முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 21

 


"ஹலோ மஹி" என்றவளது குரலில் தான் பட்டென்று அழுகையை நிறுத்திய அகதா,தோழியின் கையிலிருந்த செல்பேசியைப் பிடுங்க முயன்றாள்.


"ஹேய்! கால் கனெக்ட் ஆகிருச்சு!" என்று மெல்லிய, அழுத்தமானக் குரலில் அவளை எச்சரித்தாள் மௌனா.


"ப்ச்! ஏன்டி?" என்று மீண்டும் விழிகளில் அனிச்சையாக நீர் நிரம்பியிருக்கப் பரிதாபமாக கேட்டாள் அகதா.


அதற்குள், மஹதனின் அழைப்பு விடாமல் கேட்கவும்,"ஸ்ஸூ!" என்று அவளை அமைதியாக இருக்கும் படி கட்டளையிட்டவள், 


"சாரி மஹி!" என்றாள் மௌனா.


"என்னாச்சு ம்மா?" என அப்போது தான் அலுவலகத்தில் தன் அறைக்குள் சென்றிருந்தான் மஹதன்.


"நீங்க சொன்னவன் தான் அகதாவோட பயத்துக்கும்,பதட்டத்துக்கும் காரணம்" என்று கூறினாள் மௌனா.


"அவன் சரியானக் கிறுக்கனா? எவ்ளோ உதைக் கொடுத்தாலும் புத்தி வராதா?" என்று சலிப்புடன் வினவினான்.


"இருங்க! இதுக்கே இப்படின்னா! அகதாகிட்ட என்னச் சொல்லி இருக்கான்னுத் தெரியுமா?" எனச் சொல்லியவளிடம்,"வேண்டாம் மௌனா!" என்று சைகை செய்தாள் அகதா.


"நீ சும்மாயிரு அகி" என மஹதனுக்கும் கேட்கும் விதமாக, அவளைத் திட்டி விட்டு,


நடந்ததை அப்படியே உரைத்து விட்டாள் அவனிடம்.


"சட்!" என்று அருவருப்பில் எழுந்து நின்று விட்டான் மஹதன்.


அவனது குரலில் தெறித்த உணர்வுகள், இவளுக்கும் நன்றாகப் புரிந்தது.


தனக்கு வந்தக் கோபம், அவனுக்கும் வரும் தானே! என்று மௌனமாக இருந்தாள்.


அகதா வேறு மூலையில் அமர்ந்து கொண்டு மெலிதாக விசும்பவும்,"அம்மா வந்துடுவாங்க அகி" என அவளை உருட்டி மிரட்டினாள் மௌனா.


அவர்களுக்குத் தெரிந்து விட்டால் இன்னும் மோசமாகி விடும் என்று வாயை மூடிக் கொண்டுக் கண்ணீர் விட்டாள் அகதா.


பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறு,"என்ன உன் ஃப்ரண்ட் மூலையில் உட்கார்ந்துக்கிட்டு அழுகுறாங்களா?" என்று கேட்டான் மஹதன்.


"ம்ஹ்ம்" என ஆமோதித்தாள் மௌனா.


"இதைத் தான் செய்வாங்கன்னு எதிர்பார்த்தேன். ஊஃப்!" என்று சலித்தான்.


"அவளே பிரம்மைப் பிடிச்சுப் போயிருக்கிறா மஹி" எனவும்,


"தீபக்கை உயிரோட விட்டதே தப்பாகிடுச்சு மௌனா" என நிதானமாக கூறினான் மஹதன்.


கொலை என்ற வார்த்தையை அவன் மறைமுகமாகக் கூறியவுடன் இப்போது மௌனாவிற்கு உதறல் எடுத்தது. அவள் அதையெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட மாட்டாளே?


அது உணய்ந்தவனாக, "மௌனா" என மிருதுவாக அழைத்தான் மஹதன்.


"ஹலோ" என்றாள்.


"என்னம்மா அமைதியாகிட்ட?" என்று விசாரித்தான் மஹதன்.


அவளுக்குள் தீபக்கின் சொற்கள் எதிர்மறையானப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்குமோ? அதாவது தன் வருங்கால கணவனையும், தோழியையும் இணைத்துப் பேசி இருக்கிறானே! என்ற மன அழுத்தம் காரணமாக உள்ளுக்குள்ளேயே தகித்துக், குமைந்து கொண்டிருக்கிறாளோ? என்ற அக்கறை மிகுதியாகத் தெரிந்தது அவனுடைய குரலில்.


