முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 22

 


கண்டிப்பான பார்வையுடன் அங்கே நின்றிருந்தார் அன்னபூரணி.


அவரைப் பார்த்ததும், அகதாவிற்கு அதிர்ச்சியில் நின்ற அழுகை மீண்டும் வந்தது.


அவரிடமிருந்து எதையாவது மறைத்துச செய்ய முடியுமா? என்ற அசட்டுத்தனத்தில் மௌனாவும், அமைதி கொண்டாள்.


ஆனால், அவர் விடுவதாக இல்லையே! 


"யாரைப் பத்திப் பேசினீங்க?" எனச் சற்று மிரட்டலாகவே வினவினார் அன்னபூரணி.


இதற்கு மேல் மறைத்தால் அது அவரை அவமானப்படுத்துவது போலாகும் என்ற எண்ணத்தில்,"தீபக் ம்மா!" என்று வேறு வழியில்லாமல், அகதாவிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு, தன் தாயிடம் பதிலளித்தாள் மௌனா.


அதைக் கேட்டதும் தலையைக் குனிந்து கொண்டு, வழிந்த கண்ணீரைத் துடைத்தாள் அகதா.


"அவனா? அந்த ராஸ்கலுக்குத் தான் மாப்பிள்ளை தண்டனை கொடுத்துட்டாரே! இப்போ என்னப் பண்ணி வச்சிருக்கான்?" என்று அகதாவை இழுத்து தன் அருகில் அமர்த்தியவர், அவளது குனிந்த தலையை உயர்த்தி விட்டார் அன்னபூரணி.


அழுகையையும் தன் சேலை முந்தானையில் துடைத்து விட்டவர்,

"இதுக்கா இப்படி கண்ணீரை வீணாக்குற?" என்று அக்காவை அதட்டினார்.


அதை நிம்மதியுடன் பார்த்துக் கொண்டு இருந்த மௌனாவிடம்,"என்ன தான் ஆச்சு?" என சாராம்சத்தைப் பற்றிக் கேட்டார் அன்னபூரணி.


தாயின் சொல்லுக்கு இணங்கி, அனைத்தையும் ஒப்பித்தாள் அவளும்.


"கேடு கெட்டப் பையன்! அவனையெல்லாம் இன்னும் சாத்தனும்!" என்று திட்டித் தீர்த்தார் அன்னபூரணி.


"மாப்பிள்ளைக்குத் தெரியுமா?" என்றார் மகளிடம்.


"தெரியும் ம்மா. அவர் இதைப் பாத்துக்கிறேன்னு சொன்னார்" என்று கூறினாள் மௌனா.


"இதுக்கே முடங்கி இருந்தால், காலம் பூராம் இப்படியே ஒளிஞ்சி இருக்க வேண்டியது தான் அகி! முகத்தைக் கழுவிட்டு வா!" என அவளை அனுப்பியவர்,


மகளிடம்," உங்க அப்பாகிட்டயும் சொல்றேன். அவருக்கு மட்டும் தெரியாமல் இருக்கக் கூடாதுல்ல! சம்பந்திக்குத் தெரியுமா?" என்று கேட்டார் அன்னபூரணி.


அதில் விலுக்கென்று நிமிர்ந்தவள்,"இல்லைம்மா! அவர் சொல்லிடுவாரோ?" எனப் பயந்தாள் மௌனா.


"நீ எதுக்குப் பயப்பட்ற இப்போ? சொல்லட்டுமே! சின்னவங்களே எல்லாம் எடுத்துச் செய்தால் நாங்க எதுக்கு இருக்கோம்? இதை ஈகோவால் சொல்லலை மௌனா ம்மா! எங்களோட சப்போர்ட் எப்பவும் உங்களுக்கு இருக்கும்னு நம்பிக்கையைக் கொடுக்கவும், நீங்க அதிக ஸ்ட்ரெஸ் எடுத்துக்கக் கூடாதுன்னும் தான்! அப்பாகிட்ட பேசிடறேன். மாப்பிள்ளை அவர் வீட்டில் பேசுறேன்னு சொன்னால் தடுக்காத!" என்று அறிவுரை வழங்கினார் அன்னபூரணி.


அதற்குள் அங்கே பிரசன்னமானாள் அகதா.


"உனக்குத் தான் நிறைய சொல்ல வேண்டியது இருக்கு" என அவளுக்குத் தன்னம்பிக்கை வர வைக்கப் போதுமான ஆலோசனைகளைக் கொடுத்தார்.


ஒரு சில நிமிடங்கள் அவளுக்குத் தேவைப்பட்டது. அவள் தெளிவு பெற்றதும், "சாரி ம்மா! சாரி மௌனா! இனிமேல் பொசுக்குன்னு அழுக மாட்டேன்!" என்று உறுதி தந்தாள் அகதா.


