முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 23

 

தீபக்கின் தாய் லலிதாவின், பெருங்குற்றத்திற்கான தண்டனைக் காலம் ஆரம்பித்து விட்டது.


அவர் அப்படி ஒடுங்கிப் போய் இருக்க, இங்கே அவரது மகனை அடைத்து வைத்திருந்த கோபாலோ தன் முதலாளிக்குச் செல்பேசியில் அழைத்தான்.


"சார்! அவனை அடைச்சாச்சு" என்று தெரிவித்தான்.


அதைக் கேட்டதும்,"நான் வர்ற வரைக்கும் அவனை எதுவும் பண்ணாத.என்னக் கேட்டாலும் பதில் சொல்லாத" என்று வைத்து விட்டு அவ்விடத்திற்கு விரைந்தான் கிஷான்.


அவனுக்கு இருக்கும் கோபத்திற்கு, தீபக்கை ஒரேயடியாக காணாமல் போக வைத்து விட வேண்டுமென்ற வெறி இருந்தது. ஆனால், எடுத்தவுடன் அவனது உயிரைப் பறிக்க வேண்டாம், அது தவறும் கூட, இழிந்த சொற்களைப் பேசுவது இதுவே கடைசி தடவையாக இருக்க வேண்டும் என்று மிரட்டி விட்டு, அனுப்பி வைத்து விடு என்றதொரு கோரிக்கையை நண்பனிடம் வைத்திருந்தான் மஹதன். அதனால் தான்,தன்னுடைய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு உள்ளான் கிஷான்.


தீபக்கை கட்டிப் போட்டு வைத்திருந்த இடத்திற்கு வந்தவனுக்கு வணக்கம் வைத்த அடியாளிடம்,"ஏதாவது பேசினானா?" என்று வினவினான் கிஷான்.


"இல்லை சார். கொஞ்சம் முரண்டு பிடிச்சான். அப்பறம், கையைக், காலைக் கட்டிப் போட்டதுக்கு அப்பறம், அமைதி ஆகிட்டான்" என்கவும்,


ஒருவேளை தன்னைக் கடத்தியது யாரெனத் தீபக்கிற்குத் தெரிந்து விட்டதோ?


கண் கட்டிவிருந்து, எல்லாமே அவனுக்குப் பாதகமாக அமைந்திருந்தது போலும். இருந்த இடத்தை விட்டு நகர இயலவில்லை தீபக்கால்.


உள்ளே வந்த பூட்ஸ் ஒலிகளைக் கேட்டவுடன் நிமிர்ந்தான்.


"மஹதன்!" என்று ஆத்திரத்தில் ஒலியெழுப்பினான்.


"ஹாஹா! மஹதனா? அவன் எதுக்கு இங்கே வர்றான்?" என்று நகைப்பொலியுடன் உரைத்தான் கிஷான்.


"நீ…! அவனோட ஃப்ரண்ட்!!" என்றவனிடம்,


"ஆமாம். மஹதனோட உயிர்த் தோழன் தான்!" என்று பதிலளித்தான் கிஷான்.


"உன்னை எனக்குத் தெரியும்! அன்னைக்கு அவன் கூட நீயும் சேர்ந்து தான, என்னை டார்ச்சர் செய்தீங்க?" என்று கத்தினான் தீபக்.


"பின்னே, நீ பண்ண வேலைக்கு, உன்னைப் பாராட்டனுமோ?" என்று நக்கலாக கூறினான் கிஷான்.


"ஹேய்! என் பொண்டாட்டி கூட நான் பேசினால், உங்களுக்கு என்னடா வருது?" என்று அப்போதும், வரம்பு மீறிய வார்த்தைகளைப் பேசினான் தீபக்.


"டிவோர்ஸ் ஆனப் பிறகும், அவங்களை இப்படி தொல்லை செய்ய உனக்கு என்ன உரிமை இருக்கு?" என்றான்.