"அவ ரொம்ப ஃபீல் பண்றா மஹி?" என்றதும் தான் அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது.


"உனக்கு எதுவும்…" என்று இழுத்தான்.


"எனக்கு உங்க ரெண்டு பேரைப் பத்தியும் நல்லா தெரியும். இது கண்மூடித்தனமான நம்பிக்கை கிடையாது மஹி! நான் பல தடவை உணர்ந்திருக்கேன். அகியும், நீங்களும் பிரதர், சிஸ்டர் மாதிரி தான் நடந்துக்கிட்டு இருக்கீங்க!" என்று அகதாவிற்கும் கேட்குமாறு அழுத்தமாக கூறினாள் மௌனா.


"ம்ஹ்ம்… தாங்க்ஸ் மா" என்று நன்றியுரைத்தான் மஹதன்.


"ப்ளீஸ் மஹி! இங்கே இவ பண்றதையே என்னால் பார்க்க முடியலை!" என்று தோழியின் நலிந்த தோற்றம் தன்னை உறுத்தி எடுப்பதைக் கூறி அவனிடம் சங்கடப்பட்டாள் மௌனா.


"சரி சரி! கூல்!" என்று கூறியவன், "இதை எங்ககிட்ட விட்ருங்க! நீங்க மனசளவுல பாதிக்கப்படக் கூடாது! அகதாவை நல்லா கவனிச்சுக்கோ! அத்தை, மாமா கிட்ட சொல்லிட்டீங்களா?" என்று வினவினான் மஹதன்.


"இல்லைங்க. அவங்களுக்குத் தெரிஞ்சா அவ்ளோ தான்!" என்று பதறினாள் மௌனா.


"சரி சொல்லாதீங்க! யதேச்சையாகத் தெரிஞ்சா பார்த்துப்போம்! அகதா அழுகுறதைக் கண்டுபிடிச்சிட்டா, நீங்க அவங்களுக்கு உண்மையைச் சொல்லி தான் ஆகனும்!" என்றான்.


"அப்படி நடக்காமல் பாத்துக்கிறேன் மஹி" என்று தெரிவித்தாள் மௌனா.


"ஓகே ம்மா! நான் கிஷானுக்குச்‌ இன்ஃபார்ம் செய்து, அவனை இதை ஹேண்டில் பண்ணச் சொல்றேன்" என்று உரைத்து விட்டு அவர்களைப் பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டு நண்பனுக்குக் கால் செய்தான் மஹதன்.


அவன் அழைப்பை வைத்ததும்,"அழுது அழுது மூச்சடைக்கப் போகுது பாரு!" என்று அகதாவிடம் வந்தாள்.


"மௌனா…" என அழைத்தவளிடம்,


"என்னம்மா?" எனக் கனிவான குரலில் கேட்டாள் மௌனா.


"மஹதன் என்ன சொன்னார்?" என்றாள் அகதா.


"அவருக்குத் தீபக் மேல் ரொம்ப கோபம் வந்து, கொதிச்சுப் போயிருக்கார்!" என்று விவரித்தாள்.


"ச்சீ! அவன் பேரைக் கேட்டால் கூட அருவருப்பு வருது!" என்று கைகளை உதறிக் கொண்டாள் மௌனா.


"யாரோட பேரைக் கேட்டால்?" என மூன்றாவதாக ஒரு குரல் கேட்கவும், உட்சபட்ச அதிர்ச்சியில் சரேலென்று அறையின் வாயிற் புறம் திரும்பினர் மௌனாவும், அகதாவும்.


"ஹலோ பார்ட்னர்!" என்று நிலைமை தெரியாமல் வம்பிழுத்தான் கிஷான்.


"டேய்! ஒரு சீரியஸ் மேட்டர்" என்று சுருக்கமாக கூறி முடித்தான் மஹதன்.


"இந்த தடவை எல்லாத்துக்கும் சேர்த்து வச்சுக் கொடுத்திடலாம்! உயிரையும் எடுத்துடுவோம்!" என்று குரூரமாக கூறினான் கிஷான்.