"சாப்பிடாமல் வேற அழுதுட்டு இருந்திருக்க" என அவர்களை உணவருந்தச் செய்தார் அன்னபூரணி.


"எங்க இருக்கீங்க கிஷான்? நாம மீட் பண்ணலாம்னு நீங்க தான் சொன்னீங்க? இப்போ லேட் ஆகிட்டே இருக்கு! உங்களைத் தான் காணோம்!" என்று பொரிந்தாள் முக்தா.


அவ்வப்போது பார்த்துப், பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தார்கள், இப்படி ஏதாவது வேலையில் மாட்டிக் கொண்டால் கிஷான் வருவது தமாதமாகி விடும். அதை ஓரளவிற்குப் பொறுத்துப் போன முக்தாவோ, இன்று அவனிடம் கூறி சண்டை பிடித்தாள்.


"அகதாவோட பிரச்சனைக்கு முடிவு கட்டப் போறேன் முகி!" என ஆழ்ந்த குரலில் கூறினான் கிஷான்.


"என்ன?" என்று அதிர்ந்தாள் முக்தா.


"அவனோட அட்டூழியம் ஜாஸ்தி ஆகிடுச்சு" என்று நடந்ததை உரைத்தான் அவளிடம்.


"ஓஹ்! அப்போ, அவனுக்கு முடிவு கட்டிடுங்க கிஷான். நான் காத்திருக்கேன்" என்று தீர்க்கமாக கூறினாள் முக்தா.


"முடிச்சிட்டு உனக்குக் கால் செய்றேன். லவ் யூ முகி" எனத் தெரிவித்து விட்டு, தீபக்கைப் பின் தொடர்ந்த தன் ஆட்களிடம்,


"அவன் யாரையாவது பார்க்கப் போறானா?" எனக் கேட்கவும்,


"ஆமாம் சார். ஏதோ டிவி சேனலோட ஆஃபீஸூக்குள்ளப் போக, அப்பாயிண்ட்மெண்ட் வாங்குறதுக்கு, அலைஞ்சிட்டு இருக்கான்" என்று கூறினான்.


"அந்த ஆஃபீஸூக்குள்ள நுழையறதுக்கு முன்னாடியே தூக்கிடுங்க!" என்று உத்தரவிட்டான் கிஷான்.


காவலாளியிடம் கெஞ்சியவனை,"தம்பி!" என்ற குரல் திசை திருப்பியது.


அடியாள் போன்ற தோற்றமின்றி, கேஷுவலாக உடுத்தியிருந்தவனை ஏறிட்டான் தீபக்.


"என்னையா?" என்று கேட்டான்.


"ஆமாம். உன்னைத் தான் ப்பா. இங்கே வா" என அவனைக் கைக் காட்டி அழைத்தான்.


ஒருவேளை இந்த அலுவலகத்தில் வேலை செய்பவனாக இருப்பானோ? என்று அவனிடம் போனான் தீபக்.


"எதுக்கு இங்கேயே சுத்திக்கிட்டு, அந்த ஆஃபீஸூக்குப் போகத் துடிச்சிட்டு இருக்கிற?" என்று வினவினான் அவன்.


"அது எனக்கு ஒரு முக்கியமான வேலை ஆகனும். அதான் ங்க" என்றான்.


இப்போதிருக்கும் சூழ்நிலையில் யாரிடமும் வம்பு வளர்த்துக் கொள்ளக் கூடாது என்று தணிவாகவே பேசினான் தீபக்.


ஆள் பார்க்கவும் வாட்டசாட்டமான தோற்றத்துடன் இருக்க, இவன் தன்னைத் தாக்கினால், உடலில் மீதமிருக்கும் உறுப்புகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்ற எச்சரிக்கை உணர்வும் இருந்தது தீபக்கிற்கு. 


ஆனால், மஹதனுடைய அடியாளாக இருப்பானோ? என்ற ஐயத்தில்,


"நீங்க யாரு?" என்று பணிவாக கேட்டான் தீபக்.


"நானும் ஒரு பிரஸ்ஸில் வேலை பார்க்கிறேன் ப்பா. நீ இங்கே சுத்திட்டு இருக்கிறது, அப்பறம் வாட்ச்மேன் கிட்டப் பேசியதைக் கேட்டேன். உனக்கு என்ன ஹெல்ப் வேணும்?" என்று இயல்பாகப் பேசுவதைப் போல வினவினான் அவன்.


"வேலை விஷயமாக வந்தேன் சார். உங்க இடத்தில் எனக்கான ஜாப் ஏதாவது கிடைக்குமா? ரெஸ்யூம் கொடுக்கவா?" என்று பாவமாக கேட்டான் தீபக்.


