முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

காவியம் - 5

தான் வருவதற்குள் மணப்பெண் புடவையை உடுத்தி விட்டிருந்ததால், முதலில் அவளுக்குத் தனக்குத் தெரிந்த சிறந்த சிகை அலங்காரத்தைச் செய்து விடும் வேலையில் இறங்கினாள் பிரஹாசினி.  அவளது கரங்கள் நன்றாகச் சுழன்று தன்னுடைய பணியைச் செய்து கொண்டிருக்க, அதற்கேற்ப மணப்பெண்ணும் நன்றாகவே இசைந்து கொடுக்கவே அந்த அலங்காரம் வெகு விரைவில் முடிந்தது.  அதேபோல், முகத்திற்கு அலங்காரம் செய்வதற்கு முன்னர்,”எனக்கு ஒரு சந்தேகம் மேம்” என்றாள் பிரஹாசினி.  “என்னன்னு சொல்லுங்க மேம்?” என அவளிடம் வினவினாள் மணப்பெண் யாழினி.  “நீங்க அன்னைக்குப் பார்லருக்கு வந்தப்போ மெஹந்திக்கும் சேர்த்து தான் என்கிட்ட பேசுனீங்க, காசும் கொடுத்தீங்க! ஆனால், நான் உங்க நலங்கு ஃபங்ஷன் இல்லைன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு மெஹந்திப் போட்டு விட்டு இருக்கனும். ஆனால், இப்போ மேக்கப் மட்டும் தான் போட்டு விட்றா மாதிரி இருக்கு. அதனால் அதைக் கழிச்சிட்டுக் காசு கொடுங்க” என்று அவளிடம் உரைக்கவும்,  “ஆமால்ல? சாரி மேம். நான் அதை யோசிக்கவே இல்லை. நீங்க சொன்னா மாதிரியே பண்ணிடலாம்” எனப் பதிலளித்தாள் யாழினி.  “ஓகே மேம்” என்றவள்,...
சமீபத்திய இடுகைகள்

காவியம் - 4

  இரவு நேரத்தில் தங்களது கடை வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பினர் விருச்சிகன் மற்றும் உமாராணி.  அங்கே ஹால் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்தான் நீரஜ்.  “என்னடா வேலை முடிஞ்சு சீக்கிரம் வந்துட்ட போலயே?” என்ற தந்தையிடம், “ஆமாம்ப்பா” என்றவன், “சாயந்தரம் வந்ததும் காஃபி போட்டுக் குடிச்சிட்டேன்ம்மா. நைட் சாப்பாட்டை நானே செய்யவா?” எனத் தாயிடம் வினவினான் நீரஜ்.  உமாராணி,“வேண்டாம்டா”  “இருக்கட்டும்மா. நீங்களும், அப்பாவும் காலையில் கடைக்குப் போய் வேலை பார்த்துட்டு இப்போ தான் வர்றீங்க. ரொம்ப சோர்வாக இருப்பீங்க. அதான், நானே செய்றேன்” என்று கூறியவனைப் பார்த்துப் புன்னகைத்த விருச்சிகனோ,  “அவன் தான் அவ்ளோ சொல்றானேம்மா. அவனே சமைக்கட்டும்” என மனைவியிடம் சொல்ல,  “ம்ம். சரி” எனச் சம்மதம் தெரிவித்தவர், “மதியத்துக்குச் செஞ்ச குழம்பு இருக்கு. நீ சாதம் மட்டும் வச்சா போதும்” என்று மகனுக்கு அறிவுறுத்தினார் உமாராணி.  “ஓகேம்மா” என்று கூறி விட்டுச் சமையலறைக்குப் போனான் நீரஜ்.  அதே சமயம்,”பெரியம்மா கிட்டே கால் பேசிட்டு வரேன்டி” என்று தோழியிட...

காவியம் - 3

  தனக்குக் கிடைத்த தவணைப் பணத்தைப் பெரியப்பாவிடம் கொடுத்தாள் பிரஹாசினி.  அதை வாங்கிச் சாமிப் படத்தின் முன்னால் வைத்துப் பிரார்த்தனை செய்து விட்டு,”இதே மாதிரி நீ இன்னும் நிறைய சம்பாதிக்கனும்” என்று அவளிடமே தந்து விட்டார் விருச்சிகன்.  “இந்த ஒரு தடவையாவது இந்தப் பணத்தை நீங்க வச்சுக்கோங்களேன் பெரியப்பா” என்று அவரிடம் கெஞ்சினாள்.  “ஊஹூம், இது உன்னோட உழைப்பினால் வந்தப் பணம். அதனால் உன்கிட்டே இருக்கிறது தான் நியாயம்” என்றவர்,  “நீ மதுரைக்குப் போயிட்டு வந்ததும், பெரியம்மா, நீரஜ் கூடக் கடைக்கு வந்து உனக்குப் பிடிச்ச மாதிரி தீபாவளிக்குத் துணி எடுத்துக்கோ. நிறைய கலெக்ஷன்ஸ் வந்திருக்கு” என்று கூறி விட்டுச் சென்றார் விருச்சிகன்.  அந்தப் பணத்தை வழக்கம் போலத் தன்னுடைய கைப்பையில் பத்திரப்படுத்தி வைத்தாள் பிரஹாசினி.  முழுப் பணம் வந்ததும் அதை அவளது வங்கிக் கணக்கில் போட்டு விடச் சொல்லி விடுவார்கள் வீட்டினர்.  தன் கைப்பேசியில் தோழிக்கு அழைத்து,”ஹலோ வினோ” என்கவும், “ஹாய் பிரஹா, எப்படி இருக்கே?” என்று நலம் விசாரிக்க, “நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” என்றாள் ப...

