முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 19

 


"நிச்சயத்தில் நடந்தா மாதிரி எதுவும் ஆகாது அங்கிள்" என்று நீலகண்டனிடம் நிதானமாக சொல்லிக் கொண்டிருந்தான் மஹதன்.


அப்போது பேசிக் கொண்டிருந்தவரின் மகளும் வந்து விட,"வா முக்தா" என அவளையும் அழைத்து அமரச் சொன்னான் மஹதன்.


அவனது அழைப்பிற்குச் செவி மடுத்தவள்,"ஹாய் மஹதன்" என்றாள்.


"ஹாய்! உங்கிட்டயும் சொல்லி, இன்வைட் பண்றேன்" என நீலகண்டனிடம் கூறியதை அப்படியே அவளிடமும் கூறியவன்,"உன்னைக் காயப்படுத்திப் பேசிட்டேன்னு வராமல் இருந்திராதே முக்தா" என்ற வேண்டுகோளையும் விடுத்தான் மஹதன்.


தான் போட்டத் திட்டம் பாதி வெற்றியைப் பெற்று விட்டது என உள்ளுக்குள் குஷியாகிப் போனவள்,


"ஷூயர்!" என்று மிதமான குரலில் ஒப்புதல் கூறினாள் முக்தா.


"உன்னோட ஃபியான்சே - யை இன்வைட் பண்ணிட்டு தான் இங்கே வந்திருக்கேன்" என்று கூறினான் மஹதன்.


"ஓஹ் சூப்பர்!" எனக் கூறியவள், அவனுக்காகப் பழச்சாறு வரவழைத்தாள்.


அதை மறுக்காமல் வாங்கிப் பருகியவன்,"அப்போ கிளம்பறேன்" என்று இருவரிடமும் சொல்லி விட்டுச் சென்றான் மஹதன்.


"பையன் மாறிட்டான் போலவே முகி ம்மா! உங்கிட்ட நிதானமாப் பேசுறானே!" என்று சிறு வியப்புடன் மகளிடம் வினவினார் நீலகண்டன்.


"கிஷானும், மஹதனும் தான் ஆஃபீஸில் இருந்தாங்களே! உங்க மாப்பிள்ளை ஏதாவது நியாயம் கேட்டிருப்பாரு போலயே அப்பா" என யோசனையாக கூறினாள் முக்தா.


"ரெண்டு பேருக்கும் தகராறு ஆகியிருக்குமா டா?" என்று விசாரித்தார்.


"அப்படி ஆகியிருந்தால், மஹதன் இப்படி வந்து அழைச்சுட்டுப் போக மாட்டாரே ப்பா!" என்றாள் முக்தா.


"மாப்பிள்ளைக் கிட்டக் கேட்டுப் பாரு முகி" என்று தன் ஆர்வத்தை அடக்க இயலாமல் கூறினார் நீலகண்டன்.


அவருக்காக கிஷானுக்குக் கால் செய்தாள் முக்தா.


"சொல்லும் மா"


"ஏங்க! மஹதன் இப்போ தான் வந்துட்டுப் போயிருக்கார். நடத்தையில் இவ்ளோ மாற்றம் இருக்கே!" என்கவும்,


அலுவலகத்தில் தங்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்தவற்றைக் கூறினான் கிஷான்.


"என்னங்க இப்படி வம்பிழுத்து வச்சிருக்கீங்க?" எனச் சிரித்தாள் முக்தா.


"ஆமாம். என்ன தான் இருந்தாலும் அவன்கிட்ட உன்னை விட்டுக் கொடுக்கக் கூடாதுல்ல! அதான் வச்சு செஞ்சிட்டேன்! அவனுக்கு மண்டையில் ஏறி, ஏதோ உறுத்தப் போய் தான் வந்திருக்கான்" என்று விளக்கினான்.


"தாங்க்ஸ் கிஷான்" எனத் தெரிவித்தாள்.


