முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நங்கையின் மறவோன் 2

 


கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த மௌனாவைப் பார்த்து சுற்றி உள்ளவர்கள் பிரம்மித்துப் போயினர். 


முக்தாவின் முகமோ பலமாக இருண்டு போயிருந்தது. 


பரிதாபகரமாக நின்று கொண்டு இருந்தாலும், அவளுடைய கண்களும், மனதும் மௌனாவை எரித்துச் சாம்பலாக்கும் உட்ச நிலையில் இருந்தது. 


அனைத்திற்கும் மேலாக, மஹதனோ ஆச்சரியத்தின் விளிம்பில் இருந்தான். 


தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் என்ன அவமானப்படுத்தினாலும், வேலைக்காக அதைப் பொறுத்துக் கொள்வர். ஆனால் இவளோ, முக்தா தனக்குச் செய்த குற்றத்திற்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று புகார் அளிக்கக் கேட்கிறாள். அதுவும் முக்தாவின் பணபலத்தைக் கருத்தில் கொண்டு, தன்னையே புகாரளிக்குமாறு கேட்டுக் கொண்டு , தன் முன்னே நிற்கிறாளே! 


"சார்! உங்களைத் தான் கேட்கிறேன்! கம்ப்ளைண்ட் கொடுக்கிறீர்களா?"மிடுக்காகக் கேட்டவளிடம் மஹதன் பதில் சொல்வதற்குள், 


முந்திக் கொண்ட முக்தா, 


" ஏய்! என்ன? தெரியாமல் பண்ணதுக்கு ஓவரா சீன் போட்டு, மஹதனையும் ஏற்றி விட்டுட்டு இருக்க? உனக்கு எவ்வளவு திமிர் இருக்கனும் "


ஆத்திரத்தில் அடங்காது கத்தினாள். 


"திமிரா? எனக்கா மேடம்? உங்களோட திமிரால் தான் எனக்கு இந்த நிலைமை! இதுக்கு மேல உங்ககிட்ட பேச எனக்கு இஷ்டம் இல்லை" என்ற மௌனா திகைத்து நின்ற மஹதனிடம் பார்வையைச் செலுத்தினாள். 


"ம்ம்! முக்தா நான் இங்கே உன்னை வர வேண்டாம்னு சொல்லியும் வந்திருக்க, அது மட்டுமில்லாமல், என்னோட ஸ்டாஃப்க்கு ப்ளட் வர்ற அளவுக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்க. இதுக்கு உன்னோட எக்ஸ்ப்ளனேஷன் என்ன?" 


அவள் இப்போதாவது தன் தவறை மனதார உணர்கிறாளா? என்ற நம்பிக்கையில் கேட்டான் மஹதன்.


அவனுடைய கேள்வியோ தன்னைத் திக்குமுக்காட வைத்ததால், இப்போதே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவளோ, 


"நான் தான் சாரி கேட்கிறேன்னு சொல்லிட்டேனே மஹத். அப்படி இல்லையா! பணம் கொடுக்கவும் தயார். அந்தப் பொண்ணுக்கு இரண்டில் என்ன வேணும்னு கேட்டு சொல்லு" 


தன் நிலையிலிருந்து இறங்கி வந்து விட்டாளாம்! 


"உங்கிட்ட இனிமேல் பேசறதே வேஸ்ட். நான் கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணத் தயார் மௌனா" 


தானும் அவளுக்குச் சளைத்தவன் இல்லை என்பதை காண்பித்தான் மஹதன். 


இப்போது மௌனாவின் பார்வை மஹதனை வியப்பாக ஏறிட்டது. 


"மஹத்…!"


அவமானத்திலும், பயத்திலும் முகம் வெளிறிய நிலையில் கிறீச்சிட்டாள் முக்தா. 


"ஆமாம் முக்தா. நீ செஞ்சது தப்பு, அதைவிட பேசின விஷயங்கள் ரொம்ப தப்பு.வேற வழியில்லை. கெட் ரெடி"


இப்போது முக்தாவின் கோபமெல்லாம் மஹதனின் புறம் திரும்பியது. 


