முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 3

 


முக்தாவின் வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி அறிந்து கொண்ட கிஷானுக்கு மனம் வலிமையை இழந்தது.


அப்போது தான், அவள் மேல், அவன் கொண்ட காதல் தெரிந்தது.


"டேய்! மஹத்" என நண்பனை அழைத்தான் கிஷான்.


"என்னடா?" என்று சாதாரணமாகப் பேசிய மஹதனிடம்,


கிஷான்,"முக்தா!" என்கவும்,


"அவளுக்கு என்ன?" 


"ஃபாரீனுக்குப் போயிட்டாங்கன்னு உனக்குத் தெரியும் தானடா?" என்று விரக்தியுடன் கேட்டான் தோழன்.


"தெரியும். அப்பா சொன்னார். நீ ஃபீல் பண்ணுவன்னும் தெரியும்" என்று சேர்த்துச் சொன்னான்.


"மஹத்" குரலை உயர்த்தவும்,


"என்னை வேற என்ன சொல்ல சொல்ற கிஷான்?" என்று அவன் கோபத்திற்குக் கண்டனம் தெரிவித்தான்.


சினம் கொண்டு என்ன சாதிக்க முடியும் என்று அமைதியாகி விட்டான் கிஷான்.


ஆனால் , இதற்கு மாறாக , 

 வெளிநாட்டில் ஆனந்தமாக தோழிகளுடன் சேர்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தாள் முக்தா.


அவளுடைய பிரியமான தோழிகள் எல்லாரும், முக்தா அழைத்தும் வர முடியாது என்று சொல்லி விட்டனர்.


அதனால், தன்னுடன் பயின்ற ஒரு சில கல்லூரிக் கால சிநேகிதிகளுடன் கிளம்பி விட்டாள்.


செல்லும் இடமெல்லாம் எதாவது பொருளை வாங்கி அவர்களுக்குப் பரிசளித்து விடுவாள் முக்தா.


அதனாலேயே, எதிர்காலத்தில் இன்னுமின்னும் அவளுடன் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளனர் அந்த சிநேகிதிகள்.


"நாம தான் இன்ஸ்டாகிராமை அலற வச்சிட்டு இருக்கோம்!" என்று தொழிகளில் ஒருத்தி ஆர்ப்பரித்தாள்.


"அத்தனை ஃபோட்டோஸையும் அப்லோட் பண்ணிட்டியா ஸ்ருதி?" என்று கேட்டாள் முக்தா.


"யெஸ்! எடுக்க எடுக்க அப்லோடிங் தான்!" 


அவர்களது மனநிலை எல்லாம், மற்றவர்கள் தங்களைப் பார்த்துப் பொறாமைக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே!


அதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நிலையில் முக்தா இல்லை.  


"ஃபரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு நான் சொல்ற, பிரபலமான நியூஸ் பேப்பர்களில் பேசி விளம்பரம் கொடுங்க. நம்மளோட ஆஃபிஷியல் (அதிகாரம் சார்ந்த) மெயிலை (மின்னஞ்சல்) சரியாக அனுப்புங்க. இன்டர்வியூவுக்கு (நேர்காணல்) வர்றவங்களை கரெக்டா வழி காட்டுங்க!" என்று தன்னுடைய விடுதியில் நடத்தப்படும் நேர்காணல்களை மேற்பார்வையிடும் குழுவிற்கு அறிவுறுத்தினான் மஹதன். 


அவன் தன் மகளைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அலுவலகப் பணிகளைச் செவ்வனே நடத்திக் கொண்டார்கள் என்பது கண்டு நீலகண்டனுக்கு குறுகுறுப்பு உண்டாயிற்று.


மகள் அவனை விட்டு தூரம் சென்றும் கூட, கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை அவனுக்கு, எனும் நிதர்சனம் நீலகண்டனைத் தாக்கியது.


உடனே அவளை இங்கு வரவழைக்க முடிவு செய்தார்.


அதற்குள் முக்தாவே தந்தைக்குக் கால் செய்து நிலவரத்தைக் கேட்டாள்.


"அப்பா! மஹதனுக்கு என்னோட நினைப்பு இருக்கா? உங்ககிட்ட ஏதாவது விசாரிக்குறாரா?" 


மகளிடம் பொய் சொல்லத் துணியவில்லை நீலகண்டன்.


