முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 17

 


முக்தாவின் சமாதானங்கள் யாவும் கிஷானிற்குள் எந்த விளைவையும் கொண்டு வரவில்லை.


"நாம் போகக் கூடாது தட்ஸ் இட்!" என்று அவளுக்கு மீண்டுமொரு முறை உத்தரவிட்டான்.


"இப்போ இப்படி சொல்லுவீங்க! கொஞ்ச நாள் கழிச்சு, எல்லாம் மாறிடும்" என்றாள் முக்தா.


அவளுக்கு இவர்களிருவரையும் இப்படிப் பார்க்க வருத்தமாக இருந்தது.


"அதெல்லாம் நீ ஏன் யோசிக்கிற? அவன்கிட்ட சண்டை போட எனக்கு உரிமை இருக்கு. நாங்கப் பார்ட்னர்ஸ் வேற!" என்று அவளை வீட்டில் இறக்கி விட்டு விட்டுச் சென்றான் கிஷான்.


மௌனாவிற்காக அவளது திருமணத்திற்குத் தவறாமல் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தாள் முக்தா. அந்த எண்ணத்திலேயே வீட்டிற்குள் நுழைந்தாள்.


"சொல்லு மௌனா?" என்று கிட்டத்தட்டக் கத்தி விட்டான் மஹதன்.


ஏற்கனவே , அன்றைய நாள் அளித்த, உடல் சோர்வையும், தொய்வையும் சமாளித்துத் தான், அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தாள் மௌனா.


அந்த வேளையிலும், தன்னை இப்படி நெருக்கிக் கேள்விக் கேட்பதை நினைத்து அவளுக்கு அதிகச் சோர்வைத் தந்தது.


"நீங்க என்னோட ஃப்ரண்ட்ஷிப்பை அவமானப்படுத்திட்டீங்க மஹி!" என்று சூடாகப் பதிலளித்தாள் மௌனா.


"ரியலி? என் மூலமாகத் தான் அவ உனக்கு அறிமுகம் ஆனாள்! உங்க முதல் அறிமுகம் ஞாபகம் இருக்கா?" என்று கோபமாக கேட்டான் மஹதன்.


"இல்லாமல் போவானேன்? நல்லாவே ஞாபகம் இருக்கு. ஆனால், இப்போ எனக்கு அவங்க ஃப்ரண்ட், அதை விட வெல் விஷர்!" என்று தானும் கொதித்துப் போய்த் தான் கூறினாள்.


சோர்வு தந்த அழுத்தத்தை விட, இவனுடன் விவாதம் செய்வது மிகவும் அழுத்தத்தைக் கொடுத்தது.


அதனால், "மஹி!!! எனக்கு ரொம்ப டயர்டாக இருக்கு. முக்தாவை ஏன் அப்படி பேசினீங்கன்னுக் கேட்டதுக்கு, எல்லா கோபத்தையும் என்கிட்டத் திருப்பிட்டீங்க! கிஷான் அண்ணா பேசியதும் எனக்கு நினைவில் இருக்கு. நம்ம கல்யாணம் அவங்க இல்லாமல் தான் நடக்கப் போகுது. உங்கப் பார்ட்னர் தான? முடிஞ்சா, இந்த நட்பைப் புதுப்பிச்சுக் காட்டுங்க! அதை விட்டுட்டுத், தப்பு உங்க மேல இல்லைன்னு சொன்னால், அப்படியே கடந்து போயிருங்க! குட்நைட்!" என்று மூச்சுப் பிடிக்கப் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள் மௌனா.


அகங்காரம் கொண்ட‌ மனிதன் அல்லவே மஹதன்! அதற்காக, கிஷானிடம் இறங்கிப் போக முயல்வானா? என்பதுவும் சந்தேகமே!


முதலில் கிஷான் கோபத்திலிருந்து இறங்கி வர வேண்டுமே? ஒரே கம்பெனியின் முதலாளிகளாக இருவரும் பொறுப்பேற்று இருக்க, அதற்காகவாவது, இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வேண்டுமே? 


"டிரஸ்ஸை மாத்திட்டு, தலைவலியாக இருந்தால், மாத்திரையைப் போட்டுட்டுப் படு மௌனா ம்மா" என்று மகளுக்கு அறிவுறுத்தினார் அன்னபூரணி.