"அமைதியாக இருந்துரு முகி!" என்று அவளைச் சத்தம் போட்டான் கிஷான்.


திருமணம் முடிவான பிறகு, உரிமையுள்ள உறவுகளுக்குள் நன்றி தெரிவிப்பது அந்நியமாகி விடும் அல்லவா? அதனால் தான் இந்த அதட்டல்!


"ஓகே ஓகே!" என்று புன்னகைக்கவும்,


"பார்ட்டிக்குப் போய் ஜமாய்ச்சுடலாம்! அங்கே என்ன நடந்தாலும் உனக்காகப் பேச நான் இருப்பேன் முகி!" என்று உறுதி அளித்தான் கிஷான்.


"சரி கிஷான்" என்று புன்னகைத்தாள் முக்தா.


இரு நண்பர்களையும் இணைக்கவே இந்தப் பார்ட்டி என மஹதனுக்கும், கிஷானுக்கும் இன்னும் தெரியாது! தெரிந்தாலும் என்ன சொல்லி விடப் போகிறார்கள்! என்று அவளும், மௌனாவும் அமைதியாகினர்.


"நிச்சயம் முடிஞ்சப் பொண்ணை எப்படி இங்கெல்லாம் கூட்டிட்டு வர்றது?" என்று அன்னபூரணி கவலைப்பட்டார்.


அவருக்கு மகளுக்குக் கண் பட்டு விட்டது, அதனால் தான் அனர்த்தங்கள் வரிசை காட்டி வருகிறது எனத் தோன்றியது போலும்! ஒவ்வொரு முறையும் இதைக் கூறி வருத்தம் கொண்டார் அன்னபூரணி.


எப்போதும் இப்படி அலட்டிக் கொள்ள மாட்டார். மகளுடைய வாழ்வு, சந்தோஷம் என்கையில், இதெல்லாம் அவருக்கு அறியாமலேயே வந்து விடுகிறது.


"அம்மா! நீங்கப் பயப்படுறது கரெக்ட் தான்! ஆனால், நிச்சயம் மாதிரி இதில் எல்லாருமே வர மாட்டாங்க. ப்ரஸ் கூட அலவ்ட் இல்லை. நம்ம ஃபேமிலி, ஃப்ரண்ட்ஸ் மட்டும் தான்‌" என்று அவருடைய பயத்தைத் தெளிய வைக்க முயன்றாள் அகதா.


அவளுக்கும் முதலில் விருப்பமில்லை தானே? முடிந்து போனதைக் காரணமாக வைத்து, எதையும் மறுக்கலாகாது என்ற மனமுதிர்வு வந்து விட்டது போல!


பிள்ளைகளின் சந்தோஷம் தானே முக்கியம் என்று மனைவியைச் சமாதானம் செய்தார் சிவமணி.


முக்தாவின் சமயோசிதப் புத்தியைப் பாராட்டினார் கௌசல்யா.


அவரும் முழு மனதுடன் பார்ட்டியில் கலந்து கொள்ளப் போகிறாராம்!


அனைவருக்கும் புதிய உடைகளைத் தருவித்துக் கொடுத்தான் மஹதன்.


ஒரே நிறத்தில் அவரவருக்கு ஏற்ப, சேலையோ, கவுனோ, சுடிதாரோ இவற்றில் எது வேண்டுமென்றாலும் உடுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார் கொசல்யா.


பார்ட்டியில், சோம பானம் மற்றும் இதர போதை வஸ்துக்களுக்குப் பெரிய தடை கேட்டு விட்டதால், ஆணோ, பெண்ணோ இருவருமே சங்கடமின்றி கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டான் மஹதன்.


உணவு வகைகளையும் தெரிவு செய்து வைத்தனர்.