"இவ சொல்றதை எல்லாம் கேட்கனும்னு உனக்கென்ன தலையெழுத்தா மஹத்? உன்னால முடிஞ்சா இவளைக் கன்ட்ரோல் பண்ண முடியும்.ஆனால் நீயே கம்ப்ளைண்ட் கொடுக்க சம்மதம் சொல்லி இருக்க? வாட் இஸ் திஸ் மஹத்?" 


இப்போது வாய் திறந்தாள் மௌனா. 


"ஹலோ மேடம்! கன்ட்ரோல் பண்றதுக்கு அவருக்கு என் மேல எந்த உரிமையும் இல்லை. அப்பறம் எனக்கு உங்க ட்ராமாவைப் பார்க்க கொஞ்சம் கூட பிடிக்கல.இன்னைக்குத் தான் முதல் நாள் ஆஃபீஸ்ல ஜாயின் பண்ணேன்.ஒரு ரத்தக் காயம் கிஃப்ட் ஆக கிடைச்சிருச்சு. நீங்க எங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க" என்று மஹதனிடம் திரும்பியவள், 


"சார்! இவங்களைக் கூப்பிட்டுட்டு சீக்கிரம் வாங்க. கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு நான் வேலையைப் பாக்கனும்.ஏற்கனவே என்னோட ஒரு நாள் வேலையில் பாதி நாள் இவங்களால் வேஸ்ட் ஆயிடுச்சு"


அவள் கூறியதைக் கேட்ட மஹதனோ அதற்குப் பிறகு, பேச ஒன்றும் இல்லாததால், முக்தாவிடம், 

"வந்து காரில் ஏறி முக்தா.எனக்கும் முக்கியமான வேலைகள் நிறைய இருக்கு"என்று கோபமாக கூறினான். 


" ப்ளீஸ் மஹத்!!" 


மிகவும் இறங்கிப் போய்க் கெஞ்சினாள் முக்தா. பின்னே, இந்தியா வந்திறங்கியதுமே, காவல் நிலையத்திற்குப் போனாள் என்பது தெரிந்தால், இவளது தந்தையின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அவளைக் கதி கலங்க வைத்தது. 


 தனக்கு நேர்ந்த இந்தப் பரிதாப நிலையால் , மனம் வெதும்பிப் போன முக்தா,காரில் ஏறப் போவதற்கு முன்னால், 

"அப்பா கிட்ட பேசனும் மஹத். நான் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிறது தெரிஞ்சா தான, ஜாமீனில் எடுக்க வருவார்" என்று கண்ணீருடன் கேட்டாள். 


அதிலும் மனமிரங்காத மஹதன், 

"நான் சொல்லிக்கிறேன். அங்கே போன பிறகு அதைப் பார்த்துக்கலாம்"என்று அவள் ஏறியதும், மௌனாவும் உடன் ஏறிக் கொள்ள, காரைக் காவல் நிலையத்தை நோக்கிச் செலுத்தினான். 


அவனுக்குள்ளும் எரிமலை வெடித்துக் கொண்டு தான் இருந்தது. இந்த மாதிரி எந்த ஒரு நிலையும் தனக்கு ஏற்பட்டதில்லையே! 


முக்தாவோ உடல் எங்கும் அவமானம் பரவிட , கண்களை மூடிக் கொண்டாள். 


அவளை இந்நிலைக்கு ஆளாக்கிய மௌனாவோ, அடுத்து என்ன நடக்கும்? என்ற ஐயம் கொஞ்சம் கூட இல்லாமல், சாலையை வெறித்தாள். 


கால் மணி நேரத்தில் காவல் நிலையத்தை அடைந்திருந்தனர். 