"இல்லை முகி. அவனோட ஹோட்டலை டெவலப் பண்ணிட்டுத் தான் இருக்கானே தவிர, உன்னோட நினைப்புக் கொஞ்சமும் இல்லை!" என்று குறைபட்டார் தந்தை.


"என்னப்பா சொல்றீங்க?" என்று வருத்தத்துடன் கேட்டாள் மகள்.


அப்படியென்றால், அவன் தன்னை மதிக்கவே இல்லை என்பதை இன்னும் ஆழமாக உணர்ந்து கொண்டாள் முக்தா.


இன்னுமே விட்டு விட முடியாமல், முரண்டியதால், "நான் அங்கே கிளம்பி வர்றேன் அப்பா!" என்று கூறினாள்.


"வேணாம் டா. நீ என்ஜாய் பண்ணு" என்க,


"இங்கே நான் ஜாலியாக இருந்தால் அங்கே என் வாழ்க்கைப் போயிடும் அப்பா. நான் வர்றேன்" என்று உறுதியாக கூறிய மகளை வரவேற்கத் தயாராகி விட்டார் நீலகண்டன்.


முன் அலுவலக வரவேற்பாளர் பணிக்கான நேர்காணலுக்கு என்று விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் இருந்தது.


அவற்றைப் பொறுப்பாகப் பார்த்து, தகுதியான ஒரு சிலருடைய விண்ணப்பங்களைத் தனியாக எடுத்து வைத்தார் மேனேஜர்.


அதில் , ஒரு பெண்ணுடைய விண்ணப்பப் படிவம் இவர்களது கவனத்தைக் கவர்ந்தது.அதை தனியாக எடுத்து வைத்தனர்.


"மகனே! இங்கே வாங்க" என்று கிஷானை அழைத்தார் அவனது தந்தை காஞ்சியப்பன்.


அவனுடைய கவலை படிந்த முகத்தைக் கண்டு வெகு நாட்கள் ஆயிற்று. இப்போது என்னப் பிரச்சினை என்று கேட்டு சரி செய்வதற்காக அழைத்தார் தந்தை.


"என்னப்பா?" என்று அருகே போனான் கிஷான்.


"லேகா!" என்று உள்ளே மேற்பார்வை செய்து கொண்டிருந்த மனைவியையும் கூப்பிட்டு விட்டு, மகனுடைய தோளில் கையைப் போட்டுக் கொண்டார் காஞ்சியப்பன்.


தந்தையின் செயலைப் பார்த்து புன்னகைத்தான் கிஷான்.


சித்ரலேகா அங்கே பிரவேசித்தவுடன்,

கணவன் மற்றும் புத்திரனை ஆராய்ந்து விட்டு அமர்ந்தார்.


"உன் மகனுக்கு ஏதோ மனக்கஷ்டம் இருக்கு போல?" என்றார் காஞ்சியப்பன்.


அவரது மனைவியுமே,"இருக்கு போலத் தான்ங்க! எதையும் நம்மகிட்ட மறைக்க மாட்டாரே?" என்று பிகு செய்தார்.


தாய் மற்றும் தந்தையின் உரையாடல்களைக் கேட்டவனோ,

"நேரடியாகவே என்ன விஷயம்னு கேட்டு இருக்கலாம் நீங்க?" என்றான் குறுஞ்சிரிப்புடன்.


"சரி. என்ன விஷயம் கிஷான்? ஏன் இப்படி இருக்கிற?" என்று கேட்டார் சித்ரலேகா.


"இப்படி ஃப்ரண்ட்லியா இருக்கீங்க, அதனால் உங்ககிட்ட நான் விஷயத்தைச் சொல்லத் தயங்கலை. சொன்னால் என்ன ரியாக்ட் பண்ணுவீங்கன்னு யோசிச்சா தயக்கமாக இருக்கே!" 


"எங்ககிட்ட சொல்றதுக்கு நீ தயக்கம் காட்றியா?" என்று வியந்தார்கள் இருவரும்.


"விஷயம் அப்படி அப்பா!" என்றான் மகன்.


"அப்படி என்ன தான்னு சொல்லு கிஷான்!" அவசரப்படுத்தினார் காஞ்சியப்பன்.


"நீலகண்டன் சாரோட பொண்ணு முக்தாவை நான் லவ் பண்றேன்!" என்று இருவரையும் பார்த்துக் கூறியே விட்டான் அவர்களது புத்திரன்.


