முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 18

 


அறைக்குள் வந்ததும், இப்படியானதொரு அழைப்பை எதிர்பார்க்கவில்லை மஹதன்.


"சார்!" என்று கிஷான் மீண்டும் அழுத்தவும்,


"வாங்க பார்ட்னர் சார்!" என்று வரவேற்றவனிடம்,


"ஃபைல்ஸைப் பார்த்துட்டால், எங்கிட்டயும் கொடுங்க.நானும் சரி பார்க்கனும்!" என்று தோரணையாகப் பேசியவனிடத்தில், ஒன்றுமே கூறாமல், கோப்பைகளை நீட்டினான் மஹதன்.


"தாங்க்ஸ்" என்றவாறு அதைப் புரட்டினான் கிஷான்.


மௌனா கூறியபடி , இவன் தன்னுடைய திருமணத்திற்கு வர மாட்டானே! எனத் தோழனையே வெறித்துப் பார்க்கலானான் மஹதன்.


சிரத்தை நிமிர்த்தாமல், அவனது பார்வை கையிலிருப்பதை ஆராய்ந்து கொண்டிருந்ததால், 


"கிஷான் சார்!" என்றான் மஹதன்.


"எஸ் பார்ட்னர்" என நிமிர்ந்தான்.


"என் எங்கேட்ஜ்மெண்ட்டில் நடந்த விஷயத்துக்காக கல்யாணத்துக்கு வர மாட்டீங்க தான?" என்று அவனது பதிலைத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்டில் வீசிப் பார்த்தான் மஹதன்.


"க்கும்! நான் ஏன் சார் உங்க கல்யாணத்துக்கு வராமல் இருக்கப் போறேன்? உங்களோட வருங்கால மனைவி மௌனா இருக்காங்களே? அவங்க என்னோட பெட்டர் ஹாஃப்க்குப் பெஸ்ட்டு ஃப்ரண்டு! அவங்களுக்காகவே முக்தா வரேன்னு சொல்லியிருக்காங்க.அதுவும் இல்லாமல், உங்களுக்கு இங்கிதம் தெரியலை, நம்பிக்கை இல்லைன்னாலும், உங்க அப்பா, அம்மாவுக்கு நல்லாவே தெரியும். சோ, கண்டிப்பாக மேரேஜூக்கு வந்து தானே ஆகனும்!" என்று கடகடவென்றுப் பொரிந்து விட்டான் கிஷான்.


அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு உள்ளம் கொதிக்க அமர்ந்திருந்தவன், மேஜையிலிருந்தக் கோப்பை எடுத்து, அதற்குரிய அலமாரியில் பத்திரப்படுத்தி வைத்தவன்,


"சோ, இப்போ நீங்க என்னோட இருக்கிறப் பார்ட்னர்ஷிப்பை முடிச்சிக்கப் போறீங்க! அதான?" என்று வினவினான் மஹதன்.


"ஹாஹா… இல்லை! இப்போ தான், இன்னும் பார்ட்னர்ஷிப்பை அதிகமாக்கிக்கத் தோனுது சார்"என்று சிரித்தான் கிஷான்.


"அப்போ வேறெந்தக் கம்பெனியை என் கூட ஷேர் பண்ணி, நடத்தத் தாயாராக இருக்கீங்க பார்ட்னர்?" என்று கிண்டலாக கேட்டான்.


"இன்னும் முடிவு பண்ணலை சார்! நல்லக் கம்பெனியாகத் தேர்ந்தெடுத்துக்கிட்டு உங்களைத் தேடி ஓடி வந்துடுவேன்!" என்றான் கிஷான்.


"யூ ஆர் ஆல்வேய்ஸ் வெல்கம் பார்ட்னர்" என மொழிந்தான் மஹதன்.


"ம்ஹூம்" என்று தலையைச் சிலுப்பிக் கொண்டு, தன் மடிக்கணினியை இயக்க ஆரம்பித்து விட்டான்.


"ஹேய் ப்ளீஸ் மௌனா" என்று அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் முக்தா.


"இல்லையில்லை முகி! நீங்க தடுக்காதீங்க" என அவளை மன்னிப்பில் குளிப்பாட்டுகிறாள்.


மஹதனிடம் பேசி விட்டு, மாத்திரை உண்டுப் படுத்து எழுந்தவளுக்கு, முக்தாவின் நினைவு எழுந்ததும், அடுத்த நாள் கால் செய்து விட முடிவெடுத்திருந்தவள், முக்தா இடையூறு செய்ய வழியே இராது, தன்னால் முடிந்தளவு அவளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள் மௌனா.


