முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நங்கையின் மறவோன் 22

 


'தன்னுடைய தோழி அகதாவை மட்டும் தான் இவனுக்குத் தெரியும்!' என்று இவள் எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில், 


"உன்னோட ஃப்ரண்ட் தான அகதா?" என்று வினவினான் மஹதன். 


"ஆமாம் சார். அவளுக்கு என்ன ஹெல்ப் செய்தீங்க?" என்று கேட்டாள். 


"அவங்களோட ஹஸ்பண்ட் பேர் தீபக் தான?" என்று கேட்டதும், ஆமாமென தலையசைத்தாள் மௌனா. 


"அப்போ நான் சொல்வதைப் பொறுமையாக கேளுங்க" என்று அவளிடம் எல்லாவற்றையும் தெளிவாகக் கூறி முடித்தான் மஹதன். 


'இவன் தான் அகதாவிற்கு உதவி செய்து இருக்கிறான். அப்படியென்றால், தீபக்குடன் பிரச்சினை என்று அவள் சொல்லும் போது, தனக்கு மஹதன் உதவி செய்ததை ஏன் தன்னிடம் கூறவில்லை?' என்று குழப்பத்தில் ஆழ்ந்தாள். 


"ஹலோ! எக்ஸ்க்யூஸ்மீ ! மிஸ். மௌனா!" என்று அவளை இருமுறை அழைத்தான். 


"ஹாங்! சார்! அவ இதைப் பத்தி எங்கிட்ட இன்னும் எதுவுமே ஷேர் பண்ணல.அதான் குழப்பமாகிட்டேன்.ரொம்ப தாங்க்ஸ் சார். அவளுக்குச் சரியான நேரத்தில் உதவி செய்தீங்க" என்று உளமார்ந்த நன்றியைத் தெரிவித்தாள். 


"தாங்க்ஸ் இருக்கட்டும். நீங்க என்னைப் பார்க்க வந்ததைப் பத்தி இன்னும் சொல்லலையே?" என்று அவளைக் கூர்ந்து பார்த்தான் மஹதன்.


"அதைக் கண்டிப்பாக இப்போவே சொல்றேன். ஆனால் அதுக்கு முன்னாடி, அகதாவுக்காக எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா சார்?" என்று அவனிடம் கோரிக்கையை வைத்தாள் மௌனா. 


"உங்க ஃப்ரண்ட்டுக்காக என்கிட்ட ரெக்கமெண்டேஷனுக்கு வந்து இருக்கீங்களா மேடம்?" என்று பட்டென்று கேட்டு விட்டான் மஹதன். 


அதைக் கேட்டதும், முகம் சுருங்கிப் போய் விட்டது மௌனாவிற்கு.


"ஆமால்ல சார்! சரி நானே பாத்துக்கிறேன்" என்று அவள் எழுந்து செல்ல முயலும் போது, 


"ப்ச்! அதுக்குள்ள எங்கிட்ட கோபப்பட்ற பார்த்தியா மௌனா? உனக்கு நான் ஹெல்ப் பண்ண எப்பவும் தயார். அதுவும் இல்லாமல், அவங்களை ரோட்டில் வச்சு அசிங்கப்படுத்துனதைப் பார்த்த அப்பறம், எனக்கே ரொம்ப கோபம் வந்துடுச்சு. உண்டு இல்லைன்னு பண்ணலாம்னு வெயிட்டிங்ல இருந்தேன். அதுக்குள்ள நீயே இதைக் கேட்டுட்ட. நான் என்னப் பண்ணனும்னு சொல்லு?" என்று அவளிடம் தன்மையாக கேட்டான் மஹதன்.


ஏற்கனவே இவனிடம் தன் மனம் பொருந்தி விட்டதால், தயக்கமின்றி தோழியைப் பற்றி விவரித்தாள் மௌனா.


அகதாவும் தன் வாழ்க்கையைப் பற்றிக் கூறி இருக்க, இப்போது மௌனாவும் முழுவதையும் சொல்லி முடித்தாள். 


"அகதாவுக்குன்னு யாருமே இல்லை சார். ஆனாலும் அவ ரொம்ப உறுதியான, தைரியமான பொண்ணு. ஆனால், இப்படி இருக்கிறவங்களோட உணர்வுகளோட விளையாடுறாங்க" என்று கசப்பான புன்னகை ஒன்றை உதிர்த்தாள் மௌனா. 