அதற்கேற்றாற்போல், தன் கையிலிருந்த மாற்றுடையைத் தொய்ந்து போயிருந்த தோழியிடம் சேர்ப்பித்தாள் அகதா.


அதை வாங்கிக் கொண்டு, அறைக்குள் நுழைந்தவள், சில நாழிகைகளுக்குப் பிறகு, வெளியே வந்தாள் மௌனா.


"அங்கே சாப்பாடே வயிறு நிரம்பி இருக்கும். நீ கொஞ்சமா பால் குடிச்சிட்டு, இதைப் போட்டுக்கோ" என்று மகளின் கையில் மாத்திரையைத் திணித்தார் சிவமணி.


அவர் கூறியதைச் செய்து விட்டு, உறக்கத்தில் அமிழ்ந்து போனாள் மௌனா.


நீலகண்டனின் சொந்த விருந்தினர் மாளிகையில், அவருடன், கிஷானும் திருமூர்த்தியும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.


மஹதனின் மேலுள்ள கோபம் முழுவதையும் திருமூர்த்தியிடம் திருப்பி விடவில்லை நீலகண்டன். எப்போதும் போல உரையாடினார். 


"உங்கப் பையனையும் வரச் சொல்லுங்க! ரெண்டில் ஒன்னு இன் கேட்கனும்!" எனக் கொந்தளித்தான் கிஷான்.


மண்டபத்தில் பேசவில்லை என்றாலும், தன்னவள் அவமானப்பட்டதை‌ ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால்.


"மாப்பிள்ளை!" என்று அவனை அடக்கியவர்,


"மூர்த்தி! என் பொண்ணு முன்னே பண்ணியதுக்கு எல்லாம் உன் பையன் அவளை அசிங்கப்படுத்தியதை நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். ஆனால் இப்போ தேவையே இல்லாமல், அவளை நோகடிச்சாட்டான் மஹதன்! சாரி கேட்கவெல்லாம் சொல்ல மாட்டோம்! ஆனால், இதைக் கிஷான் விடுவதாக இல்லை. பார்ட்னர்ஷிப்பில் இருக்கிறதால், அதைக் கேன்சல் பண்ணிடுவாங்களோன்னு தோனுது!" என்றவுடன்,


மஹதனின் தந்தைக் கிஷானை ஏறிட்டார்.


"அதை முறிச்சிக்க நினைச்சா, அது உன் இஷ்டம் ப்பா! அவன் செஞ்சதுக்கு முக்தாகிட்ட மன்னிப்புக் கேட்டுட்டு, உங்கிட்டயும் வருத்தம் தெரிவிக்கனும்‌. இல்லைன்னா, மௌனாவும் அவனை விட மாட்டா!" என்று வீட்டில் நிகழ்ந்ததைக் கூறினார் திருமூர்த்தி.


"அவங்களை நினைச்சு, முக்தாவும் ஃபீல் பண்ணினா அப்பா! ஆனால், நானும், அவளும் உங்கப் பையனோட கல்யாணத்தை அட்டெண்ட் பண்ண மாட்டோம்!" என்று அவரைத் திடுக்கிட்ச் செய்தான் கிஷான்.


"என்னப்பா சொல்ற?" என்றார் திருமூர்த்தி.


"ஆமாம் அப்பா. அவனோட ஈகோ, கோபம் எல்லாம் என்னோட முக்தாவை ரொம்ப பாதிச்சிருச்சு. தான் செஞ்சக் கடந்த காலத் தப்புக்காக, இன்னும் தண்டனை அனுபவிக்கிறா! அவளுக்கு அது ஒரு விஷயமாக இல்லைன்னாலும், எனக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறதால் தான் இந்த முடிவு!" என்று விளக்கினான் கிஷான்.


தளர்வுடன் எழுந்து,"சரிப்பா. மத்ததை நீயும், மஹத்தும் பேசிக்கோங்க" என்றவர்,


"ஐ யம் சாரி நீலகண்டா! முக்கியமாக உன் பொண்ணுகிட்ட இதைச் சொல்லிடு" என நண்பனிடம் கூறி விட்டுக் கிளம்பினார் திருமூர்த்தி.