"போதும் மா. அவரையும் நான் தவறாக நினைக்கலை!" என்று முற்றுப்புள்ளி வைத்தாள் முக்தா.


"தாங்க்ஸ் முகி" என நன்றி சொல்லவும்,


"மஹதனும் , கிஷானும் ஹோட்டலில் தான் இருக்காங்களாம்" என்று அறிவித்தாள் முக்தா.


"இவர்கிட்ட ரொம்ப வாயை விட்டுட்டேன் முகி! அந்தக் கோபத்தில் எதுவும் கிஷானைப் பேசிடுவாரோ?" என்று பதட்டமடைந்தாள் மௌனா.


"அவங்களுக்குப் பல வருஷ நட்பும்மா! நீ கூலாக இரு" என்றாள்.


"அப்படின்னாலும் அவர் பேசினது உங்களை முகி?" என வருத்தமடைந்தாள்.


"என்னைத் தான? நான் அவனுக்குப் பண்ணாத கொடுமையா? விடு" என்று தடா போட்டு விட்டாள் முக்தா.


"எங்க கல்யாணத்துக்கு வருவீங்க தான முகி? கிஷான் அண்ணா ரொம்ப கோபமாக இருந்தாரே! அதான் கேட்கிறேன்!" என்றாள் மௌனா.


"கோபம் தான் அதுக்காக வராமல் இருந்திட முடியுமா? நாங்க ரெண்டு பேருமே வருவோம்" என வாக்குறுதி அளித்தாள் முக்தா.


கிஷான் வர மாட்டேன் என்று சொன்னதை மௌனாவிடம் கூற விருப்பமில்லை அவளுக்கு.


என்றாவது ஒருநாள், இருவரும் நண்பர்களாகச் சேர்ந்து விட்டால், இதைக் கொண்டு ஒரு பிரச்சினை மூண்டு விடும் எனப் புத்திசாலித்தனமாக யோசித்தாள் முக்தா. அதுவும் இல்லாமல், மூட்டிக் கொடுக்கும் வேலையும் அவளிடத்தில் இல்லை.


முக்தாவின் பதிலைக் கேட்டு, வருத்தம் களைந்து, நிம்மதி ஆக உணர்ந்தாள் மௌனா.


"அதையெல்லாம் விடும்மா. இவங்களைச் சேர்த்து வைக்கனும்னு உனக்கும் ஆசை தான?" என்று வினவினாள் முக்தா.


"அதெல்லாம் நிறைய இருக்கு முகி. ஆனால், அது நடக்கிறதுக்குள்ள எங்க மேரேஜே முடிஞ்சிடும்!" எனச் சலித்துக் கொண்டாள் மௌனா.


"அதுக்கு முன்னாடியே நம்ம சேர்த்து வைக்க, ஒரு பிளான் இருக்கு! பேச்சிலர்ஸ் பார்ட்டி!" என்று உற்சாகமாக கூறினாள் முக்தா.


"என்னது? பேச்சிலர்ஸ் பார்ட்டியா? அப்படின்னா, அது மஹதனும், கிஷானும் தானே அட்டெண்ட் பண்றா மாதிரி இருக்கும். அவங்களோட ஃப்ரண்ட்ஸ் வேணும்னா வருவாங்க. அங்க நமக்கு பிளானைச் செயல்படுத்த ஸ்பேஸே இருக்காதே முகி?" என்று தவித்தாள் மௌனா.


"நம்மையும் இன்வைட் செய்வாங்கம்மா" 


"ஜென்ட்ஸூக்கு மட்டும் தானே பார்ட்டி நடக்கும்?" 


"நீ என்ன நினைச்ச, பேச்சிலர்ஸ் பார்ரடினாலே, ட்ரிங்க்ஸ் மட்டும் தான் இருக்கும்னா?" 


"ஆமாம் முகி. பல வகையான ட்ரிங்க்ஸ், சைட் டிஷ் எல்லாம் இருக்குமாம், கேள்விப்பட்டு இருக்கேன்" 


"ஹைய்யோ மௌனா! அதெல்லாம் ஒரு சில இடங்களில் இருக்கும் தான். ஆனால், எல்லாரோட பார்ட்டிஸிலும் இருக்காது. குடிக்காமல் பார்ட்டி கொண்டாடவே முடியாதா என்ன? இதை மட்டும் நீ மஹதன்கிட்ட கேட்டிருந்தால் அவ்ளோ தான்! உன்னைப் பயங்கரமாகத் திட்டி விட்ருப்பார்!" என அவளைப் பயமுறுத்தினாள் முக்தா.


