தான் வருவதற்குள் மணப்பெண் புடவையை உடுத்தி விட்டிருந்ததால், முதலில் அவளுக்குத் தனக்குத் தெரிந்த சிறந்த சிகை அலங்காரத்தைச் செய்து விடும் வேலையில் இறங்கினாள் பிரஹாசினி. அவளது கரங்கள் நன்றாகச் சுழன்று தன்னுடைய பணியைச் செய்து கொண்டிருக்க, அதற்கேற்ப மணப்பெண்ணும் நன்றாகவே இசைந்து கொடுக்கவே அந்த அலங்காரம் வெகு விரைவில் முடிந்தது. அதேபோல், முகத்திற்கு அலங்காரம் செய்வதற்கு முன்னர்,”எனக்கு ஒரு சந்தேகம் மேம்” என்றாள் பிரஹாசினி. “என்னன்னு சொல்லுங்க மேம்?” என அவளிடம் வினவினாள் மணப்பெண் யாழினி. “நீங்க அன்னைக்குப் பார்லருக்கு வந்தப்போ மெஹந்திக்கும் சேர்த்து தான் என்கிட்ட பேசுனீங்க, காசும் கொடுத்தீங்க! ஆனால், நான் உங்க நலங்கு ஃபங்ஷன் இல்லைன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு மெஹந்திப் போட்டு விட்டு இருக்கனும். ஆனால், இப்போ மேக்கப் மட்டும் தான் போட்டு விட்றா மாதிரி இருக்கு. அதனால் அதைக் கழிச்சிட்டுக் காசு கொடுங்க” என்று அவளிடம் உரைக்கவும், “ஆமால்ல? சாரி மேம். நான் அதை யோசிக்கவே இல்லை. நீங்க சொன்னா மாதிரியே பண்ணிடலாம்” எனப் பதிலளித்தாள் யாழினி. “ஓகே மேம்” என்றவள்,...
இரவு நேரத்தில் தங்களது கடை வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பினர் விருச்சிகன் மற்றும் உமாராணி. அங்கே ஹால் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்தான் நீரஜ். “என்னடா வேலை முடிஞ்சு சீக்கிரம் வந்துட்ட போலயே?” என்ற தந்தையிடம், “ஆமாம்ப்பா” என்றவன், “சாயந்தரம் வந்ததும் காஃபி போட்டுக் குடிச்சிட்டேன்ம்மா. நைட் சாப்பாட்டை நானே செய்யவா?” எனத் தாயிடம் வினவினான் நீரஜ். உமாராணி,“வேண்டாம்டா” “இருக்கட்டும்மா. நீங்களும், அப்பாவும் காலையில் கடைக்குப் போய் வேலை பார்த்துட்டு இப்போ தான் வர்றீங்க. ரொம்ப சோர்வாக இருப்பீங்க. அதான், நானே செய்றேன்” என்று கூறியவனைப் பார்த்துப் புன்னகைத்த விருச்சிகனோ, “அவன் தான் அவ்ளோ சொல்றானேம்மா. அவனே சமைக்கட்டும்” என மனைவியிடம் சொல்ல, “ம்ம். சரி” எனச் சம்மதம் தெரிவித்தவர், “மதியத்துக்குச் செஞ்ச குழம்பு இருக்கு. நீ சாதம் மட்டும் வச்சா போதும்” என்று மகனுக்கு அறிவுறுத்தினார் உமாராணி. “ஓகேம்மா” என்று கூறி விட்டுச் சமையலறைக்குப் போனான் நீரஜ். அதே சமயம்,”பெரியம்மா கிட்டே கால் பேசிட்டு வரேன்டி” என்று தோழியிட...