"மஹத்! இது உண்மையிலேயே பேச்சிலர்ஸ் பார்ட்டி மாதிரி தானா? வேற எந்த உள் நோக்கத்துக்காகவும் இல்லையா?" என்று பார்ட்டி நிகழ்வதற்குச் சில நாழிகைகளுக்கு முன்னர், அவனிடம் வினவினாள் மௌனா.


எப்படியாவது அவனது வாயாலேயே அதைக் கேட்டு விட வேண்டுமென்ற ஆவல் அவளுக்கு!


ஆனால், "நோக்கம் எதுவும் இல்லை மௌனா. ஜஸ்ட் பேச்சிலர்ஸ் பார்ட்டி!" என்று அழுத்திக் கூறினான் மஹதன்.


"சரிங்க" என்றவாறு வெளியேறி விட்டாள் மௌனா.


தன்னவளது பதட்டத்தை உணர்ந்தாலும், அவளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கவே காத்திருந்தான் மஹதன்.


நிச்சயத்திற்கு என்று மண்டபம் பிடித்த மாதிரி இல்லாமல், தங்களது விருந்தினர் மாளிகையிலேயே விருந்தினர் கூட்டத்தை நடத்த முடிவெடுத்து இருந்தனர் மஹதனின் பெற்றோர்.


மிகவும் முக்கியமானவர்களைத் தவிர்த்து வேறு எவரையும் காண முடியவில்லை அங்கு!


தன் ஒரு பக்கம் தந்தையும், மறுபக்கம் கிஷானும் இருக்க, அந்த மாளிகைக்குள் நுழைந்தாள் முக்தா.


கிஷானுடைய அன்னையும், தந்தையும் வேலை ஒன்றை முடித்து விட்டு வருவதாகச் சொல்லி இவர்களை முதலில் அனுப்பி வைத்திருந்தனர்.


அவர்களை வரவேற்றவர்கள், திருமூர்த்தியுடன் மற்ற இரு ஆண்களும் சென்று விட, முக்தாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டனர் கொசல்யா.


"முகி" என்று பரிதவித்தக் கொசல்யாவைக் கனிவுடன் பார்த்தாள் முக்தா.


"ஆன்ட்டி! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னுப் புரியுது. மௌனாவே எங்கிட்ட அவ்ளோ பேசிட்டாங்க. சோ, எல்லாரும் இதையே சொல்லி என்னை நர்வஸ் ஆக வைக்காதீங்க! மறந்துடலாம்! நான் பார்ட்டியை என்ஜாய் பண்ணனும்னு தான் வந்தேன்" எனக் கடகடவென்று அவள் கூறவும், மௌனாவை நோக்கிப் போனவளை நன்றியுடன் பார்த்து வைத்தார் கௌசல்யா.


மௌனாவின் பதட்டம் நிறைந்த விழிகளை ஏறிட்டதும், அவளிடம் விரைந்தவள்,"ஹாய்!! அங்க பாரு" என மஹதன், திருமூர்த்தி, நீலகண்டனுடன் கிஷானும் நிற்பதைக் காட்டினாள் முக்தா.


"எல்லாரும் சிரிச்ச முகமாகத் தான் பேசுறாங்க" என்று அகதாவும் ஆச்சரியப்பட்டாள்.


"ஆனால் முகி! நான் அவர்கிட்ட கேட்டேனே!"


"என்னன்னு?" என்கவும், விவரித்துக் கூறினாள் மௌனா.


"கிஷான் கூட இருக்கும் போது மஹதனும், அவரும் பேசாமல் இருக்க வாய்ப்பே இல்லைம்மா. வெயிட் செய்து பார்க்கலாம்" என்று உத்தரவாதம் கொடுத்தாள் முக்தா.


"பாருங்க சம்பந்தி! இதுக்கெல்லாம் இவ்ளோ பெரிய பார்ட்டி தேவையா?" என்று கௌசல்யாவிடம் அங்கலாய்த்துக் கொண்டார் அன்னபூரணி.