அவளை இமைக்காமல் பார்த்தான் மஹதன்.தன்னவளின் பாசத்தில் பங்கு கொண்டிருந்த அகதாவை நினைக்கையில், அவனுக்குக் கொஞ்சம் பொறாமையாகத் தான் இருந்தது. 


"தீபக் அப்பறம் அவரோட அம்மாவை எப்படியாவது அடக்கி ஒடுக்கி, பயமுறுத்தி வைக்கனும்" என்று தீவிரமாக கூறிவளைப் பார்த்தவனுக்குக் குறுஞ் சிரிப்பு வந்தது. 


"அதுக்கு என்னப் பண்ணலாம்?" என்று அவளிடமே யோசனை கேட்டான். 


" முகமூடி போட்ட ஒரு சிலரை அனுப்பி , அவங்களை மிரட்டி வைக்க முடியுமா சார்?" என்று கேட்டாள் மௌனா. 


"அது வேண்டாம் மா. அகதாவே இதை தைரியமா எதிர்க்கனும்" என்று முடிவாக கூறினான் மஹதன். 


"அது எப்படி முடியும் சார்?" என்று புரியாமல் கேட்டாள். 


"அந்தப் பொண்ணுக்கு யாருமே இல்லைன்றது தான அவங்களோட ப்ளஸ். அதை முதலில் உடைக்கனும். ஒரு நம்பிக்கையான வாழ்க்கையை உன் ஃப்ரண்ட்டுக்காக தயார் பண்ணும்மா. அப்பறம் அவங்களுக்கே எதிர்க்கிற தைரியம் வந்துடும்.இட்ஸ் வெரி சிம்பிள்" என்று தனக்குத் தெரிந்த சிறந்த வழியைக் கூறினான். 


"ம்ஹ்ம்! ஐடியா நல்லா தான் இருக்கு சார். ஆனால், அவளுக்கான வாழ்க்கையைக் , குடும்பத்தை நான் எங்கேன்னு தேட்றது?" என்று யோசித்தாள். 


"எதாவது வழி கிடைக்கும் மௌனா" என்று நம்பிக்கை கொடுத்தான். 


"தாங்க்ஸ் சார்" என இதழ் விரித்துச் சிரித்தாள் மௌனா. 


"நீ என்னைப் பார்க்க வந்த விஷயம்?" என்று அவளுக்கு ஞாபகப்படுத்தினான். 


அப்படி கேட்டதும், 

தாமாகவே நாணம் கொண்டாள் பெண்ணவள்.மஹதனுக்கு அவளது உதடு துடிப்பது நன்றாகத் தெரிந்தது.


'இந்த ரியாக்ஷன் எல்லாம் உண்மையிலேயே நம்மளைப் பார்த்துத் தான் வருதா?' என்று அவளை உற்றுப் பார்த்தான் மஹதன். 


அதில் சமாளித்துக் கொண்டவள், 

"உங்கப் புரபோஸலைப் பத்தி யோசிச்சுப் பார்த்தேன் சார். நம்ம ஸ்டேட்டஸ்?" என்று தடுமாறினாள் மௌனா.


அதில் பெருமூச்செறிந்தவாறு, 

"அதுனால என்ன மா?" என்று வினவினான். 


"நீங்க பணக்காரர்" என்று தன்னுடைய மனக்கிலேசத்தை மறைக்காமல் கூறினாள். 


"நம்மளோட முதல் மீட்டிங் ஞாபகம் இருக்கா மௌனா?" 


"இருக்கு சார்" 


"முக்தா அவ்வளவு பணத்திமிரில் பேசும் போது, தைரியமாக நின்னுப் பதில் சொன்னியே? அப்போ அந்தப் பணம் ஒரு பொருட்டாகவே இல்லை. ஆனால் என்னோட லவ்வைப் பத்தி யோசிக்கும் போது, இப்போ அந்த ஏற்றத்தாழ்வு குறுக்கே வருதுல்ல?" என்று அடிபட்ட உணர்வுடன் கேட்டான் மஹதன். 


"சா.. ர்!" என்றவளுக்கு அவனை வெகுவாக காயப்படுத்தி விட்டோம் என்பது புரிந்தது. 


"ஆனால் ஒரு விதத்தில், இதை நீ இப்போவே சொன்னதால், எனக்கு நிம்மதியாக இருக்கு மௌனா.எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. அவ்ளோ தான்! உனக்கும் என் மேல் லவ் இருக்கு. அதை மட்டும் யோசி.அப்பா, அம்மா கிட்ட பேசு. இந்த ஸ்டேட்டஸ்ங்குற பேச்சு வந்தால், நானே நேரில் வந்து பேசறேன்" என்று அவளிடம் தெளிவாக கூறியவனைத் தயக்கத்துடன் பார்த்தாள். 