இவனெல்லாம் வாழ்ந்து என்னச் செய்யப் போகிறான்? என்ற எண்ணம் தான்!


"நான் பாத்துக்கிறேன். நீ தலையிடாதே மஹத்! உன்னோட மேரேஜ் முடியிற வரைக்கும் எல்லாமே என்னோட கன்ட்ரோலில் இருக்கும்" என்று நண்பனுக்கு அறிவுறுத்தினான் கிஷான்.


"சரிடா. இவனை ஃபாலோவ் பண்ணு. இன்னமும், அதே எண்ணத்தோட எங்கேயும் போய் ஏதாவது கிறுக்கு வேலை செய்தால் போட்டுத் தள்ளிரு!" என்று கர்ஜித்தான் மஹதன்.


அவனுக்கு இந்த எண்ணம் வராமல் இருந்தால் தான் வியப்பு! அப்படி ஒரு ஆத்திரத்தில் இருந்தான் அவன்.


அகதாவைச் சமாதானம் செய்யச் சொன்னவனுக்குத் தனது கோபத்தை, அமைதிப்படுத்த இயலவில்லை. இட்படியான வழியில் ஒரு பழியையோ, வஞ்சகத்தையோ யாரும் தன் மேல் சுமத்தியதில்லை. அவனது திட்டம் கூட ஊர்ப் பார்க்கத் தங்களை அசிங்கப்படுத்துவதாகத் தான் இருக்கும் என்ற சிந்தனையும் அவனது மூளைக்கு எட்டியது.


ஒருவர் அவருடைய வாழ்வில், தன்னால் துயரம் ஏற்படுவதாக கூறி, விலக்கி வைத்தால், ஒதுங்கிச் செல்வது தான் நியதி; அதை விடுத்து, அவர்களைப் பழி வாங்க கிளம்பி விட்டால், அதற்கான பிராயச்சித்தத்தையும் பெற்றுத் தான் ஆக வேண்டும்! 


இறுதியாக, கிஷானுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதையும் அவன் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்காமல்,"சோஷியல் மீடியாவில் இதெல்லாம் சொன்னால், நம்மளைத் தான் லூசு மாதிரி பார்ப்பாங்க! ஏன்னா, சமுதாயத்தில் மஹதனுக்கு இருக்கிற வரவேற்பும், பேர் மற்றும் புகழும் நம்மளோட பேச்சையே எல்லாம் எடுபட வைக்காது! தூசி மாதிரி தட்டி விட்டுட்டுப் போயிடுவாங்க! வேற என்னப் பெருசாகப் பண்ணலாம்? அதுவும் தரமான ஆதாரம் இருக்கனும். அது அவங்களை சந்தி சிரிக்க வைக்கனும்! தூங்க விடக் கூடாது!" என்று வில்லத்தனமான பலவித திட்டங்களை ஆற அமரப் போட்டுக் கொண்டிருந்தான் தீபக்.


அகதாவை மிரட்டி வைத்துள்ளோம்! அவள் அதை மற்றவர்களிடம் சொல்லும் போது, தான் அடையாளம் தெரியாமல் சிதைந்து போக வாய்ப்புள்ளது என்பதை எல்லாம் அந்தக் கிறுக்கன் யோசிக்கவில்லை போலும்! மனப்பிறழ்வு ஏற்பட்டு விட்டவனைப் போல, தூக்கம், பசியுணர்வு இன்றி, சகலத்தையும் யோசித்துக் கொண்டு இருந்தான் தீபக்.


நாளாக நாளாக லலிதாவிற்கு மகனைப் பார்க்கவே பயமாக இருந்தது. அடுத்தவனது வாழ்க்கையைக் கெடுக்க அவ்வளவு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்பவனை என்னவென்று சொல்லித் திருத்த முடியும்? அதுவும் இந்தளவிற்கு வந்து விட்டப் பிறகு!


அவருக்குத் தன் நிலையை நினைத்துக் கலக்கமும், பயமும் வரத் தொடங்கியது போலும்! அதனால் தாமதிக்காமல், மஹதனைச் சந்திக்கச் சென்றார் லலிதா.