அவருக்கும், சிவமணிக்கும் விஷயம் தெரியாது எனவே, "இந்தப் பார்ட்டியே எல்லாரோட மனக்குறையைத் தீர்த்து, சந்தோஷமாக இருக்க வைக்கத் தான் சம்பந்தியம்மா!" என அவரிடம் விளக்கினார் கௌசல்யா.


"அப்படியா விஷயம், சம்பந்தி? அந்தப் பொண்ணுக்காக இதைச் செய்யலாம்! இனிமேல் குறை சொல்றா மாதிரி ஒரு வார்த்தை என் வாயில் இருந்து வராது பாத்துக்கோங்க!" என்று முக்தாவைப் பற்றி உயர்வாகப் பேசினார் அன்னபூரணி.


"உன் பையன் என்னச் செய்யப் போறான்னு உனக்கே தெரியலையா?" என்று கிண்டல் செய்தார் நீலகண்டன்.


"அது எனக்கு என்னைக்குத் தெரிஞ்சு இருக்குடா?" எனத் தானும் சேர்ந்து புன்னகைத்தார் திருமூர்த்தி.


"பக்கத்தில் போய்க் கவனிப்போம். வாங்க" என்று மற்ற இருவரையும் (மௌனா, அகதா) அழைத்துச் சென்றாள் முக்தா.


"சார்! சாரி!" என்று கூறியிருந்தான் மஹதன்.


அதைக் கேட்ட கிஷானோ விறைப்பாக நிற்கவும், அதே தொனியில், தாங்கள் பேசுவதை அவதானித்துக் கொண்டிருந்த முக்தாவிடம் சென்று,


அருகிலேயே இருந்த மௌனாவைப் பார்த்துப் புன்சிரிப்பை உதிர்த்தவனோ, முக்தாவின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து,"என் நண்பனோட வருங்கால வொய்ஃப் ஆகப் போகிற உன்னை நான் மதிக்காமல் அவ்ளோ பேர் முன்னாடி அப்படி பேசினதுக்கு ரியலி சாரி முக்தா" என்றிருந்தான் மஹதன்.


அவரவர் இருக்கும் இடத்திலேயே ஸ்தம்பித்துப் போயினர் அனைவரும்.


மஹதன் கூறியதைக் கேட்ட முக்தாவோ, அவன் கேட்ட மன்னிப்பை ஏற்றுக் கொண்டதை மறந்து இமைக்காமல் நின்றாள்.


அவளது தோளை அழுத்தி, "முகி! அவன்கிட்ட ஏதாவது சொல்லு!" என்று நினைவுபடுத்தினான் கிஷான்.


"ஹாங்! இட்ஸ் ஓகே மஹதன்" என்று அவனது மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தாள் முக்தா.


"தாங்க்ஸ்" என்றவன், மௌனாவின் அருகில் நின்று கொண்டான் சற்று முன்னர் எதுவும் நடவாததைப் போல!


அவர்களைத் தனியாக விட்டுத் தள்ளிச் சென்றாள் அகதா.


சுற்றியுள்ளவர்களும் அதிலிருந்து மீண்டு விட்டப் பேச்சைத் தொடர்ந்தனர்.


"மஹி" என அழைத்தாள் தன்னவனை.


"என்னங்க மேடம்?" என்று குறுஞ்சிரிப்புடன் நோக்கினான் அவளை.


"சூப்பர் மஹி! இதை தான் எதிர்பார்த்தேன்"என்று பெருமையாக கூறினாள் மஹதனிடம்.


இதழ்களில் புன்னகையைத் தவழ விட்டான் அவன்.


இவர்களே இப்படி காதலில் மூழ்கி இருக்கும் போது, தன்னுடைய மரியாதையை மீட்டெடுத்தக் கிஷானை விழிநீருடன் அணைத்துக் கொண்டாள் முக்தா.


அங்கிருப்பவர்களுக்கு அது விரசமாகத் தோன்றவில்லை.