அதன் வாயிலைக் கூட மிதிக்கப் பிடிக்காதவள் போல், முகம் அடிபட்டுப் போய் அப்படியே அமர்ந்திருக்கும் முக்தாவை இறங்கும் படி சைகை செய்தான் மஹதன். 


பின்னிருக்கையில் இருந்து வந்த மௌனாவோ முக்தாவையும், மஹதனையும் பார்த்து, 

"ப்ச்" என்று சலிப்புடன் கூறினாள். 


அதைக் கண்ணுற்ற மஹதனோ, 

"இறங்கு முக்தா" கடுமையான குரலில் கூறினான். 


மௌனாவின் சலிப்பு அவனைக் கேலி செய்ததைப் போல், தோன்றிற்று. 


முக்தாவும் வேறு வழியின்றி இறங்கவும், மூவரும் காவல் நிலையத்திற்குள் சென்றனர். 


அங்கிருந்த காவலதிகாரியிடம், 

"வணக்கம் சார்! இவர் இந்தப் பொண்ணு மேல் கம்ப்ளைண்ட் கொடுக்க வந்திருக்கார்" என்று மௌனாவே பேச ஆரம்பித்து விட்டாள். 


அந்த அதிகாரி மஹதனைப் பார்த்ததும், "சார் நீங்க.. மிஸ்டர் மஹதன் தான?" என்று அவனை நன்றாக அடையாளம் கண்டு கொண்டதைப் போல கேட்டார். 


இருக்காதா பின்னே? அவன் தான் பார் போற்றும் கோட்ஸ்வரன் ஆயிற்றே! அப்படிப்பட்டவன் இங்கே, இந்நிலையில் நிற்கிறான் என்பதே அந்த அதிகாரிக்கு அதிர்ச்சியைத் தந்தது. 


" எஸ் சார். இவங்க மிஸ். மௌனா. என்னோட ஸ்டாஃப். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மிஸ். முக்தா இவங்களோட தலையில் காயத்தை ஏற்படுத்திட்டாங்க.அதைப் பார்த்த நான் மௌனாவுக்காக கம்ப்ளைண்ட் கொடுக்கிறேன்.உடனே ஆக்ஷன் எடுங்க" 


குனிந்த தலை நிமிராமல் நிற்கும் முக்தாவைப் பார்த்துக் காவலதிகாரி, அதற்கு நேர்மாறாக, தலை நிமிர்ந்து நின்றிருக்கும் மௌனாவையும் பார்த்தார். 


அவளது நெற்றியில் இருந்தப் பிளாஸ்திரியைப் பார்த்து விட்டு, 

"ம்ம்.ஓகே சார். கம்ப்ளைண்ட் எழுதிக் கொடுங்க" என் சொல்லவும், 


அவர் கொடுத்த வெள்ளைத் தாளில் நாற்காலியில் அமர்ந்து, புகாரை எழுத ஆரம்பித்து விட்டான் மஹதன். 


எஃப் ஐ ஆர் (FIR) ரெடி பண்றேன்" என துரிதமாகத் தயார் செய்தார். 


தன்னை இந்தளவிற்கு இழிவுபடுத்திய இவ்விருவரையும் என்னவெல்லாம் செய்யலாம்? என்று திட்டம் போட்டாள் முக்தா. 


அதற்குள், "எஃப் ஐ ஆர் ரெடி சார். சைன் பண்ணுங்க" என்கவும், 


மஹதனோ உடனே அதில் கையெழுத்திட்டான். 


இதைப் பார்த்ததும் 'பணம் இருக்கிறது' என்ற ஒரே காரணத்திற்காக தன்னைக் காயப்படுத்தியதைக் கூட ஒரு பொருட்டே இல்லை என தெனாவட்டாகப் பேசிய பெண்ணிற்கு உரிய தண்டனைக் கிடைக்கப் போகிறது என மௌனாவிற்கோ நிம்மதியாக இருந்தது.