கேட்டதும் திகைப்பு ஏற, 

"அவரோட பொண்ணையா?" என்று அதிர்ந்து போய்க் கேட்டார் சித்ரலேகா.


அவரது அதிர்ச்சிக்குக் காரணம், முக்தா திருமூர்த்தியின் மகனை விரும்புவது தான்!


"தெரிஞ்சு தான் லவ் பண்றியா?" என்று மகனிடம் கேட்கவும் மறக்கவில்லை காஞ்சியப்பன்.


"ஆமாம் ப்பா! மஹதனுக்கும் நான் முக்தாவை லவ் பண்ற விஷயம் தெரியும்" என்று விளக்கினான் கிஷான்.


"நீலகண்டன் சாருக்குத் தெரியுமா?" 


"தெரியாது அம்மா" என்றான்.


"முக்தாகிட்ட சொல்லிட்டியா?" 


"சொல்லிட்டேன் ப்பா. அவங்களுக்கு விருப்பமில்லை" என்று பொய்யுரைக்காமல் பேசினான் கிஷான்.


"எல்லாத்தையும் தெளிவாகச் சொல்றியே! அப்பறமும் ஏன்?" என்று கேட்டார் சித்ரலேகா.


ஒருவேளை அவள் மஹதனை மணந்து கொண்டால், தன் மகன் மனமுடைந்து போய் விடுவான் என்ன பயம் இருக்கும் அல்லவா அவருக்கு.


"தெரியலை அம்மா! எப்போதாவது அவங்களைப் பார்த்துப் பேசி இருக்கேன்.ஒரு வருஷமாச்சு.ஆனால், லவ் வந்தது இப்போ தான். மனசுக்குள்ள இருந்திருக்காங்க, அதை தெரிஞ்சுக்க நாளாகிடுச்சு" என்று கூறினான் கிஷான்.


"என்னென்னமோ சொல்றடா! முக்தாவுக்கே பிடிக்கலையே…" என்று தயங்கினார் காஞ்சியப்பன்.


"அவங்களுக்குப் பிடிக்கும் அப்பா!" என்று உறுதியாக கூறியவனிடம்,


"ஃபோர்ஸ் பண்ணப் போறியா?" என்று கேட்டார் சித்ரலேகா.


அதில் புன்னகைத்தவன்,"யாரு நானா ஃபோர்ஸ் பண்ணிக் காரியம் சாதிக்கப் போறேன்! நீங்க வேற ம்மா! வெயிட் பண்ணுவேன். அவ்ளோ தான்! ஃபோர்ஸ் பண்றதை விட காத்திருக்கிறது வேற லெவல் ஆக இருக்கும்!" என்று தத்துவம் பேசினான் கிஷான்.


"நாங்க என்ன பொல்லுவோம்னு எதிர்பார்க்கிற?" என்றார் காஞ்சியப்பன்.


"விட்டுடுன்னு சொல்லப் போறீங்களா?" 


அதைக் கேட்டு ஹாஸ்யமாக சிரித்தவர்,"இல்லை. யாரையும் கஷ்டப்படுத்தாமல், உன்னோட லவ் சக்ஸஸ் ஆகட்டும்னு விஷ் பண்ணப் போறோம்!" என மனைவியைப் பார்த்தார்.


அவருக்கும் சஞ்சலம் இல்லாத சம்மதம் தான் என்பது முகத்தில் தெரியவும்,


"ஆல் தி பெஸ்ட்!" என்று மகனுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர் பெற்றோர்.


அவர்கள் இருவரையும் கட்டிக் கொண்டான் கிஷான்.


"ஆனால் முக்தா கடைசி வரைக்கும் மாறலை, மஹதனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறான்னுத் தெரிஞ்சா, நீ என்னப் பண்ணனும்னு உனக்குத் தெரியும் தான?" என்றார் சித்ரலேகா.


"விலகிடுவேன்! மறந்துடுவேன் அம்மா" என்று அவருக்கு உறுதி அளித்தான்.


"நாங்களா நீலகண்டன் சார் கிட்ட எதுவும் கலந்து பேச மாட்டோம் கிஷான். இது முழுக்க முழுக்க உன்னால் முடியனும். முக்தாவோட முழு விருப்பம் ரொம்ப அவசியம்!" என்று தெளிவாக அறிவுரை கூறினார் காஞ்சியப்பன்.


அதையும் ஒப்புக் கொண்டான் கிஷான்.


இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து, தாயகம் திரும்பி விட்டாள் முக்தா.


                - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...