முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 8

 


பெற்றோருடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.


அவர்களுக்கு ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தாள் மௌனா.


" அப்பா, அம்மா! சாப்பாடு ரெடி பண்ணிடறோம்" என்று 


"மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டியா மௌனா?" என்றார் சிவமணி.


"சொல்லனும் அப்பா. அவர் வொர்க்ல இருப்பார். கிஷான் வீட்டுக்கு வேற போகனும்னு சொல்லிட்டு இருந்தார்" என்று கூறினாள் மகள்.


"ஆமாம். எப்போ கல்யாணமாம்?" என்று விசாரிக்க ஆரம்பித்தார் அன்னபூரணி.


அவர்களுடன் இணைந்து பேசியபடி உணவைத் தயாரித்தனர் தோழிகள் இருவரும்.


 புடவை உடுத்தி ஆயத்தமாகி இருந்தாள் முக்தா. 


திருமூர்த்தியையும், கௌசல்யாவையும் தங்கள் காரில் வர, நீலகண்டனும், முக்தாவும் அவர்களது காரில் பயணம் ஆனார்கள்.


அவர்களுக்கானச் சிற்றுண்டியுடன் காத்திருந்தனர் கிஷான் குடும்பத்தினர்.


மகிழுந்தின் சத்தம் கேட்டு வந்தவர்களை அடையாளம் தெரிந்து கொண்டு, அவர்களது கார் உள்ளே நுழைவதற்காக, இரும்புக் கதவைத் திறந்து விட்டு, காவல் நாய்களையும் அதட்டி, அடக்கி விட்டு, வழி விட்டு நின்றான் வாயிற்காவலன்.


 காரிலிருந்து இறங்கிய நால்வரையும், வரவேற்றனர் கிஷானின் பெற்றோர்.


"முகி!" என்று மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவன், அவளது புடவை உடுத்திய அழகிய தோற்றத்தை விழிகளால் பருகினான் கிஷான்.


நீலகண்டனைப் பார்த்து,"வாங்க மாமா!" என்று வரவேற்று,


"அப்பா,அம்மா!" எனத் தன் நண்பன் மஹதனின் பெற்றோரையும் வரவேற்று அழைத்துப் போனான்.


காஞ்சியப்பனும், சித்ரலேகாவும்,"ரெண்டு பெஸ்ட் ஃப்ரண்ட்ஸூம் குடும்பத்தோட வந்திருக்கீங்க! முறையாக ரிசீவ் பண்ணனுமே!" என்று திருமூர்த்தியையும், நீலகண்டனையும் பார்த்துச் சொன்னார் காஞ்சியப்பன்.


"இப்போ மூனு பேராக மாறிட்டா போச்சு சம்பந்தி!" என்றார் நீலகண்டன்.


"வாங்க! வா ம்மா!" என்று அவர்களை சோஃபாவில் உட்காரச் சொன்னவர்,


முக்தாவைத் தன் கை வளைவில் வைத்துக் கொண்டார் சித்ரலேகா.


அந்த அன்பான செயலில் அடங்கிப் போய் விட்டாள் அவரது கரங்களுக்குள்.


அதைக் கண்ட நீலகண்டனுக்குள் இருந்த அங்கலாய்ப்பு மறைந்து விட்டது.


சிற்றுண்டி பரிமாறப்பட்டதும், "மஹதன் வரலையா?" என்றார் காஞ்சியப்பன்.


கௌசல்யா, "வர்றேன்னு தான் சொன்னான் அண்ணா" என்று கிஷானைப் பார்த்தார்.


அவனோ, "வர்றதுக்கு டைம் இருக்காதுன்னு நினைக்கிறேன்" என மறுப்பாக கூறினான். 


"காணக் கிடைக்க மாட்டேங்குறான் ங்க.அந்தப் பொண்ணு மௌனாவோட அப்பா,அம்மா ஊரில் இருந்து வந்துட்டாங்க.

அவங்களையும் பார்க்கவும் போகனும்!" என்று பொரிந்தார் திருமூர்த்தி.