"ஏன் முகி?" என்று கலவரமடைந்தாள் மௌனா.


"கிஷானுக்கும்,அவருக்கும் குடிக்கிறப் பழக்கமே கிடையாது!" என்கவும்,


"அது தெரியும். மஹதன் எப்பவோ சொல்லிட்டாரு! அவரோட ஃப்ரண்ட்ஸ், ஆஃபீஸ் ஸ்டாஃப்ஸ்?" என்று தயங்கினாள்.


"அவங்களோட பர்சனல் விருப்பம். ஆனால், கம்பெனிக்குள்ளேயோ, அது சம்பந்தமான ஃபங்க்ஷன்ல கண்டிப்பாக ட்ரிங்க்ஸ்ஸூக்குத் தடை தான்!" என்று விளக்கினாள் முக்தா.


"அது தான் சரியானதாக இருக்கும். என்ன சொல்ற?" என்க,


"இதை நீங்க சொன்னால், கிஷான் சம்மதிப்பாரா?" என்ற வினாவை எழுப்பினாள் மௌனா.


"நான் ஏன் சொல்லப் போறேன்? நீங்க தான கல்யாண ஜோடி? அப்போ நீ தான் மஹதன்கிட்டப் பேசனும்!" என்றாள்.


"முகி! நான் எப்படிங்க?" 


"நீங்க தான் செய்யனும்ங்க!" என்று குறும்பாக கூறினாள் முக்தா.


"அவர்கிட்ட ஏட்டிக்குப் போட்டியாகப் பேசி வச்சிருக்கேன் முகி" எனச் சொல்லி முடித்தாள் மௌனா.


"நீங்க எனக்காகப் பேசியதுக்குத் தாங்க்ஸ். நானே இதை எங்க அப்பா மூலமாக, திருமூர்த்தி அங்கிள் கிட்டச் சொல்றேன். ஃபேமிலியும் கலந்துக்கனும்னும் கேட்போம்! ஆல்ரெடி, மஹதனோட ஃப்ரண்ட்ஸ் கேட்டிருப்பாங்க. சோ, ஈசியாக சக்ஸஸ் ஆகிடும் இந்தப் பிளான்!" என்று கூறியவளிடம்,


"டிரை பண்ணுவோம்" என்று கூறினாள் மௌனா.


"நான் அப்பாகிட்ட சொல்றேன்" என அழைப்பை வைத்து விட்டு, தன் தந்தை நீலகண்டனிடம்,

"அப்பா!" என்று அவரருகில் வந்தவள்,


மௌனாவுடன் பேசியதைப் பகிர்ந்து கொண்டாள் முக்தா.


"நாம சொன்னால், மாப்பிள்ளைக்கும், மஹதனுக்கும் சந்தேகம் வராதாடா?" என்று மகளிடம் கேட்டார் நீலகண்டன்.


"வந்தால் வந்துட்டுப் போகுது அப்பா! நான் தான் கேட்டேன்னுக் கூட சொல்லுங்க!" என்று கூறினாள் முக்தா.


"மூர்த்திக் கிட்ட இன்ஃபார்ம் பண்றேன்" என அப்போதே நண்பனுக்கு அழைத்து விட்டார் அவளது தந்தை.


"இவனுக்கு இதெல்லாம் இப்போ தேவையா நீலகண்டா! குதூகலமாக இருக்கிறா மாதிரியாகப் பண்ணி வச்சிருக்கான்?" என்று பொரிந்தார் திருமூர்த்தி.


"ப்ச்! முக்தாவும், மௌனாவும் கேட்டுக்கிட்டாங்கடா" எனச் சொல்லவும்,


"அவங்களுக்காகச் செய்வோம்! அதுக்கு அவன் ஒத்துக்காமல் மட்டும் இருக்கட்டும்! பாரேன்!" என்று வெடித்தார் நீலகண்டனின் நண்பன்.


சன்னச் சிரிப்புடன் அழைப்பை வைத்தவர், மகளிடம், "சக்ஸஸ்!" என்றார் நீலகண்டன்.


அதை மௌனாவிற்குக் குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டு, கிஷான் மற்றும் மஹதனின் பதில்களைக் கேட்ட ஆர்வமாகி விட்டாள் முக்தா.