" உன்னோட சைட் பார்த்து, நீ சொல்லியிருக்க! அதை நான் மனசில் வச்சுட்டு, சொல்யூஷன் கண்டுபிடிக்கிறேன்" என்று வாயிலைக் காண்பித்தான் மஹதன். 


மௌனமாக அங்கிருந்து வெளியேறினாள். 


"லவ் புரபோஸலைத் தவிர, மத்த எல்லாத்தையும் பேசிட்டா' என்று சலித்துக் கொண்டான். 


தன்னிடம் அவளுடைய காதலை வார்த்தைகளால் தெரிவிப்பால் என்று காத்திருந்தான் மஹதன். ஆனால், அது இறுதி வரை நடக்கவே இல்லை. 


" இன்னும் வெயிட் பண்ணனுமோ?" என்று யோசித்தான். 


தன் இடத்தில் நின்று கொண்டு, குதூகலமான மனநிலையுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த மௌனாவைப் பார்த்து,

'இன்னைக்கு ரொம்ப குஷியாக இருக்காங்க!' என்று நினைத்தான் கிஷான்.


அவனது வரவை அறிந்ததும், 

"குட் மார்னிங் சார்!" என வாழ்த்துச் சொன்னாள். 


"குட் மார்னிங் மிஸ். மௌனா!" என கூறி உள்ளே சென்றான். 


அப்போது தான் மஹதன் அவனுடைய செல்பேசிக்கு அழைப்பது தெரிந்தது. 


"ஹலோ மஹத்!" 


"ஹாய் கிஷான். உங்கிட்ட சூப்பர் விஷயம் ஒன்னு சொல்லப் போறேன்!" என்று உற்சாகமாகப் பேசினான். 


"அது என்னன்னு நான் கெஸ் பண்ணியிருக்கிறதைச் சொல்லட்டுமா?" 


"எங்கே சொல்லு பார்ப்போம்!" 


"மௌனா உன்னோட புரபோஸலை அக்சப்ட் பண்ணிட்டாங்க கரெக்டா?" 


"ஹேய்!! எப்புட்றா?" என்று வியந்தான் மஹதன். 


"மௌனா சிஸ் இங்கே தானே வொர்க் பண்றாங்க. குட் மார்னிங் சொல்லும் போது, அவங்களோட முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்! அதை வச்சுத் தான் சொன்னேன்" 


"ஓஹோ!!" 


 உடனடியாக மௌனாவின் முகம் , அவனுடைய மனக்கண்ணில் வந்து போனது.அதில் லயித்திருந்தவனை, 


"மஹத்!! கனவு கண்டது போதும். நடந்ததை நீ எனக்கு முழுசா சொல்லனும்.வீக் எண்ட் மீட் பண்றோம்" என்று உத்தரவு போல் கூறி, வாழ்த்தையும் தெரிவித்தான். 


அலுவலகத்தில் தன் இருக்கையில், மடிக்கணினியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அகதா. 


அன்று நடந்ததை இன்னும் மறக்க முடியவில்லை அவளால். தன் கணவன் இப்படி கீழ்த்தரமாகத் தெருவில் இறங்கி தன்னை அசிங்கப்படுத்தி விட்டானே! என்ற விரக்தி அவளுக்கு. 


அலைபேசி விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது. தீபக் தான் அழைத்துக் கொண்டு இருக்கிறான். எடுத்துப் பேசினால், எத்தனை வன்மையான வார்த்தைகளைக் கேட்க நேருமோ? என்ற ஆயாசத்தில் தான் எடுக்காமல் இருக்கிறாள் அகதா. 


குறுஞ்செய்திகளும் வந்த வண்ணமே இருந்தன.மஹதனிடம் தன் பிரச்சினையை சொன்ன பிறகு தான் விஷயம் தெரு வரை வந்து விட்டது , இதற்கு மேல் பொறுமையாக இருப்பது மிகப் பெரிய முட்டாள்தனம் என்று எண்ணினாள். 


அதற்குண்டான தீர்வைக் கண்டறிய வேண்டும். இனி சகித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்து விட்டாள் அகதா. 


 மௌனா திருமணம் முடித்துச் சென்றதும், இப்போது இருக்கும் வீட்டிலேயே வசித்து விடலாம் தான். ஆனால், அவள் மட்டும் தனியாக இருந்தால், தீபக் மட்டுமல்லாமல், வேறு சில இடையூறுகளும் நிச்சயம் வரும். எனவே, பெண்களுக்கான விடுதியில் தங்கிக் கொள்ள வேண்டும் என்று தனக்கான இருப்பிடத்தைத் தேட ஆரம்பித்து விட்டாள் அகதா. 


