முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 24

  "அப்பா! நான் கிஷானோட வீட்டுக்குப் போய், அத்தை, மாமாவைப் பார்த்துட்டு வர்றேன்" என்று தந்தையிடம் உத்தரவு கேட்டு நின்றாள் முக்தா. "சரி‌ முகி. நானும் மூர்த்தி கூட கல்யாண வேலையைப் பாக்குறேன்" என்று மகளை அனுப்பி விட்டு, நண்பனுடன் சென்று விட்டார் நீலகண்டன். இன்னும் பல முக்கியமான ஆட்களை முறைப்படியாகப், பத்திரிக்கையைக் கொடுத்து, அழைத்து விட்டால் போதும் என்ற எண்ணத்துடன் திருமூர்த்தியும், நீலகண்டனும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டனர். மஹதனும், கிஷானுடன் சேர்ந்து, தன் சகாக்களுக்குப் பத்திரிக்கை வைத்து விட்டான். அந்த வேலையை முடித்தப் பின்னர் தான், முக்தாவைத் தன்‌ வீட்டிற்கு அழைத்திருக்கிறான் கிஷான். "முகி" என்ற வரவேற்புடன் அவளை உள்ளே அனுமதித்தார் சித்ரலேகா. "வணக்கம் அத்தை, மாமா!" என இவளும் கூக்குரலிட்டவள், "ஹாய் கிஷான்" என்று தன்னவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் முக்தா. கிஷான், "வா முகி"  அவளுக்கான உணவையும் தயாராக்கி இருந்தார் சித்ரலேகா. "இப்போதைக்கு, ஜூஸ் மட்டும் போதும் அத்தை" என்று கேட்டு வாங்கிக் குடித்தாள் முக்தா. "அப்பா எப்ப...

நிருதனின் பூவிழியே - 12

  திருவாதிரனைப் பின் தொடர்ந்து வந்திருந்த பூவிழியும் அவரது வார்த்தைகளைக் கேட்டிருந்தாள்.  ஏற்கனவே அவரது மகன் தன்னிடம் கூறிய விஷயத்தின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் கால்கள் தள்ளாடிக் கொண்டு நின்றிருந்தவளுக்கோ அவர் அடித்துக் கூறப் போகும் விஷயத்தைக் கேட்பதற்காகத் தன் மனதை திடப்படுத்திக் கொண்டு அவரைப் பார்க்கவும்,  “அப்படி என்னப் பேசிட்டுப் போனாங்கப்பா?”என்று தந்தையிடம் நிதானமாக வினவினான் திருவாதிரன்.  “அதை நாஞ்சொல்றேன்!”என்று சிறிது நேரத்திற்கு முன்னர் அறிவொளியும், சொந்தாழையும் தங்களிடம் சொல்லி விட்டுச் சென்றதை எல்லாம் அவனிடம் ஒப்புவித்து முடித்திருந்தார் ராஜகுமாரி.  அதைக் கேட்டு அதிர்ச்சி தாளாமல் தனது கால்கள் தள்ளாடிப் போய்க் கீழு உட்கார்ந்து விட்டிருந்தாள் பூவிழி.  அதைக் கவனித்து விட்டு, அவளிடம் சென்று, அவள் எழுவதற்கு உதவிக்கரம் நீட்டினான் திருவாதிரன்.  அதைக் கூட அவளால் அவதானிக்க முடியவில்லை! அதனாலேயே தானே முன் வந்து அவளது கையைப் பற்றி எழுப்பி விட்டு,”நீ உள்ளே போ”என்று அறிவுறுத்த,  அவனது தொடுகையில் தீப்பற்றியதைப் போல் உணர்வு எழவும் அவனிடமிருந்...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 23

  தீபக்கின் தாய் லலிதாவின், பெருங்குற்றத்திற்கான தண்டனைக் காலம் ஆரம்பித்து விட்டது. அவர் அப்படி ஒடுங்கிப் போய் இருக்க, இங்கே அவரது மகனை அடைத்து வைத்திருந்த கோபாலோ தன் முதலாளிக்குச் செல்பேசியில் அழைத்தான். "சார்! அவனை அடைச்சாச்சு" என்று தெரிவித்தான். அதைக் கேட்டதும்,"நான் வர்ற வரைக்கும் அவனை எதுவும் பண்ணாத.என்னக் கேட்டாலும் பதில் சொல்லாத" என்று வைத்து விட்டு அவ்விடத்திற்கு விரைந்தான் கிஷான். அவனுக்கு இருக்கும் கோபத்திற்கு, தீபக்கை ஒரேயடியாக காணாமல் போக வைத்து விட வேண்டுமென்ற வெறி இருந்தது. ஆனால், எடுத்தவுடன் அவனது உயிரைப் பறிக்க வேண்டாம், அது தவறும் கூட, இழிந்த சொற்களைப் பேசுவது இதுவே கடைசி தடவையாக இருக்க வேண்டும் என்று மிரட்டி விட்டு, அனுப்பி வைத்து விடு என்றதொரு கோரிக்கையை நண்பனிடம் வைத்திருந்தான் மஹதன். அதனால் தான்,தன்னுடைய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு உள்ளான் கிஷான். தீபக்கை கட்டிப் போட்டு வைத்திருந்த இடத்திற்கு வந்தவனுக்கு வணக்கம் வைத்த அடியாளிடம்,"ஏதாவது பேசினானா?" என்று வினவினான் கிஷான். "இல்லை சார். கொஞ்சம் முரண்டு பிடிச்சான். அப்பறம், கையைக், க...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 22