"அச்சோ! நீங்க கிளம்புங்க மூர்த்தி. சம்பந்திங்களைப் பாருங்க" என்று நண்பனுக்கு உரைத்தார் நீலகண்டன்.


"அப்போவே மௌனா சொல்லிட்டா அண்ணா. முக்தாவுக்காக நீங்கப் போயிட்டு வாங்கன்னு, சிவமணி அண்ணாவும், அன்னபூரணி அண்ணியும் கூட அதே தான் சொன்னாங்க" என்று பெருமையுடன் கூறினார் கௌசல்யா.


அதைக் கேட்ட கிஷானும்,"எங்க கூட முக்தாவையும் அழைச்சுட்டுப் போகவா அங்கிள்?" என்று நீலகண்டனிடம் அனுமதி வேண்டினான்.


"சரிப்பா" என்று அவரும் இசைவு கொடுத்தார்.


தன் வருங்கால மாமனார், மாமியாரின் கால் பணிந்து எழுந்தாள் முக்தா.


மஹதனின் பெற்றோரிடம் தங்களது நன்றி நவிழ்தலை முடித்துக் கொண்டு நீலகண்டனும், முக்தாவும் வெளியேறினர்.


தாயிடமும் தந்தையிடமும் விடைபெற்று, கிஷானும் அவர்களுடன் சென்றான் மௌனாவின் பெற்றோரைச் சந்திக்க.


"ஆங்… மௌனா! நாங்க வந்துட்டு இருக்கோம். முக்தாவும் , கிஷானும் கூட வர்றாங்க" என்று தகவல் தெரிவித்தார் கௌசல்யா.


கிஷான் வண்டியை இயக்க, அருகே அவனது தோளில் முகம் புதைந்திருந்தாள் முக்தா.


அவளைப் புடவையில் பார்த்த போதே விழுந்து விட்டவன், இதமாய் தன்னைத் தழுவிக் கொண்ட பாங்கில், முழுதாகத் தொலைந்து போனான்.


மௌனாவின் வீடு தென்பட்டதும், "முகி" என்று அவளது தோளை அழுத்தி அழைத்தான் கிஷான்.


"ஹாங்!" என்றதொரு முனகலில் நிமிர்ந்தவளிடம்,


"இறங்கு ம்மா" என வெளியே சுட்டிக் காட்டினான்.


அவளும் குறுநகையுடன் இறங்கவும், திருமூர்த்தியின் காரும் வந்து விட்டது. கடைசியில் மஹதன் மட்டும் வரவேயில்லை.


உள்ளறையில் இருந்த சிவமணியும், அன்னபூரணியும் விரைந்து வந்தனர்.


"வாங்க சம்பந்தி" என்று உபசாரம் நிகழ்ந்தது.


மஹதனுக்குக் குறுஞ்செய்தியில் சொல்லி விட்டான் கிஷான்.


அவன் வராததால் சிலவற்றை மட்டும் கலந்துரையாடி முடித்திருந்தனர்.


தேனாய் இனித்தது அங்கிருந்த ஒவ்வொரு நொடியும்!


மறுபடியும் தன்னவனது தோள் கொடுத்த சுகத்தில் பரிமளம் கொண்டு, அவனுடன் பயணம் செய்தாள் முக்தா.


கிஷானிற்குப் பிரியாவிடை கொடுத்து விட்டு வந்தாள் வீட்டினுள்.


"நான் எங்கே இருக்கேன்னு உனக்குத் தெரியனுமா?" என மௌனாவிடம் கேட்டவன், அவளுக்குத் தன் கைப்பிடியில் இருந்த ஒருவனது தலையை உயர்த்திக் காண்பித்தான் மஹதன்.


அவனைப் பார்த்தது அதிர்ச்சி என்றால், மஹதனுடன் இருந்த கிஷானும் தென்பட்டது பயங்கர அதிர்ச்சியைக் கொடுத்தது மௌனாவிற்கு.


அவளது வீட்டிலிருந்து நேரடியாக அங்கு தான் வந்திருக்கிறான் கிஷான்.


அவள் அதிர்ச்சியுறக் காரணம் தான் என்ன?


 - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...