"அதை நாங்கப் பேசிக்கிறோம். உங்களுக்கு முன்னாடி, அந்த மௌனாவும், அவளோட அப்பா, அம்மாவும் ஓவராக ஆடுனாங்க! ஏதோ அவங்கப் பெத்தப் பொண்ணு மாதிரி! இப்போ நீங்களா?" என்று வெறுப்புடன் பேசியவனிடம்,


"ஆமா டா! அவ்வளவு சொல்லியும் உனக்கு ஏன் மண்டையில் ஏற மாட்டேங்குது?" என்க,


"எதுக்கு ஏறனும்? எங்களுக்குக் காசு சம்பாதிச்சுக் கொடுத்துட்டு, மறு வார்த்தைப் பேசாமல் இருந்தவளை, அந்த மௌனாவும், நீங்களும் சேர்ந்து அவளை எங்கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்க வச்சிட்டீங்க! அவளோட சம்பாத்தியத்தில் தான் நாங்க சாப்பிட்டுட்டு, மத்ததைப் பார்த்தோம், அதுக்கு ஆப்பு வைக்கும் போது சும்மா விட்டுடுவோமா?" எனப் பொரிந்தான் தீபக்.


இவ்வாறு பேசியவனை இப்போதே அடித்துக் கொன்றால் என்ன? என்று தோன்றியது கிஷானுக்கு.


"என் நண்பனையும், அகதாவையும் ஏன் சேர்த்து வச்சுப் பேசின?" என்று அடக்கி வைக்கப்பட்ட ஆத்திரத்துடன் வினவினான்.


"அவன் தான அவளுங்களுக்குப் பக்கப்பலமாக இருக்கான். அவனால் தான, எங்க விஷயமே தெரியாத, நீயெல்லாம் என்னைப் போட்டு மிதிச்ச! உங்கிட்ட அடி வாங்கனும்ன்றது எனக்கு என்னத் தலையெழுத்தா டா?" என்று சீறினான் தீபக்.


"கரெக்ட் தான்! ஆனால் அதையெல்லாம் நீயே இழுத்து விட்டுக்கிட்டியா டா!" என்று அவனிடம் கிண்டலாக கூறினான் கிஷான்.


"உங்களையெல்லாம் பார்த்தாலே கோபம், கோபமாக வருதுடா! எவ்வளவு கெத்தாக அகதாவை ஹேண்டில் பண்ணேன் தெரியுமா? நீங்க உள்ளப் புகுந்ததுக்கு அப்பறம் அவளுக்கு என் மேலேயும், என் அம்மா மேலேயும் இருந்த பயமே போயிடுச்சு!" எனப் பல்லைக் கடித்தான் தீபக்.


"ஆமாம். நீயும், உங்க அம்மாவும் பெரிய பயங்கரவாதிங்க! பார்த்ததும், பயப்பட்றதுக்கு! போடா டேய்! உன்னை விட்டால் இப்படியே பேசிக்கிட்டு இருப்ப! இரண்டு நாள் இங்கேயே இரு! அதுக்கப்புறம் உனக்கு மங்களம் பாடுறேன்!" என அவனது கத்தலைப் பொருட்படுத்தாமல், அவன் வாயில் பிளாஸ்திரியைப் பொருத்தி விடச் சொன்னவன்,


"இங்கேயே இருக்கட்டும். சாப்பாடு எல்லாம் நீ பார்த்துக் கொடுத்திடு" என்று உத்தரவிட்டுச் சென்றான் கிஷான்.


"இவ்வளவு நடந்திருக்கு! இன்னும் ஏன் பொறுமையாக இருந்த மஹத்?" என்று மகனிடம் கேட்டார் கௌசல்யா.


ஏனெனில், தனக்கு யாராவது தீங்கிழைத்தால் அதை வட்டியும், முதலுமாக திருப்பிக் கொடுத்து விடுவான் மஹதன். ஆனால் தீபக் விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு அமைதியாக உள்ளான்? என்ற குழப்பத்தில் இருந்தனர் அவரும், அவரது கணவர் திருமூர்த்தியும்.


"தட்டி வைக்க நினைச்சேன் ம்மா, வளந்து வந்துட்டான்! இப்போ கிஷான் பாத்துக்கிறேன்னு சொன்னதால், அவன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சுட்டேன்!" என்று கூறினான் மஹதன்.


"அப்போ கொலை செய்யப் போறானா?" என்றார் திருமூர்த்தி.


"இல்லை ப்பா. அந்த அளவுக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன். கடைசி வரைக்கும், அவன் அதே இடத்தில் அடைபட்டு இருக்கட்டும். அப்பறம் அவனுக்கே மனசு விட்டுப் போயிடும். உடலில் வலு காணாமல் போகும். அந்த நேரத்தில், பண்ணது எல்லாம் தப்புன்னு உணருவான். அப்பறம் என்னப் பண்றதுன்னுப் பாத்துக்கலாம்னு சொல்லிட்டான் கிஷான்" என்று விளக்கினான் மஹதன்.