"அப்படியா? எங்க ஆஃபீஸில் இல்லாத வேலையா? உன்னோட ரெஸ்யூம் வேணாம் ப்பா. ஆளே இங்கிருக்கும் போது அதெல்லாம் எதுக்கு? என் கூட வா! உன் தகுதிக்கு ஏத்த மாதிரி வேலையைத் தர்றேன்" எனத் தீபக்கால் கத்தக் கூட முடியாத அளவிற்குக் கிடுக்கிப்பிடியில் வைத்து, தீபக்கை இழுத்துச் சென்று, அவனைக் காரிலேற்றித் தங்களது முதலாளியின் இடத்திற்குக் கொண்டு சென்றான் அந்த அடியாள்.


இவன் மஹதனுடைய ஆளே தான்! அதுவும், அகதாவிடம் தான் பேசியதற்காக, பிரதிபலன் கிடைக்கப் போகிறது என்பதையும் புரிந்து கொண்டு, இறுகிப் போய், திகிலுடன் இருந்தான் தீபக்.


ஆனால், இவற்றையெல்லாம் செய்யச் சொன்னது, மஹதன் இல்லை, கிஷான் என்பது அவனுக்குத் தெரியாது.


தன் நண்பனை அவமானப்படுத்திப் பேசியவனைத் தானே கவனிக்க உறுதி கொண்டான் கிஷான்.


அறைக்குள் இருந்த அந்தகாரம் தீபக்கைப் பயமுறுத்தியது.


அவனை அடைத்து வைத்து விட்டு, அதை தன் முதலாளியிடம் தெரிவிப்பதற்காக வெளியேறி விட்டான் அந்த அடியாள்.


அவரது நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது, பேச்சற்று, பயத்தில் விறைத்து நின்றார் லலிதா.


"அவன் செய்ததுக்கும், எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை தம்பி" எனக் கூறினார்.


"பொய்யாகப் பேசி, நடிக்கிறதுக்கு, யோக்கியமாக ஏதாவது வேலை செய்யலாம்!" என்று சீறினான் மஹதன்.


"இல்லையில்லை தம்பி" என அவர் மேலும் தொடர,


"ஸ்ஸ்! நீங்களும், உங்கப் பையனும் அகதாவை விட்டு நிரந்தரமாக விலகிப் போகனும்! இல்லைன்னா, நான் விலக்கி வைப்பேன்!" எனக் கர்ஜித்தவனை ஆடிப் போய்ப் பார்த்தார் லலிதா.


"அவங்க என் வருங்கால மனைவியோட ஃப்ரண்ட். அப்போ எனக்குத் தங்கச்சி மாதிரி‌. இப்படியான உன்னதமான உறவுகளைத் தெரிஞ்சே கொச்சைப்படுத்த உங்களுக்கு வெட்கமா இல்லை?" என்று அவரிடம் அருவருப்புடன் கேட்டான் மஹதன்.


அவரால் எதை தான் கூற முடியும்? அமைதியாக நிற்பதை தவிர வேறு மார்க்கம் இல்லை.


"ப்ச்! உங்க மகனை உயிரோடு பார்க்கனும்ன்ற ஆசையை மறந்துடுங்க! ஏற்கனவே ஒரு தடவை அவனை நாங்க அனுப்பி வச்ச நிலைமை உங்களுக்கே தெரியும்! என்னோட நேரத்தை வீணாக்காமல், போய் உழைச்சு சம்பாரிங்க" என்று அதற்குப் பிறகு அவரைக் கெஞ்ச விடாமல், அனுப்பி விட்டான் மஹதன்.


அப்படியென்றால் தன் மகன் உயிருடன் வருவதற்கு வாய்ப்பே இல்லையா? இப்போது எங்கிருக்கிறான்? மறுபடியும் தன் கைங்கரியத்தைக் காட்டி விட்டானா மஹதன்? மீண்டுமொரு குழாயடிச் சண்டையை அகதாவிடம் போட முடியாது! என்ற எண்ணங்கள் சூழ வீட்டிற்கு வந்து சேர்ந்தவர்,


மகனுக்குச் செல்பேசியில் அழைத்துப் பார்த்தார். அதில் வந்த தகவலிலேயே இவருக்கு எல்லாம் புரிந்து போனது. இரண்டாவது முறையாகத் தன்னிடம் மாட்டிக் கொண்டவனை உயிருடன் வெளியில் விடுவதற்கு மஹதனும், சாதாரணமான ஆள் இல்லையே? மகனுடைய ஈமக் கிரியைகளைத் தான், தான் செய்யப் போகிறோமா? என்று நினைக்கும் அளவிற்குப் போய் விட்டார் லலிதா.


                      - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...