 ஏற்கனவே அவரது மகன் கிஷானின் ஆட்களுடைய கூரியப் பார்வைக்குள் தான் இருக்கிறான் என்பதை அறியாமல் அவரோ,"இவனைப் பார்க்கவே எனக்குப் பயந்து வருது சார்!" என்று திகிலுடன் உரைத்தவரை அமைதியாகப் பார்த்தான் மஹதன்.


அவருடைய புத்திரன் தீபக் செய்தக் காரியங்களில் பாதிக்கு மேல் இவருடைய பங்களிப்பும் உள்ளதல்லவா? அதை நினைத்து, ஏளனப் பார்வையை வீசினான் அவர் மீது!


'புதல்வன் சரியாக இருந்தால் மற்றவர்களுடைய பரிதாபத்திற்கு ஆளாக வேண்டிய கட்டாயம் இருக்காது அல்லவா? தன்னை இந்த நிலைக்குத் தள்ளி விட்ட தீபக்கை மனதினுள் அர்ச்சித்தார் லலிதா!' 


"ஹலோ! மேடம்! என்ன சொன்னீங்க?" என்று அலட்சியமாக வினவினான் மஹதன்.


அவர் வயதில் பெரியவர் என்பதால், கீழிறக்கமாக எதையும் மொழிந்திடவில்லை அவன்! அதேபோல், உரிய மரியாதையும் கொடுத்திட மனம் விரும்பவில்லை மஹதனுக்கு.


"க்கும்! தீபக் ஏதோ திட்டம் போடுறான் போல இருக்கு சார்! அவனை என்னால் கட்டுப்படுத்த முடியலை. வயசான காலத்துல கொஞ்சம் கூட நிம்மதியும் கிடைக்கலை! வயித்துக்குச் சோறு கிடைக்குமான்னு பயம் வந்துருச்சு சார்!" என்று சிறிது நாட்கள் முன்பு, அவருடைய மகன், இவனை எதற்காக சந்திக்க வந்தானோ? அதே காரணத்திற்காக வேறு விதமாகப் பேசி, ம‌ஹதனின் மனதை இளக்கித், தனக்கு ஆதாயம் பெற்றுக் கொள்ள வந்திருக்கிறார் லலிதா.


'அம்மாவுக்கும், பையனுக்கும் இதில் நல்ல பொருத்தம்!' என்று பற்களைக் கடித்தான் மஹதன்.


"என்ன சார்?" என வினவியவரிடம்,"நீக்க சொன்னதைக் கேட்டாச்சு! அதுக்கு மேல நான் என்ன செய்ய முடியும் ங்க? உங்கப் பையனுக்கு நீங்க தான் புத்திமதி சொல்லிப் பழக்கனும்! நானா அவனைத் திருத்த முடியும்?" என்று நக்கலாக கூறினான்.


"சார்… அவனைத் திருத்தனும்னு உங்ககிட்ட கேட்க வரலை நான்! உதவி ஏதாவது?" என்று தயங்கியவரிடம்,


"நான் எதுக்கு உங்களுக்கு உதவி பண்ணனும்? நீங்கப் பெத்த உதவாக்கரையே உங்களை அம்போன்னு விட்டதுக்கு அப்பறம், மத்தவங்களைத் தொந்தரவு செய்ய வந்துட்டீங்களா?" என்றான் மஹதன்.


"ஐயோ! இல்லை தம்பி!" என்று பதறினார் லலிதா.


அவன் கண்டிக்கும் குரலில் பேசியது, அவருக்கு இதயத்தை எகிறித் துடிக்க வைத்தது.


தான் அவனை விட வயதில் பெரியவள், அவனது அம்மாவைப் போன்றவள் என்று பலவித சாக்குப் போக்குகள் சொல்லி, மனதைக் கரைத்துப் பணம் பெற வந்தால், இப்படி குத்திக் குதறுகிறானே! என்ற அச்சம் உண்டானது அவருக்கு.


"உங்கப் பையன் செஞ்ச காரியத்தால் கொலைவெறியில் திரிஞ்சிக்கிட்டு இருக்கிறேன். அப்படியும் எப்படி இவ்ளோ சாதாரணமாக எங்கிட்ட வந்து பண உதவி கேட்க முடியுது உங்களால?" என்று கூர்மையானப் பார்வையுடன் கேட்டான் மஹதன்.


அந்தக் கேள்வியில் சர்வமும் ஒடுங்கி நின்றார் லலிதா.


- தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...