முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 24

 


"அப்பா! நான் கிஷானோட வீட்டுக்குப் போய், அத்தை, மாமாவைப் பார்த்துட்டு வர்றேன்" என்று தந்தையிடம் உத்தரவு கேட்டு நின்றாள் முக்தா.


"சரி‌ முகி. நானும் மூர்த்தி கூட கல்யாண வேலையைப் பாக்குறேன்" என்று மகளை அனுப்பி விட்டு, நண்பனுடன் சென்று விட்டார் நீலகண்டன்.


இன்னும் பல முக்கியமான ஆட்களை முறைப்படியாகப், பத்திரிக்கையைக் கொடுத்து, அழைத்து விட்டால் போதும் என்ற எண்ணத்துடன் திருமூர்த்தியும், நீலகண்டனும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டனர்.


மஹதனும், கிஷானுடன் சேர்ந்து, தன் சகாக்களுக்குப் பத்திரிக்கை வைத்து விட்டான்.


அந்த வேலையை முடித்தப் பின்னர் தான், முக்தாவைத் தன்‌ வீட்டிற்கு அழைத்திருக்கிறான் கிஷான்.


"முகி" என்ற வரவேற்புடன் அவளை உள்ளே அனுமதித்தார் சித்ரலேகா.


"வணக்கம் அத்தை, மாமா!" என இவளும் கூக்குரலிட்டவள்,


"ஹாய் கிஷான்" என்று தன்னவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் முக்தா.


கிஷான், "வா முகி" 


அவளுக்கான உணவையும் தயாராக்கி இருந்தார் சித்ரலேகா.


"இப்போதைக்கு, ஜூஸ் மட்டும் போதும் அத்தை" என்று கேட்டு வாங்கிக் குடித்தாள் முக்தா.


"அப்பா எப்படி இருக்கார் ம்மா? அவரையும் அழைச்சிட்டு வந்திருக்கலாம்ல?" என்றார் காஞ்சியப்பன்.


"மூர்த்தி அங்கிள் கூட வெளியே போயிருக்கார் மாமா" எனத் தெரிவித்தாள் அவரிடம்.


"இன்னும் அங்கிளும், அவரும் இன்விடேஷன் கொடுத்து முடிக்கவே அப்பா! நானும், மஹதனும் தான் முதலில் கொடுத்து முடிச்சோம்" என்று தந்தையிடம் கூறினான் கிஷான்.


"ஓகே டா" என்றார் காஞ்சியப்பன்.


"மௌனா கூடப் பேசினாரா?" என்று அவளைத் தன்னுடன் வைத்துக் கொண்டு கதையளக்கத் தொடங்கினார் சித்ரலேகா.


செய்து வைத்திருந்த உணவுகள் வீணாகி விடும் என்ற நல்லெண்ணத்தில்,"அம்மா! பசிக்குது.உங்களை விட்டுட்டு சாப்பிட மனசு வரலை. நீங்களும், முகியும் வந்தால், உங்களுக்கும் பரிமாறிட்டு, நாங்களும் சாப்பிடுவோம்" எனப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான் கிஷான்.


"ஹாஹா!" என அவனது தாயும், முக்தாவும் சிரித்து விட்டார்கள்.


அதன்பின், உணவைப் பரிமாறி உண்டு விட்டு, "இதுக்கு மேலேயும் நாங்க உன் கூட பேசினால், என் பையன் ரொம்ப வாடிப் போயிடுவான். அவன் கூட வெளியே போயிட்டு, அப்படியே உன்னை வீட்டில் டிராப் பண்ணச் சொல்லிடு" என் முக்தாவைக் கிஷானுடன் அனுப்பி வைக்க மனமிறங்கினார் சித்ரலேகா.


"அங்கிள், ஆன்ட்டி ! பை" என்று கிஷானுடன் கிளம்பினாள் முக்தா.


"தீபக்கை என்ன செஞ்சீங்க?" என்றதும், 


அவனைக் கடத்திய அன்று, தீபக் பேசியப் பேச்சுக்களை நினைத்துப் பார்த்தவன், முகம் சுளித்தவாறே, "இன்னும் எதுவும் செய்யலை முகி. ஆனால், இப்படியே விடவும் மாட்டேன்" என்று உறுதியாக கூறினான் கிஷான்.


