முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 7

 


"சோ, நீங்க என்னைப் பத்தி முன்னாடியே விசாரிச்சு இருக்கீங்க" என்றவாறே நிமிர்ந்து அமர்ந்தான் கிஷான். 


அசட்டையாகப் புன்னகை சிந்திய நீலகண்டன்,"வருங்கால மாப்பிள்ளையைப் பத்திக் கண்டிப்பாக விசாரிச்சு தானே ஆகனும் ப்பா!" என்றார்.


அவர் பொருட்டில் இது நியாயமான செயல் தான். கிஷானுக்குமே வருத்தம் இல்லை. யாராக இருந்தாலும் , தன் பெண்ணின் வாழ்க்கை என்று வரும் போது இதைத் தான் செய்வார்கள் என்ற புரிதல் அவனிடம் இருந்தது.


அதனால் கோபம் கொள்ளாமல்,"குட்.. அங்கிள்!" என்றான் கிஷான்.


"அதனால் உனக்கு எதுவும் மனக்குறை இல்லையே?" என்று வினவினார் நீலகண்டன்.


"இல்லை அங்கிள். நீங்க செய்தது சரி தான்" என்று அவன் கூறவும் தான், அவருக்கும் குறுகுறுப்பு நீங்கியது.


"என் பொண்ணோட கடந்த காலம் எல்லாமே உனக்குத் தெரியுமா ப்பா?" என்று முக்கியமான விஷயத்திற்குப் பேச்சை எடுத்துச் சென்றார்.


முகத்தில் தோன்றிய புன்னகையை மாற்றாமல்,"நல்லா தெரியும் அங்கிள்" என்று நெஞ்சுறுதியுடன் பதிலளித்தவனையும் அவருக்குப் பிடிக்காமல் போகுமோ?


மெச்சுதல் கூடிய பார்வையுடன் தொடர்ந்தவர்,"என்னைக்கும் இதை மாத்திக்க மாட்டியே? முக்தாவை எந்த சூழ்நிலையிலும் புரிஞ்சு வச்சுப்ப தானே?" என்று முன்பிருந்த உறுதியை விடுத்துப் , பரிதவிப்புடன் கேட்டார் அந்த தந்தை.


அவரது அருகில் சென்றான் கிஷான்.


நீலகண்டன் எழுந்து நின்று கொள்ளவும், வருங்கால மாமனாரின் இரு கரங்களைப் பற்றிக் கொண்டு,

"என்ன மாமா இப்படி கேட்கிறீங்க? நான் பாவம் பார்த்து காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். அப்படி சொல்றதும் ரொம்பவே தப்பு. அவளுக்காக அவளை லவ் பண்றேன். உங்க மகளை நல்லா பாத்துப்பேன்!" என்று கணீரென்றக் குரலில் கூறினான் கிஷான்.


வயதில் சிறியவனாகினும் தன் மனதைப் புரிந்தவன் போல, ஆறுதல் கூறியவனிடம்,"உங்க அப்பா , அம்மா…!" என்று தயங்கினார் நீலகண்டன்.


"அவங்களுக்கும் ஓகே தான் மாமா" என உரிமையோடு முறை வைத்துப் பேசினான் கிஷான்.


"மஹதனோட அப்பா , அம்மா கூட நானும், பொண்ணும் உங்க வீட்டுக்கு வர்றோம் கிஷான், அதுக்கப்புறம் பொண்ணுப் பார்க்க முறையாக வீட்டுக்கு வாங்க" என்று மகளுடைய வருங்கால கணவனிடம் தெரிவித்தார் நீலகண்டன்.


தங்களது மணத்திற்குச் சம்மதித்தவரிடம்,"ரொம்ப தாங்க்ஸ் மாமா!" என அவரை வணங்கினான்.


முக்தா தன்னுடைய அலுவலகத்தில் வேலைக் கேட்டிருப்பதைப் பற்றியும் அவரிடம் கூறினான் கிஷான்.


 "உங்க ஆஃபீஸில் தானே மாப்பிள்ளை.சேஃப் ஆக இருப்பா" என்று அதற்கும் ஒப்புதல் அளித்தார் நீலகண்டன். 


அவருக்கு மறுபடியும் நன்றி சொல்லி விட்டு சென்றான் கிஷான்.


வீட்டிற்குப் போன நீலகண்டனோ , முதல் வேளையாக மகளிடம் அனைத்தையும் ஒப்புவித்தார்.


 "தாங்க்ஸ் அப்பா!" என்று உருகிப் போனவள் அவர் அகன்றதும்,


விரைந்து போய் அன்னையின் படத்திற்கு முன்னால் நின்று கொண்டாள் முக்தா.


"எப்பவும் உங்களோட ஆசீர்வாதம் தான் அம்மா எனக்கு உறுதுணையாக இருக்கு!" என்று மனதிற்குள் தாயுடன் உரையாடினாள்.


புகைப்படத்தில் இருந்த அவளது அன்னை தேன்மொழியின் சாந்தம் தவழும் புன்னகையில் இருந்தது, தன்னை அவர் ஆசீர்வதிப்பதைப் போல உணர்ந்தாள் முக்தா.


தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு, மௌனாவிற்கு அழைத்தாள். 


"ஹாய் முகி!!" 


"மௌனா! எப்படி இருக்கே?" என்று ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டவர்கள், நடந்ததையெல்லாம் விவரமாகப் பேசி,


"அப்போ என் கூட ஷாப்பிங் வரனும் நீங்க?" என்று அவளிடம் ஏக்கமாக வினவினாள். 


