முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 35

 


மஹதனும், மௌனாவும் தங்களது தேன்நிலவிற்காக ஏற்பாடுகள் செய்ய நினைக்கும் போது, தோழியைச் செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசினாள் அகதா.


"ஹாய் அகி" என்று களிப்புடன் கூறினாள்.


"அம்மா உன் கூடப் பேசனும்னு சொன்னாங்க. இதோ கொடுக்கிறேன்" என்ற தகவலை அவளிடம் தெரிவித்து, அன்னபூரணியிடம் செல்பேசியைத் தந்தாள் அகதா.


"மௌனா‌ செல்லம்! அங்கே உனக்கு எல்லாம் செட் ஆகிடுச்சா?" என்று முதலில் மகளைப் பற்றிய விசாரிப்பை ஆரம்பித்தார் அவளது அன்னை.


"ஆமாம் மா. நான் ஓகேவா இருக்கேன்" என்று அவரிடம் நேர்மறையானப் பதிலைக் கூறினாள் மௌனா.


"சரி ம்மா" என்று திருப்தியுடன் கூறியவர்,


"அப்பறம், நாங்க ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கோம் டா" என்று மகளிடம் சொன்னார் அன்னபூரணி.


"ஏன் ம்மா இவ்ளோ சீக்கிரமாகப் கிளம்புறீங்க?" என ஏமாற்றத் தொனியில், தாயிடம் வினவினாள் மௌனா.


"ஆமாம் டா. நீங்க ஹனிமூனுக்குப் போகிறதுக்கு முன்னாடியே, கிளப்பிடலாம்னு தான்" என்றார் அன்னபூரணி.


"ம்ஹ்ம்! நாங்க இன்னைக்குத் தான், ஹனிமூனுக்கானப் பிரிப்பரேஷனை (ஆயத்தங்கள்) ஸ்டார்ட் பண்ணோம்" என்றாள் மகள்.


"நீங்க எப்போ போகப் போறீங்க?" எனக் கேட்டார் அவளது தாய்.


மௌனா,"இரண்டு நாளில் போகனும் மா" என விடையளித்தாள்.


"அப்பா பேசனும்ன்றார் டா" என்று தன் கணவரிடம் செல்பேசியைத் திணித்தார் அன்னபூரணி.


"தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,"ப்பா!"என்று தந்தையை அழைத்தாள்.


"மௌனா ம்மா! எப்படி டா இருக்க?" என்று பாசம் பொழிந்தது அவரது குரலில்.


"நல்லா இருக்கேன் ப்பா. என்றவள்,

"இவ்ளோ சீக்கிரமாக என்னை விட்டுப் பிரிஞ்சு, வேற ஊருக்குப் போகனும்னு உங்க எல்லாருக்கும் ஆசையா அப்பா?" என மனம் தாளாமல் தந்தையிடம் கேட்டு விட்டாள் அவரது மகள்.


"ஐயோ! இல்லைடா ம்மா. நாங்க அங்கே போனதும், உங்களோட ஹனிமூன் ட்ரிப் முடிஞ்சு, வர சொல்லலாம்னு இருக்கோம் டா" என்று அவளுக்குப் புரிய வைத்தார் சிவமணி.


"சரிங்க அப்பா.நீங்க ஊருக்குப் போன, அடுத்த நாள், நாங்களும் கிளம்பப் போறோம்" என்று தந்தையிடம் தெரிவித்தாள் மௌனா.


"முன்னாடியே கிளம்பினால், உங்களை வழியனுப்பி விட்டுட்டுப் போகலாம்னு நினைச்சோம் டா" என்று கூறினார் சிவமணி.


"இருக்கட்டும் ப்பா" என்றவள், அவர்கள் புறப்படும் தேதியைக் கேட்டுக் கொண்டு, அகதாவிடம் பேசினாள்.


"அகி!" என இவளது அழைப்பு, மௌனாவின் தோழிக்கு, கவலையான உணர்வுகளைக் கொடுத்தது.


"மௌனா…" என்று தயங்கிப் பேசினாள் அகதா.


"ம்ம்… நீங்க கிளம்புற டேட் சொன்னாங்க" என இயல்பாகப் பேச முனைந்தாள் மௌனா.


இவ்விடத்தில், இவளது மற்றும் அகதாவின் உரையாடல்கள் சாதாரணமாக இருக்கலாம் தான்! ஆனால், தானே எப்போதாவது பார்த்துச் செல்லும் தன் பெற்றோருடன் வாழ்நாள் முழுவதும் இவள் தங்கப் போகிறாள் என்பதை மௌனாவால் ஏற்றுக் கொள்ள முடியுமா? என்ற எண்ணம் அகதாவிற்குள் எழுந்தது.


மௌனாவின் உள்ளத்திலும், இந்த உணர்வின் மிச்சம் இருந்தது போலும்! அனால் தான், இருவருக்கிடையேயான சம்பாஷணைகள், இப்படி தடுமாற்றம் காண்கிறது.


"ஓஹ்… ஓகே மௌனா. நீ எப்போ இங்கே வர்ற?" என்று அவளைக் கேட்டாள் அகதா.


