முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காவியம் 26

  காலையில் கண் விழித்த திவ்யனுக்கோ, தேர்விற்குத் தயாராக ஏழு நாட்கள் விடுமுறை கொடுத்து இருப்பதால் அதுவரையில் ஆரவி கல்லூரிக்குச் செல்லத் தேவையில்லை என்ற விஷயம் அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது.  அப்படியென்றால், பிரஹாசினி ஊருக்குக் கிளம்பும் போது ஒரு தடவையாவது அவளைப் பார்க்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்ற ஏமாற்றத்துடன் படுக்கையை விட்டு எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்தான் திவ்யன்.  அந்தச் சமயத்தில், வெளியே பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.  “உங்க அண்ணன் எழுந்துட்டா அவன் கிட்டயே கேளு டி. சும்மா என்னைப் போட்டு அனத்திட்டு இருக்கிறா!” என்று தாய் கூறியதைக் கேட்டதும், உடனே அறையை விட்டு வெளியே வந்தான் திவ்யன்.  அங்கே ஆரவி சுருங்கிய முகத்துடன் பாவமாக நின்றிருந்தாள் ஆரவி.  அவளிடம் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தார் சோமசுந்தரி.  “என்னாச்சு ம்மா? எதுக்குக் காலங்கார்த்தாலேயே இவளைத் திட்டிட்டு இருக்கீங்க?” என்று அவரிடம் வினவினான் மகன்.  அவன் தனக்கு ஏற்றுப் பேசியதைக் கண்டுப் புன்னகையுடன்,”அது ஒன்னும் இல்லண்ணா, எனக்கு எக்ஸாம்க்குப் படி...

காவியம் 25

  தேர்விற்குத் தயாராகும் மும்முரத்தில் தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் கண்டு கொள்ளவில்லை பிரஹாசினி.  அதேபோல், மாணவ, மாணவியருக்கு படிப்பதற்கான விடுப்பு நாட்கள் ஐந்திலிருந்து ஒரு வாரமாக நீட்டிக்கப்பட்டது.  எனவே, அதைத் தன் குடும்பத்திடம் தெரிவித்தாள்.  “அப்படியா? அதான் ஒரு வாரம் லீவ் விட்டுட்டாங்களே! நீ இங்கே வந்து படி ம்மா” என்றார் உமாராணி.  “சரிங்க பெரியம்மா. ஹாஸ்டல் வார்டன் கிட்டே கேட்டுட்டுச் சொல்றேன்” என்று கூறியவள்,  தனது மற்ற இரண்டு தோழிகளிடம் இதைப் பற்றிப் பேசினாள பிரஹாசினி.  அவர்களும் கூட,”எங்களுக்கும் வீட்டுக்குப் போகனும்னு ஆசையாகத் தான் இருக்கு டி. வார்டன் என்ன சொல்லுவாங்கன்னு தான் தெரியலை” என்றார்கள்.  “இப்போ தானே காலேஜில் அன்வுன்ஸ் செய்து இருக்காங்க. சாயந்தரம் ஹாஸ்டலுக்குப் போனால் தெரிஞ்சிடும்” என்று கூறி விட்டாள் பிரஹாசினி.  அதைப் போலவே, கல்லூரி முடிந்ததும் மாலையில் தங்களது விடுதிக்குச் சென்ற மூவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில், அனைத்து மாணவிகளையும் அரங்கிற்கு (Auditorium) வருமாறு அழைத்தவுடன்,  சௌமியா,“லீவ் பத்தி தான் ச...

காவியம் 24

  அவள் தன்னைச் சமாளித்துக் கொள்வதற்கு முன்பாகவே,”பார்த்து ம்மா!” என்ற பரிதவிப்பான குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பெண்ணவள்.  அங்கே தன்னுடைய குரலில் இருந்த பரிதவிப்பை முகத்திலும் பிரதிபலித்துக் கொண்டுப் பதறிப் போய் நின்று இருந்தவனைப் பார்த்தவளோ, அவன் ஆரவியின் தமையன் என்பதை அறிந்து கொண்டவள், அவன் ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படையில் தான், தன் கால் இடறியதைக் கண்டுக் குரல் கொடுத்து விட்டான் என்று எண்ணினாள் பிரஹாசினி.  ஆனால், அவளுக்குச் சட்டென்று என்னத் தோன்றியதோ தெரியவில்லை, அவனது வதனத்தைக் கூர்ந்து கவனித்தவளோ, அவனது குரலிலும், பாவனையிலும் மனிதாபிமானம் மட்டும் இல்லாமல் அதில் வேறொரு உணர்வும் இருப்பதை அவதானித்துத் துணுக்குற்றுப் போனாள்.  அவன் தன்னை ஏன் இப்படிப் பார்க்கிறான்? அவனுடைய தன் மீதான அந்தக் கனிவானப் பார்வையின் அர்த்தம் தான் என்ன? அவன் ஆரவியின் அண்ணன் எனும் போது அவள் நிச்சயமாகத் தன்னைப் பற்றிய எந்த நல்ல விஷயத்தையும் அவனிடம் சொல்லி இருக்கப் போவதில்லை.  அப்படியிருக்கத், தன்னிடம் கனிவு காட்டுவதற்கு அந்த ஆடவனை எது உந்தியது? என்றெல்லாம் யோசித்துக் குழம்பியவ...