நீலகண்டனுக்குத் தொலைந்த தன் மகளின் புன்னகை அனைத்தும் இந்த சொந்தங்களின் உதவியால் திரும்பக் கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்திலேயே மனம் நிம்மதி அடைந்தது.


"ஓகேவா சார்? உங்க ஃபியான்சே கிட்ட சாரி கேட்டாச்சு! கல்யாணத்துக்கு வர்ற ஐடியா இருக்கா?"


"இதுக்காகத் தான் இவ்ளோ செஞ்சியாடா?" என்று பிரம்மிப்படன் கேட்டான் கிஷான்.


"ஆமாம். என்னோட தவறைத் திருத்திக்கறதுக்காக, என்னோட நண்பனுக்காக!" என்று விடையளித்தான் மஹதன்.


அவனது நன்னடத்தையைப் பாராட்டி, நட்புக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை எண்ணி, மஹதனை ஆரத் தழுவிக் கொண்டான் கிஷான்.


"இப்படியொரு பிளான் போட்டு, இவங்களைச் சேர்த்து வச்சதே நாம தான்! நம்மளையே கலட்டி விட்டுட்டாங்க பாருங்க!" என்று மௌனாவிடம் புகைந்து கொண்டிருந்தாள் முக்தா.


அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்து விட்டாள் அகதா.


"எங்க நிலைமை இப்படி இருக்குல்ல அகி" என அவளைச் செல்லமாக அதட்டினாள் முக்தா.


"நான் சொன்னேன்ல கிஷான்! மஹதன் மன்னிப்புக் கேட்டுட்டான் பாரு!" என்று மகனுடைய தோளில் தட்டிக் கொடுத்தார் காஞ்சியப்பன்.


"உங்க ஃப்ரண்ட்ஷிப்பை எதனாலும் பிரிக்கவே முடியாதுடா!" என்றார் சித்ரலேகா.


இவர்களுக்கு மத்தியில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட இன்னொரு ஜீவன் அன்னபூரணி தான். அதைப் பார்த்து கிண்டல் கூட செய்தார் சிவமணி.


குடும்பங்கள், நட்பு இவற்றிற்கிடையேயான தீர்க்கப்படக் கூடிய, நியாயமான சண்டைகளை அப்போதே பேசித் தீர்த்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், அந்தப் பந்தம் உடையாமல் இறுதி வரை அழகாய்த் தொடரும்…


அவளது இதழ் ஸ்பரிசத்தை இன்னுமின்னும் எண்ணிப் பார்த்து பூரிப்படைந்தான் கிஷான்.


அதிலும் அவள் சொன்ன,"இது இனிமேல் தொடரவே கூடாதுங்க! எனக்கு அப்பாவும், நீங்களும் , உங்க ஃபேமிலியும் போதும்!" என்று முடிவுடன் கூறியவள், அழகிய புன்னகையுடன் எப்பொழுதும் வலம் வந்தாள் முக்தா.


"லவ் யூ முகி!" என்று அவன் கூறியவுடன், அதற்கு அவளிடமிருந்து எண்ணிலடங்காத முத்தங்களையும் பெற்றுக் கொண்டான் கிஷான்.


இந்த விருந்து நடந்து முடிந்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு, கல்யாண மும்முரத்தில் இருந்தனர் மஹதனும்,மௌனாவும்.


அப்பொழுது, "ஹலோ, மௌனா! எப்போ வருவ?" என்று தோழிக்கு அழைப்பு விடுத்த அகதாவிடமிருந்து இவ்வளவு பயம் அப்பிய குரலை எதிர்பார்க்கவில்லை அவளது சிநேகிதி.


"நான் வர லேட் ஆகுமே அகி!" 


"ப்ளீஸ் முடிஞ்சா சீக்கிரம் வா!" என்று கெஞ்சினாள் அகதா.


 - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...