  கண்டிப்பான பார்வையுடன் அங்கே நின்றிருந்தார் அன்னபூரணி. அவரைப் பார்த்ததும், அகதாவிற்கு அதிர்ச்சியில் நின்ற அழுகை மீண்டும் வந்தது. அவரிடமிருந்து எதையாவது மறைத்துச செய்ய முடியுமா? என்ற அசட்டுத்தனத்தில் மௌனாவும், அமைதி கொண்டாள். ஆனால், அவர் விடுவதாக இல்லையே!  "யாரைப் பத்திப் பேசினீங்க?" எனச் சற்று மிரட்டலாகவே வினவினார் அன்னபூரணி. இதற்கு மேல் மறைத்தால் அது அவரை அவமானப்படுத்துவது போலாகும் என்ற எண்ணத்தில்,"தீபக் ம்மா!" என்று வேறு வழியில்லாமல், அகதாவிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு, தன் தாயிடம் பதிலளித்தாள் மௌனா. அதைக் கேட்டதும் தலையைக் குனிந்து கொண்டு, வழிந்த கண்ணீரைத் துடைத்தாள் அகதா. "அவனா? அந்த ராஸ்கலுக்குத் தான் மாப்பிள்ளை தண்டனை கொடுத்துட்டாரே! இப்போ என்னப் பண்ணி வச்சிருக்கான்?" என்று அகதாவை இழுத்து தன் அருகில் அமர்த்தியவர், அவளது குனிந்த தலையை உயர்த்தி விட்டார் அன்னபூரணி. அழுகையையும் தன் சேலை முந்தானையில் துடைத்து விட்டவர், "இதுக்கா இப்படி கண்ணீரை வீணாக்குற?" என்று அக்காவை அதட்டினார். அதை நிம்மதியுடன் பார்த்துக் கொண்டு இருந்த மௌனாவிடம்,...

நிருதனின் பூவிழியே - 11

  அவளது விழிகளை நேருக்கு, நேராகப் பார்த்து,”உன்னை இந்த வீட்டை விட்டுப் போக விட்டுட்டால் உன்னை வச்சு எங்க எதிரிங்க எங்க குடும்பத்தை ஏதாவது செய்ய வாய்ப்பு இருக்கு! அதனால் தான் நான் உன்னை இங்கேயிருந்து போக விடாமல் தடுக்கிறேன்!”என்றவனிடம்,  “அப்போ எனக்கு இந்த வீட்டில் ஏதாவது வேலை போட்டுக் கொடுங்க ஐயா. அது போதும்!”என்று அவனுக்கு யோசனை கூறினாள் பூவிழி.  “ம்ஹ்ம்! நீ சொல்வதும் நல்ல யோசனையாகத் தான் இருக்கு! ஆனால் எனக்கு வேற ஒரு நல்ல யோசனைத் தோனுச்சு! அதைச் சொல்லவா?”என்று அவளிடம் கேட்டான் திருவாதிரன்.  உடனே,’என்ன?’என்பதைப் போல் அவனைப் பார்த்தாள் பெண்ணவள்.  “நான் உன்னைக் கல்யாணம் பண்ணி என்னோட மனைவியாக இங்கேயே இருக்க வைக்கனும்னு எனக்குத் தோனுது!”என்று கூறி அவளது தலையில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டதைப் போன்றதொரு அதிர்ச்சியைக் கொடுத்து விட்டு அலட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தவனிடம்,  “நீங்க என்ன சொல்லுதீக ஐயா? என்னைக் கட்டிக்கப் போறீகளா? இது எப்படி சாத்தியம்?”என நடுக்கத்துடன் கேட்டிருந்தாள் பூவிழி.  “ஏன் சாத்தியம் கிடையாது?”என்று அவளிடம் தன் புருவங்களை ஏற்றி, இற...