"ஓகே.. விடுங்க" என்று கூறியவள், அவனைச் சமாதானம் செய்தவள்,


"நீங்களும், மஹதனும் பத்திரிக்கை கொடுத்து முடிச்சாச்சுன்னு சொன்னீங்க! எனக்குக் கொடுக்கவே இல்லையே?" என்று வினவினாள் முக்தா.


"அவன் ஃபேமிலியோட வந்து இன்வைட் செய்றதா சொன்னான் முகி‌. அப்போ நானும் கூட வருவேன். மத்தவங்களுக்கு நாங்க மட்டும் தான் போனோம். இவ்ளோ டிலே ஆகிடுச்சுன்னு வருத்தப்படாத! ப்ளீஸ்" என்று கெஞ்சினான் கிஷான்.


"ஹேய் என்னங்க இது? இட்ஸ் ஓகே! எனக்கு இன்விடேஷன் வரலைன்னு தான் கேட்டேன். எப்போ என்றாலும் வீட்டுக்கு வாங்க" என்றவள்,


பின், "இனிமேல் உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியுமான்னு தெரியலையே" என்று சோகமாக கூறினாள் முக்தா.


"ஏன்? ஏன்?" என்று பதறினான் கிஷான்.


"உங்களுக்குத் தெரியாதா? மௌனாவோட மணப்பெண் தோழி நான் தானே?" என்று குறும்புடன் கேட்டாள் முக்தா.


"ஆமால்ல! உனக்கு மணப்பெண் தோழியாக யாரு இருப்பா?" என்று கேட்டான்.


"யாருக்குத் தெரியும்! அப்படி நிக்கனும்னு நான் எதிர்பார்க்கவும் இல்லை" என்றவளை, ஆறுதலாக அணைத்துக் கொண்டான் கிஷான்.


அவளை வீட்டில் விட்டவன், மஹதனுக்கு அழைத்து, முக்தாவின் வீட்டிற்கு எப்போது பத்திரிக்கை வைக்கச் செல்லலாம்? என்று கேட்டான்.


அதற்கு அவனோ,"நீலகண்டன் அங்கிளும், அப்பாவும் தான, மத்தவங்களை இன்வைட் பண்றாங்க? சோ, எப்போ கேட்டாலும் வீட்டில் இல்லைன்னு தான் சொல்றார்.நான் என்னச் செய்யட்டும் கிஷான்?" என்றான் மஹதன்.


தந்தைக்கும், மகளுக்கும் தனித்தனியாகப் பத்திரிக்கை வைக்க முடியாதல்லவா? என்ற ரீதியில் அவன் கேட்டதும்,


"மாமா கிட்டக் கேட்டுச் சொல்றேன்" என்று கூறி வைத்து விட்டு, நீலகண்டனுக்கு அழைத்தான் கிஷான்.


அழைப்பை ஏற்றதும், "சொல்லுங்க மாப்பிள்ளை" என்றார் முக்தாவின் தந்தை நீலகண்டன்.


"எப்போ மாமா நீங்க உங்க வீட்டில் இருப்பீங்க?" என்று கேட்டான் கிஷான்.


"ஏன் மாப்பிள்ளை?" 


"உங்களுக்கும், முக்தாவுக்கும் தான் இன்னும் இன்விடேஷன் வைக்கலை‌! உங்களைப் பிடிக்க முடியலைன்னு மஹத் புலம்புறான்!" 


"ஹாஹா! நான் நாளைக்கு வீட்டில் இருக்கிறேன் மாப்பிள்ளை. மஹதனை அழைச்சுட்டு வந்துடுங்க" என்றார் நீலகண்டன்.


"ஓகே மாமா. அவன் கூட, தானும் வர்றேன்" என்றுரைத்தான் கிஷான்.


"ம்ம்… லன்ச் பிரிப்பேர் செய்யச் சொல்றேன்" என அவர்களது வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார் நீலகண்டன்.


அவரது பதிலை மஹதனுக்குச் சொல்லவும்,"ஓகே கிஷான். உங்க வீட்டுக்கும் வருவோம்" என்று கூறினான்.

—------------------------------


தன்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்த மௌனாவை,"வாங்க சிஸ்டர்!" என்று சிரித்த முகத்துடன் வரவேற்றான் கிஷான்.


"ஹாய்!" என்றவாறே இன்முகத்துடன் பேசினாள் மௌனா.