இவன் கூறியதைப் போலத் தான், தனது திட்டத்தை உருவாக்கி இருந்தான் கிஷான்.


தீபக்கின் உயிரைப் பறிக்காமல், அவனுக்காகத் தண்டனை வழங்கப்பட வேண்டாமென்பதில் முனைப்புடன் இருந்தனர் நண்பர்கள் இருவரும்.


இங்கே சிவமணியோ,"அந்த ராஸ்கலை என்னச் செய்தால் தகும்?" என்று சினத்தில் குதித்துக் கொண்டு இருந்தார்.


"பிரச்சனை ஒய்ஞ்சுப் போன அப்பறம் இப்படி குதிக்கிறீங்களே?" என்று அவனை அமைதிப்படுத்தினார் அன்னபூரணி.


"இப்போ தான இதை எங்கிட்டேயே சொல்றீங்க!" என்று வருத்தமாக கூறினார் சிவமணி.


"அம்மாகிட்டயும் லேட் ஆக தான் ப்பா சொன்னோம்" எனக் கூறினாள் மௌனா.


அதற்கும் அவருக்கு மனம் ஆறாமல்,

"ஓஹ்! சம்பந்தி கிட்ட சொன்னீங்களா?" என்று வினவினார்.


"அவர் சொல்லி இருப்பார் ப்பா" என விடையளித்தாள் மகள்.


அவரை மலையிறக்க வெகு நேரம் எடுத்தாலும், எப்படியோ இவர்களுக்காகச் சமாதானம் ஆனார் சிவமணி.


இனி, மௌனாவின் மற்றும் மஹதனின் திருமணத்தை ஆயத்தம் செய்ய வேண்டியது தான் பாக்கி!


முதலில், பத்திரிக்கையைத் தனியாக ஒரு நாளில் சென்று தேர்ந்தெடுத்து முடித்துக் கொண்டார்கள்.


இந்த முறை, எல்லாரையும் அழைத்துப் போய், அவர்களது விருப்பங்களையும் கேட்டு, இரு வீட்டாரின் ஒப்புதலுடன் பத்திரிக்கையை அடிக்கக் கொடுத்தான் மஹதன்.அதில் மௌனாவிற்கு ஆனந்தமாக இருந்தது.


"நீங்க மனசில் எதையும் வச்சிக்காம, உங்க மகளை அனுப்பி வைப்பீங்களா சார்?" என்று நீலகண்டனிடம் கேட்டாள் மௌனா.


ஏனெனில், முக்தாவுடனான நட்பு சிறிதளவிலும் முறிவதில் அவளுக்குப் பிடித்தமில்லை.


அகதாவைப் போலவே, தன்னுடன் ஒட்டிக் கொள்ளும் நல்ல உள்ளத்தைக் கை‌ விட முடியாது என்ற முடிவில் இருந்தவள், அதனால் தான், அவளது தந்தையிடம் இந்தக் கோரிக்கையை வைத்தாள் மௌனா.


அவருக்கு இவள் மேலும், அண்ணபூரனி மற்றும் சிவமணி மீதும், நல்ல மதிப்பு இருப்பதால், மகளை அவளுடன் அனுப்பி வைக்கச் சம்மதித்து விட்டார் நீலகண்டன்.


நிச்சயத்தின் போதே, பாதுகாப்பை வெகு மும்முரமாகப் பிசகு இல்லாமல் பார்த்துக் கொண்ட கிஷான், இப்பொழுது, தோழனின் திருமணத்தில் மட்டும் அலட்சியமாக இருந்து விடுவானா? இதோ ஆரம்பித்து விட்டான் தனது பாதுகாப்பு முறைமைகளை நடைமுறைப்படுத்தும் வேலையை!


அதற்கிடையில்,"சார்! இன்னைக்கு உங்களோட வேலை முடிஞ்சதும் என்னைப் பார்க்க வரனும்" என்று கறாராக கூறியவளிடம்,


"இந்த தடவை நீ எங்க வீட்டுக்கு வா முகி. ரொம்ப நாளைக்கு முன்னே வந்தது. அப்பா, அம்மா உனக்காக வெயிட் பண்றாங்க" எனவும்,


"ஓஹ் சூப்பர்! வர்றேன் கிஷான்" என்று மகிழ்ச்சியாகவே ஒப்புதல் அளித்தாள் முக்தா.


- தொடரும்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...