அதன் முதல்படியாக உடன் வேலை பார்க்கும் ஒரு சில பெண் தோழிகளிடம், பெண்களுக்கென்று பிரத்தியேகமாக தங்கும் விடுதிகள் இருந்தால், தன்னிடம் தெரிவிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டாள் அகதா. 


கணவனையும், மாமியாரையும் பார்த்து நான்கு நல்ல கேள்விகள் கேட்கலாம் என்று கூட அவளுக்குத் தோன்றியது. அந்தளவிற்குக் கீழ்த்தரமாக இறங்குவதில் நாட்டமில்லை என்பதால், அதையும் கை விட்டு விட்டாள். 


மாலை தன் கைப்பையில் இருந்தப் பணத்தில் இருவருக்கும் கொறிப்பதற்காக, சூடாக சில துரித உணவுகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் அகதா. 


அங்கே ஏற்கனவே வந்து விட்ட மௌனாவோ, 

"அகி! என்னமோ வாங்கிட்டு வந்திருக்கியே?" என்று தோழியின் கையிலிருந்த பிளாஸ்டிக் கவரைப் பார்த்துக் கேட்டாள். 


"ஆமாம் மௌனா. பாப்கார்ன், காளான் சில்லி, அப்பறம் உனக்கு ரொம்பவே பிடிச்ச பானிபூரி!" என்றதும், 


"ஹேய்! சூப்பர்! குடு அகி. காளான் சில்லியை சூடு பண்றேன். பானிபூரியை நான் தான் செட் பண்ணிக் கொடுப்பேன்" என்று அவளிடம் இருந்து கவரை வாங்கினாள் மௌனா. 


அவள் சமையலறை சென்றதும், அகதா முகம் கழுவி விட்டு, வேறு உடை மாற்றி வந்தாள். 


சற்று நேரத்திற்கு எல்லாம், சுடச்சுட காளான் சில்லியுடன், பானிபூரியையும் வாயில் போட்டுக் கொண்டனர் இருவரும்.


அவை காலியானதும், இடத்தைச் சுத்தம் செய்து விட்டு, அறைக்குள் செல்லத் திரும்பிய தோழியை, 

"அகி!" என்று அழைத்து நிறுத்தினாள். 


"என்ன மௌனா?"


"தீபக் வந்து சண்டை போட்ட அப்போ மஹதன் உனக்கு ஹெல்ப் பண்ணார் தான?" 


இவளுக்கும், மஹதனுக்கும் சந்திப்பு நிகழ்ந்து விட்டது போலும்! என்று அனுமானித்தவள், 


"ஆமாம் மௌனா" என பதிலளித்தாள். 


"அதை மட்டும் ஏன் என்கிட்ட சொல்லலை?" 


"ஏற்கனவே உனக்கு அவர் மேல லவ் வந்துடுச்சுன்னு தெரியும். ஆனால், நீ அதை முழுசா உணராமல் இருந்த. அப்போ வந்து இதை நான் உங்கிட்ட சொல்லியிருந்தா, இதனால் தான் உனக்கு அவர் மேல லவ் வந்துச்சுன்னு ஆகிடும். அதான் மறைச்சேன் மௌனா. வேறெந்த தப்பான காரணத்திற்காகவும் இல்லை" என்று புரிய வைத்தாள். 


"தப்பான காரணம்னு நான் இதைக் கேட்கலை அகி.நான் மஹதனை மீட் பண்ணேன்.அப்போ தான் அவர் இதைச் சொன்னார்.அப்பறம்,எனக்கு உன்னைப் பத்தியும் தெரியும், அவரைப் பத்தியும் தெரியும்.கன்ஃபார்ம் பண்றதுக்காக கேட்டேன்" என்று மௌனாவும் சகஜமாகப் பேசி முடித்தாள். 


"ஓகே மௌனா" என்று அறைக்குள் அடைந்து கொண்டாள் அகதா. 


அவளுக்காக என்ன செய்தால் சரியாக இருக்கும்? என்று யோசித்துக் கொண்டே, தன் ஊரில், வீட்டில் அவளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்வையிட்டாள். 


சட்டென்று, அவளது கண்கள் மின்னிட, தரமான யோசனை ஒன்றைக் கண்டுபிடித்து விட்டாள். 


                                - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...