இருவரும் ஒரே இடத்தில் தானே இருக்கிறார்கள்! எனவே, 


"மஹத்! பேச்சிலர்ஸ் பார்ட்டிக்கு எப்போ தேதிக் குறிச்சிருக்க?" என்று செல்பேசியில் அழைத்துக் கேட்டார் திருமூர்த்தி.


"எனக்கே ஞாபகத்தில் வரலை. உங்களுக்கு எப்படி?" என் ஒரு கணம் வியந்து போனான் மஹதன்.


அதைக் கேட்டதும், கவனத்தை அவனிடம் வைத்தான் கிஷான்.


"எங்கேட்ஜ்மெண்ட் முடிஞ்சிருச்சு. அடுத்து அது தான? உன் மகன் எதுவும் ஃபிக்ஸ் பண்ணலையான்னு என்னோட ஃப்ரண்ட் கேட்டான்" என்றார் திருமூர்த்தி.


"பேச்சிலர்ஸ் பார்ட்டியாக இல்லாமல், எல்லா கம்பெனி ஃப்ரண்ட்ஸ் தங்களோட ஃபேமிலியோட வர்ற மாதிரி பார்ட்டியை நடத்தலாம் அப்பா" என்றவன் ,"என் பார்ட்னரோட டிஸ்கஸ் பண்ணிட்டுக் கூப்பிடறேன் அப்பா!" எனக் கூறி வைத்தான் மஹதன்.


'பார்ட்னர்ன்றது நான் தானே?' என்று மனதில் நினைத்துக் கொண்டான் கிஷான்.


"ஹலோ சார்! நிமிர்ந்து பாருங்க! என்னோட பார்ட்டிக்கு வர, உங்களுக்கு நேரம் இருக்குமா?" என்று அவனை வம்பிழுத்தான்.


"நீங்க முறையாக வந்து இன்வைட் செய்தால், இல்லாமலா போகும்! அப்படி நடக்காமல் போனால், நானும் நேரமில்லைன்னு சொல்ல வேண்டியதாகிடும்… உச்!!" என்று கிண்டலடித்தான்.


"வீட்டுக்கு வரேன், இன்வைட் பண்றேன்" என ஒப்புக் கொண்டான் மஹதன்.


எதற்குத் தொல்லை என்று விலகி விடுவது ஒரு வகையான நட்பென்றால், உரிமையாக வாயடித்து, வம்பிழுப்பதும் ஒரு வகையிலான தோழமை தான் என்பதை இருவர் உணர்ந்த தருணம் அதுவாக கருதப்பட்டது.


அந்த தினத்திற்குப் பிறகு, திருமணத்திற்கு முந்தைய விருந்து வழங்கும் நிகழச்சியை நடத்துவதற்கான ஆயத்தங்களைச் செய்வதாக, மௌனாவிடம் மொழிந்தான் மஹதன்.


முக்தா தன் யோசனையை வெற்றிகரமாகச் செயல்படுத்தி விட்டால் என்று அவளுக்குப் பாராட்டுக்களைச் சொன்னாள் மௌனா.


அங்கே, நாம் எவ்வாறு செல்ல முடியும்? என்ற குழப்பங்கள் எழும்பவும், பொறுமையாக எடுத்துக் கூறினான்.


ஆனாலும், "நான் வரலை சார்" என்று மறுத்த அகதாவிடம்,"ப்ளீஸ் யாரும் மிஸ் பண்ணக் கூடாதுன்னு தான், இவ்ளோ தூரம் பேசுறேன்!" என்று அவளையும் சமாதானம் செய்து விட்டான்.


தீபக்கால் இன்னுமே அவள் தன்னிலை திரும்பவில்லை.அவன் எப்போது தன்னைப் பழி வாங்க முயல்வானோ? என்று பதைபதைப்புடன் இருக்கிறாள் அகதா.


அதனால் தான் இந்த மறுப்பு, அதையும் சரிகட்டி விட்டான் மஹதன்.


விருந்திற்கான நாள் குறிக்கப்படவும், அதை தாய் , தந்தையிடம் தெரிவித்தான் மஹதன்.


தன் வீட்டில், தந்தை காஞ்சியப்பனுடன், மஹதன் பேசுவதை ஓரக்கண்ணால் பார்த்தபடி வந்தவன்,"வாங்க பார்ட்னர்!" என்று வேண்டுமென்று தான், தகப்பனின் முன்னால், அவனை அவ்வாறு சொல்லி வரவேற்றான் கிஷான்.