எபிலாக் - நிருதனின் பூவிழியே!

இரண்டு மாதங்களுக்குப் பிறகு… தன் கைகளில் அணிந்திருக்கும் வளையல்களையும், இரண்டு கன்னங்களிலும் இருந்த சந்தனப் பூச்சுக்களையும் தொட்டுத், தொட்டுப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தாள் செந்தாழை.  அவளுக்கு ஒன்பதாவது மாதம் ஆகி விட்டிருந்ததால் அவளுக்குச் சிறிது நேரத்திற்கு முன்னர் தான் அவளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு அதைச் சிறப்பிக்கும் வகையில் அவளுக்கு வளையல்களை அணிவித்து விட்டிருந்தார்கள் அனைவரும்.  அதேபோல் அவளது அருகிலேயே ஒரு மனையைப் போட்டு அதில் பூவிழியையும் உட்கார வைத்து அடுத்து அவளுக்கு இந்த இனியத் தருணம் நடக்க என்று வேண்டிக் கொண்டு அவளுக்கும் அதற்கான சடங்குகளைச் செய்து முடித்திருந்தனர் அவளது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அந்த விழாவிற்கு வந்திருந்த அனைத்து உறவினர்களும்.  தன் தங்கையைப் போலவே தனக்குச் செய்திருந்த சடங்குகளைப் பார்த்து மிகவும் மனம் நிறைந்து போய் விட்டிருந்தாள் பூவிழி.  அதே சமயத்தில் தங்களது மனைவிமார்களுக்கு நிகராக மகிழ்ச்சியில் திளைத்துப் போயிருந்தார்கள் அறிவொளி மற்றும் திருவாதிரன்.  “அவங்க ரெண்டு பேரோட முகங்களும் எவ்வளவு பூரிச்சுப் போய் இருக்...

காவியம் - 2

  மகனுடைய விருப்பத்தை ஆமோதித்துப் பேசிய கணவனைக் கண்டுத் துணுக்குற்றாலும் அவனுக்குத் தண்ணீரைக் கொண்டு வந்து நீட்ட,  அதை வாங்கிப் பருகியவனிடம்,”நீ சொன்னதோட அர்த்தம் உங்க அப்பாவுக்குப் புரிஞ்சிருச்சு. ஆனால், எனக்கு ஒன்னும் விளங்கலை. என்னன்னு தான் சுத்தி வளைக்காமல் சொல்லுடா” என்றார் சோமசுந்தரி.  “அவருக்குமே என்ன விஷயம்ன்னுத் தெளிவாகத் தெரியாதும்மா” என்று கூறி விட்டுத் தந்தையைப் பார்த்தான் திவ்யன்.  அவரும்,”ஆமாம் சுந்தரி. உனக்குத் தெரியாமல் நாங்க எந்த விஷயமும் பேசி வைக்கலை” எனச் சத்தியம் செய்யாத குறையாக கூறினார் மகுடபதி.  “அப்படின்னா சரி” என்றவரைப் பார்த்து மற்ற இருவரும் புன்னகைத்தனர்.  “நான் போய்க் குளிச்சிட்டு வர்றேன் அம்மா” எனக் குளியலறைக்குப் போய் விட்டான் திவ்யன்.  “இவன் ஏன் இப்படி சொல்லிட்டுப் போறான்ங்க? நான் இதைப் பத்தி ஆரு கிட்டே பேசுறேன்” என்று கூறித் தன் செல்பேசியை எடுக்கப் போக, ”அவன் சொல்லிட்டுப் போய் அஞ்சு நிமிஷம் கூட ஆகலை. அதுக்குள்ளே உன் பொண்ணுகிட்டே அதை ஒப்பிக்கனுமா? சும்மா இரும்மா. அவன் சொல்லும் போது தெரிஞ்சிக்கலாம்” என்று சொல்லிக் கையமர்த்த...