காவியம் 23

  “ஏன் டி அங்கேயிருந்து உடனே வந்துட்ட? அவங்க கூடப் பேசிட்டு எல்லாரும் சேர்ந்து வந்திருக்கலாம்ல? நீ திரும்பிப் போனதும் அந்தப் பொண்ணோட முகமும், அவ அண்ணாவோட முகமும் சுருங்கிப் போச்சு” என்று பிரஹாசினியிடம் வினவினாள் சௌமியா.  அதைக் கேட்டதும்,”ஏன்? என்னாச்சு?” என்ற வினோதாவிடம்,  சற்று முன்னர் நிகழ்ந்த விஷயத்தை அவளிடம்  பகிர்ந்தாள் அனிகா.  “அப்படியா?” என்றவள்,  “ஆமாம். நீ ஏன் அப்படி நடந்துக்கிட்ட பிரஹா?” எனத் தோழியிடம் விசாரித்தாள் வினோதா.  “அந்தப் பொண்ணுக்கு என்னைப் பிடிக்கலை டி. அதனால் தான், அங்கே நிற்காமல் ஒதுங்கி வந்துட்டேன்” என்றாள் பிரஹாசினி.  “அது எப்படி உனக்குத் தெரிஞ்சது? அந்தப் பொண்ணு சொன்னாளா?” எனக் கேட்டாள் அனிகா.  “அந்தப் பொண்ணு சொல்லனும்னு இல்லை. எனக்கு அவளோட நடவடிக்கையிலேயே தெரிஞ்சது. அதான்”   சௌமியா,“அதைத் தான் எப்படி தெரிஞ்சிக்கிட்டன்னுக் கேட்கிறோம்? அவ உங்கிட்ட எப்படி நடந்துக்கிட்டா”என்றதும்,  “அந்தப் பொண்ணு இங்கே படிக்க வந்த அந்த டைமிலேயே என் கூடப் பேச டிரை பண்ணினாள். ஆனால், நான் தான் யார் கூடவும் அவ்வளவு சீக்கிரம் ...

காவியம் 22

  சில மணித்துளிகளுக்குப் பிறகுத் தனக்கு நேர்த்தியான ஆடை ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டவனோ, அதை அணிந்து கொண்டுத் தயாராகி டைனிங் டேபிளிற்கு வந்தான் திவ்யன். அங்கே உணவருந்திக் கொண்டிருந்த ஆரவியோ,”உங்களுக்காக எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றதுண்ணா? குளிச்சி, டிரெஸ் போட்டுட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா? நான் இதுக்குப் பேசாமல் பஸ்ஸிலேயே காலேஜூக்குப் போயிருப்பேன்” என்று அவனிடம் குறைபட்டுக் கொண்டாள்.  “நான் ஒன்னும் ரொம்ப எல்லாம் லேட் பண்ணிடலை ஆரு. உன்னைச் சரியான நேரத்துக்குக் கொண்டு போய் விட்றது என்னோட பொறுப்பு. நீ ரிலாக்ஸ் ஆகச் சாப்பிடு” என்று அவளைச் சமாதானம் செய்தான்.  “ம்ம்” என்றவள், துரிதமாக சாப்பிட்டு முடித்தாள்.  அதே போலவே, தானும் உணவுண்டு விட்டு எழுந்தான் திவ்யன். “ம்மா! நாங்கப் போயிட்டு வர்றோம்” என்று தாயிடம் கூறினாள் ஆரவி.  “சரி. ரெண்டு பேரும் பத்திரமாகப் போயிட்டு வாங்க” என அவர்கள் இருவரையும் வழியனுப்பி வைத்தார் சோமசுந்தரி.  அதன்பிறகு, அவ்விருவரும் இருசக்கர வாகனத்தில் ஆரவியின் கல்லூரிக்குப் பயணம் செய்தனர்.  இதே சமயம்,”ஸ்நாக்ஸ்ஸை எல்லாம் பேக்கில் எடுத்து வச...