்தைப் பத்தி விசாரிச்சாரே?”என்று அவளிடம் வினவினாள் வாடாமல்லி.  “ஆமாம். அந்த மூனு பேரைப் பத்தின விஷயம் தானே?”என்றாள்.  “ம்ஹ்ம். அவங்களைப் பத்தின விவரங்களை நாங்க சின்னய்யா கிட்டே சொல்லனும்னு முடிவெடுத்து இருக்கோம். அதுக்கு முதல்ல அதைப் பத்தி நாங்க உங்க கிட்ட உ...

நிருதனின் பூவிழியே - 35

  அதே சமயத்தில் தன் தமக்கையும், அவளது கணவனும் மிகவும் சந்தோஷமாகவும், நிறைவாகவும் மற்றும் அன்னியோன்யமாகவும் வலம் வருவதை தனது கண்களால் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்?  இவர்கள் இருவரும் எங்கே சென்றாலும் ஜோடியாகச் செல்வதையும், இவர்களை விடச் சிறியவளானத், தான் மட்டும் இப்படி அவசரமாக கர்ப்பம் தரித்து விட்டு இப்படியான மகிழ்வான தருணங்களை அனுபவிக்கத் தவறி விட்டோமோ என்று வெகு தாமதமாகத் தனது தவற்றைப் புரிந்து கொண்டு இப்போது அதை எண்ணித் தினம், தினம் வருந்திக் கொண்டிருக்கிறாள் செந்தாழை.  இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் தனது மனநிலை தான் மிகவும் மோசமாகி விடும் என்ற அச்சம் உருவாகி விடவும் தான் இதைப் பற்றி வேறு விதமாக கணவனிடம் சொல்லித் தனிக் குடித்தனம் செல்ல அடி போட்டிருந்தாள்.  ஆனால் அவனோ தனக்காக எதையும் செய்யத் துணிந்தவன் என்றாலும் கூட இந்த விஷயத்தில் கிணத்தில் போட்டக் கல்லைப் போல் அசைந்து கொடுக்காமல் இருக்கிறானே என்ற வருத்தம் உண்டானது செந்தாழைக்கு.  இதெல்லாம் அவளது மனமும், உடலும் வெகுவாகப் பாதிக்கத் தொடங்கி விட்டிருந்தது எனலாம்!  இதே நேரத்தில் தங்களது ஜீப்பில்...

நிருதனின் பூவிழியே - 34

  டிஸ்கிளைமர் : கூடல் காட்சிகள் அதிகம் இருக்கும் நண்பர்களே 🙏 தன் கணவனின் ஒவ்வொரு முத்தத்திற்கும், தீண்டலுக்கும் உருகிக் கரைந்து போய்க் கொண்டிருந்தாள் பூவிழி.  அவளை மென்மையாக ஆட்கொண்டு அவளிடமிருந்து தன் மேலான காதல் உணர்வுகளைத் தூண்டி விட்டிருந்தான் திருவாதிரன்.  அதனாலேயே சிறிது, சிறிதாகத் தனது தயக்கத்தை உடைத்துக் கொண்டுத் தானும் அவனுக்கு இணையாக அவனை ஆட்கொள்ளத் தொடங்கி விட்டிருந்தாள் மனைவி.  தனது கழுத்திற்குக் கீழிறங்கிய கணவனின் உதடுகள் தன்னுடைய மோக உணர்வுகளைத் தட்டி எடுப்பி விடவும்,  அவனது சிகையைத் தன் கரங்களுக்குள் சிறைப் பிடித்துக் கொண்டு அவனைத் தன்னை நிமிர்ந்து பார்க்க வைத்து அவனது இதழ்களை வன்மையாகச் சிறை பிடித்துக் கொண்டாள் பூவிழி.  அவளிடம் தனது இதழ்களை மொத்தமாக ஒப்படைத்து விட்டு அவளது இதழ்த் தாகம் முடியும் வரை தனது கரங்களை அவளது உடலெங்கும் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  சிலி நிமிடங்கள் கழித்து அவனது இதழ்களை விடுவித்து விட்டவளை மொத்தமாக அள்ளிக் கொள்ளும் வகையில் தனது அதரங்களை அவளது இடைக்குக் கொண்டு வந்து அங்கே இடைவெளி விடாமல் பல மு...

நிருதனின் பூவிழியே - 33

  டிஸ்கிளைமர் : இந்தப் பதிவிலும், அடுத்தப் பதிவிலும் கூடல் காட்சிகள் இருக்கும். ஆனால் வரம்பு மீறிப் போகாது! அதேபோல் இது என் தரப்பிலிருந்து ஒரு அறிவிப்பு மட்டுமே! இதை வாசிப்பதும், தவிர்ப்பதும் உங்களுடைய தனிப்பட்ட விருப்பம் தான் நண்பர்களே 🖤🙏 புரிதலுக்கு நன்றி🙏💕 அந்த விருந்து நடக்கும் இடமே அந்த வீட்டின் நெருங்கிய சொந்தங்களால் நிரம்பி வழிந்து இருந்தது.  அதைப் பார்த்துப் பூரித்துக் கொண்டாலும் கூடத் தனக்குச் சமதையான இடங்களில் இருந்து மருமகள்களைத் தெரிவு செய்திருந்தால் இன்னும் இதை ஊர் மெச்ச விமரிசையாக நடத்தி இருக்கலாமே என்றப் பொருமலும் உண்டானது தான் ராஜகுமாரிக்கு.  ஆனாலும் சிரித்த முகமாகவே தன்னைக் காட்டிக் கொண்டார்.  அதே சமயம் தன்னிடம் வந்து,”என்னம்மா உன் வயிறு பெருசாகத் தெரியுதே? கர்ப்பமாக இருக்கியோ?”எனச் செந்தழையிடம் ஒரு சிலர் வந்து நேரடியாகவே கேட்டு விடவும்,  அதற்குப் பதிலளிக்கும் மனநிலையில் இல்லாததால்,”இலை போட்டாச்சுப் பாருங்க. நீங்கப் போய் முதல்ல உட்கார்ந்து சாப்பிடுங்க”என்று அவர்களிடம் பட்டென்று கூறவும்,  “ஏத்தத்தைப் பாரு இவளுக்கு!”என்று தங்களுக்குள் முண...