மஹதனுடைய திருமணத்திற்குச் செல்ல வேண்டாம் என்ற முடிவையே எடுத்து விட்டானே! எனத், தன் மகளின் மேலுள்ள இவனது காதலைப் பார்த்துப் பிரம்மித்துப் போனவர், அதை மகளிடமும் உரைத்து விட்டார் நீலகண்டன்.


உடனே கிஷானைப் பார்க்கச் சென்றவள், அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டது மட்டுமில்லாமல், "எனக்கு உங்களை இப்போவே கல்யாணம் செய்துக்கனும் போல இருக்குக் கிஷான்!" என்று உணர்ச்சி வசத்துடன் கூறினாள் முக்தா.


"ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் முகி!" என்றான் கிஷான்.


"போகலாமா அப்போ?" என்று குறும்புடன் வினவினாள் பெண்ணவள்.


"ம்ம்… ரெடி தான்!" என்று இவனும் புன்னகைத்தான்.


"ஒரே ஒரு ரிக்வெஸ்ட் கிஷான்!" என்று கெஞ்சினாள் முக்தா.


"என்ன அது?" 


"அவங்க மேரேஜூக்கு நாம் ரெண்டு பேருமே போகனும் கண்டிப்பாக!" என்று தன் விருப்பத்தைக் கூறினாள்.


"இவ்வளவு நல்லவளாக மாறி இருக்கக் கூடாது நீ!" என்று கோபமாகச் சலித்துக் கொண்டான் கிஷான்.


"மௌனாவுக்காக!" என்று கூறினாள் முக்தா.


தனக்கும், அவளுக்குமான முதல் சந்திப்பு எல்லாம் கிஷானுக்குத் தெரிந்திருக்கும் தான்! இப்போது இருக்கும் நட்பின் வலிமை தெரிய வாய்ப்பில்லை. மஹதன் மற்றும் கிஷானை விட இவர்களது நட்பு இன்னும் ஆழமாகி இருந்தது.


அதனால் தான், மௌனாவைச் சட்டென்று உதறித் தள்ளி விட முடியவில்லை முக்தாவால்.


"உனக்காகச் சம்மதிக்கிறேன் முகி" என்றான்.


அதில் சிரித்தவளது கன்னத்தை வருடி விட்டு,"அதுக்கு முன்னாடி அவனைக் கொஞ்சம் கடுப்பாக்கிப் பார்க்கனும்" என்று கண்ணடித்துச் சிரித்தான் கிஷான்.


"வேண்டாமே ங்க"


"ஊஹூம்! உனக்காக அவங்க அப்பாகிட்ட தான் பேசினேன். ஆனால் அவனுக்குத் திருப்பிக் கொடுக்க நிறைய இருக்கு. ஹோட்டலுக்கு வந்து தான ஆகனும்! நிச்சயமாக வரவும் செய்வான். அதில் அவன் ஷேரும் இருக்கே! திமிராக வந்து மீட்டிங் அட்டெண்ட் பண்ணுவான்" என்று மஹதனைப் பற்றிக் கூறியவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் முக்தா.


"என்ன?" என்று புரியாமல் கேட்டான் கிஷான்.


"என்ன தான் கோபம்னாலும், உங்க ஃப்ரண்டைப் புகழ்ந்து பேசிக்கிட்டு இருக்கீங்க!" என்றாள்.


"மாத்திக்கனும் இனிமேல்!" என்று கூறினான்.


"மாத்திக்கத் தேவையில்லைங்க. உங்க ஹோட்டலில் மீட் பண்ணும் போது, வாய்ச் சண்டையாகி, கடைசியில் மன்னிப்பில் வந்து முடியும்" என்று சொன்னாள் முக்தா.


"இந்தளவு நம்பிக்கைக் கூடாது முகி" என்று அவளை எச்சரித்தான் கிஷான்.


"எனக்காக நீங்கப் பேசுங்க, சண்டைப் போடுங்க… ஆனால் நடத்தப் போறது இது தான்!" என்று அடித்துக் கூறினாள்.


"ம்ஹூம்" என்று அவளிடம் வீராப்பாகப் பேசி விட்டாலும்,


தங்கும் விடுதியில், தன்னுடைய அறையிலிருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்து, கோப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த மஹதனைக் கண்டதும், 

"வணக்கம் பார்ட்னர் சார்!" என்று நக்கலாக கூறினான் கிஷான்.


 - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...