"அவர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்" என்று தோழியுடன், சிறு உரையாடலை முடித்துக் கொண்டு அழைப்பை வைத்தாள் மௌனா.


தன் கணவனிடம் வந்தவளோ,"என்னங்க! எங்கப்பா, அம்மாவும், அகியும் ஊருக்குப் போகப் போறாங்களாம்" என்று அவர்கள் புறப்படும் தேதியையும் அவனிடம் கூறினாள் மௌனா.


"சரிம்மா. நீ ஏன் டல் ஆக இருக்கிற?" என்று அவளிடம் கனிவாக வினவினான் மஹதன்.


தன் வீட்டினர் கிளம்புவதை விட, வேறெதுவோ மனைவியை வருத்துகிறது, என்பதை புரிந்து கொண்டு தான் கேட்கிறான் அவளிடம்.


"அவங்க கிளம்புறாங்கள்ல? அதான் ங்க" என்று பதிலளித்தவளை, இழுத்து அணைத்துக் கொண்டவன், "வேறெதுவோ இருக்குடா. அதைச் சொல்லு" என அவளது மனநிலையைப் பற்றிக் கேட்டான் மஹதன்.


"வேறென்ன?" என்று கணவனை நிமிர்ந்து பார்த்தவளை,"நீயே சொல்லிடு ம்மா" என்று அவள் உண்மையை உரைக்க உந்தினான் மௌனாவின் கணவன்.


"அப்பா, அம்மாவும், அகியும் என்னை மறந்துருவாங்களா மஹி?" என்று நிலைகுலைந்து போய் அவனிடம் கேட்டாள் மௌனா.


"ஏன்டா இப்படி யோசிக்கிற?" என்று அவளது நெற்றி முடியை சீராக்கிய படி கேட்டான் மஹதன்.


"இப்போ கூட அவங்க கிட்டப் பேசும் போது, அந்த பாதுகாப்பின்மை ஃபீல் ஆச்சு ங்க!" என்று விழிநீருடன் விவரித்தாள் அவனுடைய மனைவி.


"அத்தையும், மாமாவும் உன்னை மறக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை. அப்பறம், அகதாவோட வாழ்க்கையில், இரண்டாவது அத்தியாயத்தை, நீ தான் ஆரம்பிச்சுக் கொடுத்து இருக்கிற! அப்போ, அவங்க உன்னை எப்படி மறப்பாங்க? உனக்கு வந்த இந்த இன்செக்யூர் ஃபீல் மாதிரி, அவங்களுக்கு கில்ட்டி ஃபீல் வந்திருக்கும் தானே?" என்று கேட்டான் மஹதன்.


"ஆமாம் ங்க" என உணர்ந்து கூறினாள் மௌனா.


"அப்போ உன்னையும் சமாதானம் செய்து, அவங்களுக்கும் புரிய வைடா" என அவளுக்கு வலியுறுத்தினான்.


"ஷ்யூர்! தாங்க்ஸ் மஹி" என்றாள் கண்கள் மின்ன.


"ஆஹான்!" என்றவன், அவளது இதழைத் தன் வசமாக்கிக் கொண்டான் மஹதன்.

________________________


இங்கோ,'நான் என்ன தான் பண்றது கடவுளே? எனக்குள்ளே உருவாகிற குற்ற உணர்வுக்கு முடிவே கிடையாதா? என்னை எப்போ நிம்மதியாக வாழ விடப் போறீங்க?' என்று மானசீகமாக வேண்டிக் கதறிக் கொண்டு இருந்தாள் அகதா.


அதாவது, முதலில் தீபக் மற்றும் அவனது தாயின் நிலை கண்டு, அது தன்னால் தான் எனக் குற்ற உணர்ச்சியில் இருந்தவள், அதன் பின்னர், தீபக்கின் வார்த்தைகளைக் கேட்டு, மஹதனுடன் தன்னைச் சேர்த்து வைத்துப் பேசியதால், அவனுடைய மரியாதை போய் விட்டது என எண்ணிக் குமைந்தாள், இப்போது, மௌனாவின் பெற்றோரை அவளிடமிருந்து தான், பறித்துக் கொண்டு போவதைப் போல உணர்ந்தவள், அதையும் நினைத்து வருந்தியவள்,"சாரி மௌனா! நான் பேசாமல் ஹாஸ்டலுக்கே போயிட்றேன்" என்று இயலாமையுடன் பேசிக் கொண்டவள், அதை அன்னபூரணி மற்றும் சிவமணியிடமும் உரைத்து, அவர்களது அனுமதியைப் பெறுவதற்காக காத்திருந்தாள் அகதா.


"நீ எப்பவும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டியா?" என்றார் சிவமணி.


அதில், வெளுத்த முகத்துடன்,"அது வந்தும்மா…" என்று இழுத்தாள் அகதா.


"விடுங்க. அவளும், மௌனாவும் பேசிக்கட்டும்" என்று, மகளுக்குச் செல்பேசியில் அழைத்து விட்டார் அன்னபூரணி.

        

    - தொடரும் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...