"ஹாய் சார்" என இவனும் சொல்ல,


அவை யாவும் நீள்சாய்விருக்கையில் இருந்த காஞ்சியப்பனுக்கும், சித்ரலேகாவிற்கும் விநோதமாகத் தோன்றியது.


"என்ன இப்படி பேசிக்கிறீங்க? பார்ட்னர், சார்ன்னு?" என்று கேட்டார் கிஷானின் அன்னை.


"முதல்ல அவர் தான் அப்படி கூப்பிட்டார் ம்மா!" எனச் சித்ரலேகாவிடம் அவருடைய மகனைக் கைக் காட்டினான் மஹதன்.


"கிஷான்!" என்று அதட்டியவரிடம்,


"அவர் பண்ணியது ஞாபகம் இருக்குல்லம்மா? மறந்துட்டீங்களா?" என்று தோள் குலுக்கலுடன் கூறினான் அவரது மகன்.


"வந்த விஷயத்தைச் சொல்லிட்டுக் கிளம்பறேன்ம்மா" என்றான் மஹதன்.


"சொல்லு மஹத்" என்று அவன் பேச வாய்ப்பளித்தார் காஞ்சியப்பன்.


"நான் நடத்தப் போகிறப் பார்ட்டிக்கு, உங்களையெல்லாம் இன்வைட் பண்ண வந்தேன்!" எனக் கூறினான்.


ஏன் அதை அவனுடைய ஆண்,பெண் நண்பர்களுக்குமான விருந்தாக அமைக்கப்படவில்லை? என அவனிடம் வினவினார் சித்ரலேகா.


அனைவரையும் அன்புடன் உபசரிக்க வேண்டி அப்படி ஏற்பாடு செய்யப் போவதாக விளக்கிச் சொன்னான் மஹதன்.


"உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று அழுத்தினார் காஞ்சியப்பன்.


அதைக் கேட்டுத் தோழனை ஏளனமாகப் பார்த்தான் கிஷான்.


அதைப் பொருட்படுத்தாமல்,"நீங்களும் வந்துடுங்க பார்ட்னர்" எனக் கூறியவனிடம்,


"ஷ்யூர்" என்று கிஷான் சம்மதிக்கவும்,

உரிய உபசரிப்பு வழங்கிய பின்னர், அனுப்பி வைக்கப்பட்டான் மஹதன்.


அவன் கிளம்பியதும், "முக்தாகிட்ட மன்னிப்புக் கேட்க மனசில்லை. ஆனால், இவரோட பார்ட்டிக்கு மட்டும் கூசாமல் வந்து இன்வைட் பண்ணிட்டுப் போறாரு!" என்று அவனைக் குறைப் பேசினான் கிஷான்.


"பார்ட்டியில் சாரி கேட்பானா இருக்கும்டா!" என்றார் காஞ்சியப்பன்.


"இடியே விழுந்தாலும் நடக்காது ப்பா!" என்று சொல்லி விட்டுப் போய் விட்டான் மகன்.


"நீங்களும் டிரெஸ் எடுத்துக்கனும்" அந்த விருந்திற்கான உடைகளைத் தன் பெற்றோருக்காகத் தேர்ந்தெடுப்பதற்குக் கடைக்குப் போனார்கள் மௌனாவும், அகதாவும்.


"எதுக்கு மாப்பிள்ளைக்கு இந்தச் செலவு? நிச்சயம் தான் ஊர் மூக்குல விரலை வைக்கிற மாதிரி செஞ்சாச்சே?" என்று வினவினார் அன்னபூரணி.


"அன்னைக்கு யாரையுமே ஒழுங்காக கவனிக்க முடியலையாம் அம்மா. அதான், இப்போ தனியாக ஒரு மார்ட்டின்னு வைங்களேன்! மறுபடியும் எல்லாரோட வாழ்த்தும் கிடைக்குமே!" என்று பதிலளித்தாள் மௌனா.


என்னவோ! என்பது போல உடைகளைத் தேர்ந்தெடுத்தனர் சிவமணி மற்றும் அன்னபூரணி.


'இந்தப் பார்ட்டிக்கான முதன்மை நோக்கமாக, எதை நினைத்துக் கொண்டு காத்திருக்கிறான் மஹதன்?' என்ற ஐயத்தை மனதில் இருத்திக் கொண்டிருந்தான் கிஷான்.


 - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...