"என்ன இங்கே விசிட்?" என்று வினவினான்.


"என் கூட வேலைப் பார்த்தவங்களை மேரேஜூக்கு இன்வைட் பண்ண வந்தேன் கிஷான்" என்று கூறினாள்.


"ஓஹோ! பிரேக் டைமில் பேசுங்களேன்! எல்லாருமே வந்துடுவாங்க" என்றான் கிஷான்.


"சரி. அதுவரைக்கும் ஹோட்டலைச் சுத்திப் பார்த்துட்டு வர்றேன்" என்று அவனிடம் அனுமதி பெற்று, தான் வேலைப் பார்த்த இடத்திற்கு வந்தாள் மௌனா.


இவள் விடுப்பு எடுத்திருப்பதால், முன் வரவேற்பறையில், மௌனாவிற்குப் பதிலாக வேறொரு பெண்ணை வேலைக்கு நியமித்து இருந்தான் கிஷான்.


அவளைப் பார்த்துப் புன்னகைத்தவள், தன்னுடைய வேலையைத் தான் அவள் இப்போது செய்வதாகவும், திருமணத்திற்கு அழைக்க வந்ததாகவும் எடுத்துக் கூறினாள் மௌனா.


"அப்படியா மேம்? காங்கிராட்ஸ்" என்று கைக் குலுக்கி வாழ்த்துச் சொன்னாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்.


"தாங்க்ஸ்" என்றாள் மௌனா.


விடுதியை ஆசை தீரச் சுத்திப் பார்த்தப் பிறகு, கிஷானிடம் வந்தவள்,"இப்போ ஸ்டாஃப்ஸை மீட் பண்ணலாமா நான்?" என்று கேட்டாள்.


"ஷூயர்" என்றவன், விடுதியில் வேலை செய்யும் ஊழியர்களை வரவழைத்து, மௌனாவைப் பற்றிய அறிமுகம் தெரிந்தவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு அவளைப் பற்றிக் கூறினான் கிஷான்.


அதைக் கேட்ட அனைவரும் அவளுக்கு வாழ்த்துக் கூறினர். அவர்களைத் தன் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து விட்டுக் கிஷானிடம் விடைபெற்றுச் சென்றாள் மௌனா.


—---------------------


மறுநாள், நீலகண்டனின் வீட்டிற்கு வந்திருந்தனர் மஹதனும், மௌனாவும்.அவனுடைய பெற்றோரும். 


கடைசி நிமிடத்தில் தான், தானும் வருவதாக மஹதனிடம் கூறியிருந்தாள் மௌனா. 


அன்னபூரணி, சிவமணி மற்றும் அகதா மூவரும் மௌனாவின் சொந்த ஊருக்குப் போயிருந்தனர் அங்கிருப்போருக்குப் பத்திரிக்கை வைப்பதற்காக.


மருமகளை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டார் கௌசல்யா.


அவர்களை வரவேற்றவர், மாப்பிள்ளையைத் தனியாக கவனிப்பதையும் சிறப்பாக செய்தார் நீலகண்டன்.


முக்தாவும் அங்கே தான் இருந்தாள்.


மஹதனின் தாய்க் கௌசல்யாவைப் பார்த்தாலே, அவளுக்கு நேர்மறை உணர்வுகளைக் கொடுக்கும் ஆதலால், சலுகையுடன் அவரது அருகில் அமர்ந்து கொண்டாள் முக்தா.


அதைப் பார்த்துக் கொஞ்சம் கூடப் பொறாமை வரவில்லை மௌனாவிற்கு.


குடும்ப நண்பர்களுக்கு என்று பிரத்தியேகமாக அச்சடிக்கப்பட்டிருந்தப் பத்திரிக்கையை எடுத்துக் கொடுத்தார்கள் வந்திருந்த அனைவரும்.


அதில் புன்னகைத்தவர், "வா முகி, வாங்க கிஷான். மூனு பேரும் சேர்ந்து வாங்குவோம்" என்று மகளையும், மருமகனையும் அழைத்தார் நீலகண்டன்.


இருவரும் வந்து நிற்க, மூவராக, அதைப் பெற்றுக் கொண்டு, அவர்களை உணவுண்ண வைத்து அனுப்பினர்.


இனி அடுத்துக் கிஷானுடைய வீட்டிற்குச் சென்றார்கள்.


 - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...