"வர்றேன் ம்மா" என்றாள் முக்தா.


இவர்களுடன் அகதாவும் இணைந்து கொள்ளப் போகிறாள்.


மௌனாவுடன் தான் இன்னமும் தங்கி இருப்பவள், தன் வேலையில் முழு கவனத்தைச் செலுத்தி மென்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறாள் அகதா.


இன்னும் தீபக் அவளுக்குத் தொல்லைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறான். அதை ஒதுக்கித் தள்ளி விட்டுக் கொண்டிருக்கிறாள் அகதா. அவன் மற்றும் அவனுடைய தாயாருக்கும் விரைவில் முடிவு கட்ட எண்ணி இருக்கிறான் மஹதன்.


"உன் கார்ட் , என்னோடது ரெண்டையும் எடுத்தாச்சு" என்று கைப்பையை மாட்டிக் கொண்டவர்கள், வீட்டைப் பூட்டி விட்டு, முக்தாவின் மகிழுந்திற்காக காத்திருக்கலானார்கள்.


சரேலென்று அவர்களின் அருகே வந்து நின்ற மகிழுந்தின் இடப்பக்கக் கண்ணாடி இறக்கப்பட்டது.


"ஹாய்! ஹாய்!" என்று கூக்குரல் இடவும்,


"வந்துட்டோம் முகி" எனக் காரினுள் ஏறினர் மௌனாவும், அகதாவும்.


பிரத்தியேகமான வடிவமைப்புகள் கொண்ட உடைகள் மற்றும் மற்ற அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டவர்கள், மதிய உணவையும் அங்கு வரவழைத்துச் சாப்பிட்டனர்.


மாலை அவர்களை வீட்டில் விட்டு விட்டுச் சென்றாள் முக்தா.


தன் மனைவியிடம் நண்பன் கேட்டுக் கொண்ட விண்ணப்பத்தைச் சொன்னார் திருமூர்த்தி.


"போகலாம் ங்க" என்றார் கௌசல்யா.


கிஷானைப் பார்க்கவென்று அவர்கள் வீட்டிற்குச் செல்ல ஆர்வமாக இருந்தாள் முக்தா.


"நீலகண்டா! முக்தாவைக் சேலை கட்டிட்டு வர சொன்னியா என்ன?" என்று கேட்டார் அவருடைய தோழன்.


"இல்லை மூர்த்தி. ஏன்?" 


"அவங்க அம்மாவோட சேலையைக் கட்டிக்கிட்டு வரலாமான்னுக் கேட்கிறா உன் பொண்ணு!" என்றார்.


"அந்த சேலையெல்லாம் அயர்ன் பண்ணும் போதே நினைச்சேன். தங்கச்சி என்ன சொன்னாங்க?" என்று வினவினார் நீலகண்டன்.


"கௌசியே சேலையைக் கட்டி விட்றேன்னு சொல்லியாச்சு. அங்கே கிளம்பி வந்துடவா நாங்க?" என்று கேட்டார் திருமூர்த்தி.


"வேண்டாம் டா. நானும் , முகியும் உங்க வீட்டுக்கு வர்றோம்" என்று முடிவாகச் சொன்னார்.


தாயின் பாரம்பரிய புடவைகளில் இருந்து தனக்குப் பொருத்தமான நிறத்தில் இருந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து , அதை எடுத்துக் கொண்டு மஹதனின் வீட்டிற்குத் தந்தையுடன் சென்றாள் முக்தா.


"மாப்பிளாளைத் தோழனாக நீ கூட இருடா!" என்று அன்றைய நிகழ்விற்கு மஹதனைத் தனக்குத் துணையாக இருக்கச் சொன்னான் கிஷான்.


"கல்யாணத்துக்குத் தான் துணை மாப்பிள்ளை வேணும்டா!" என்று கிண்டலடித்தவன், முடிந்தளவு வேலைகளை முடித்துக் கொண்டு வருவதாக உத்தரவாதம் அளித்தான் மஹதன்.


முதலில் நடக்கவிருக்கும் திருமணம் மௌனா மற்றும் மஹதனுடையது என்பதால், தன் மகளைக் கவனித்துக் கொள்வதற்காக சிவமணியும், அன்னபூரணியும் சொந்த ஊரிலிருந்து வந்து கொண்டிருப்பதால், அவர்களை அழைத்து வர மௌனாவும், அகதாவும் சென்றிருந்தனர். அதனால் அவர்களாலும் கிஷானுடைய இல்லத்திற்கு வர முடியவில்லை.


மகள்களுக்காக விதவிதமாக உணவு சமைத்து இரு கைகளிலும் அடங்காத பைகளுடன் பேருந்தில் இருந்து இறங்கினர் மௌனாவின் பெற்றோர்.


"அங்கே பாரு அகி!" என்று அவர்களிடம் போயினர் தோழிகள்.


"மௌனா! அகதா!" என்று பெண்களைக் கரிசனத்துடன் நோக்கினர் சிவமணி மற்றும் அன்னபூரணி.


"இப்படி பிடிச்சிக்கிட்டா உனக்குத் தொந்தரவாக இருக்காது" என்று சேலையைக் கையாளும் முறையையும் முக்தாவிற்குக் கூறி முடித்திருந்தார் கௌசல்யா.


 - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...