இப்போதாவது தன் செல்பேசியை உபயோகப்படுத்தலாமா? என்பதாக மஹதனையும், செல்பேசியையும் மாறி மாறிப் பார்த்தாள் முக்தா. 


"நானே கால் பண்ணி சொல்றேன்" என்று முக்தாவின் தந்தைக்கு அழைத்தான் மஹதன். 


அழைத்து வெகு நேரம் ஆகியும் அவர் ஏற்கவில்லை. எனவே, 

"அங்கிள் கால் அட்டெண்ட் பண்ணல" என்று கூற, வெறுப்பை உமிழும் பார்வையால் மௌனாவைப் பார்த்தாள் முக்தா. 


ஆனால் உடனே பார்வையைச் சரி செய்து கொண்டு, 

"மௌனா! இவ்ளோ தூரம் வந்தாச்சு. கம்ப்ளைண்ட் ஃபைல் ஆகிருச்சு. கொஞ்ச நேரம் செல்லில் (cell) கண்டிப்பாக இருக்கேன். அதுக்கப்புறம் என்னை ஜாமீன்ல எடுக்கச் சொல்லி மஹதன்கிட்ட சொல்லு!" என்று அவளிடம் பரிதவிப்புடன் புலம்பினாள். 


அவளைத் கூர்மையாகப் பார்த்தவள், 

மஹதனிடம், 

"தாங்க்ஸ் சார். உங்களோட ஸ்டேட்டஸைக் கூட நினைச்சுப் பார்க்காமல், நான் கேட்டேன்றதுக்காக, நியாயமாக நடந்துக்கிட்டீங்க" என்று மனதார நன்றி சொன்னாள் மௌனா. 


அந்த நன்றியை ஏற்றுக் கொள்ளப் போவதாக இல்லை போலும் அவன்! 


"நோ நீட் (No need - தேவையில்லை)"


என்று அவளது நன்றியை ஏற்காமல் , மறுத்து விட்டான் மஹதன். 


பெருமூச்செறிந்தவாறே, 

 "ஒரு மணி நேரம் கழிச்சு இந்தக் கேஸை வாபஸ் வாங்கிடுங்க சார்" என்றாள் மௌனா. 


"ஹேய்!!! என்ன!! தப்புப் பண்ணியது நான் இல்லன்னாலும், உனக்காக ஸ்டேஷன் வரைக்கும் வந்து கம்ப்ளைண்ட் கொடுத்தா, என் பொறுமையை ரொம்ப சோதிச்சுப் பாக்குற? இதுக்கு மேல நீ எங்கிட்ட எதையும் கேட்க ரைட்ஸ் இல்லை. ஒழுங்கா ஆஃபீஸூக்கு வந்து வேலையைப் பாரு" 


அவனும் தான் எவ்வளவு நேரம் பொறுத்துப் போவான். 


மௌனாவைப் பொரிந்து தள்ளியவன் திரும்பிப் பார்க்காமல், காரில் ஏறிச் சென்று விட்டான் மஹதன்.  


"ஓவர் ஆக்ட் பண்ணி என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுட்டல்ல! அதுவும் இனி நான் மஹதனைப் பார்த்துப் பேச முடியாத அளவுக்குப் பண்ணிட்ட. உனக்கு இருக்குடி"


அங்கேயே அமர்ந்திருந்த முக்தாவோ, வார்த்தைகளை வஞ்சனை இன்றி பிரயோகித்தாள். 


அதைக் கேட்கப் பிடிக்காமலும், நேரம் போவதாலும் அங்கிருந்து அகன்றாள் மௌனா. 


காரில் போகும் போது, மஹதனுக்குக் கால் வந்தது. முக்தாவின் தந்தை தான் அவன் அழைத்ததைப் பார்த்து விட்டு இப்போது கூப்பிட்டு இருக்கிறார். 


"ஹலோ மஹத். என்னப்பா கால் பண்ணி இருக்க?" 


"ஆமாம் அங்கிள். முக்தா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கா. போய் ஜாமீனில் எடுத்துட்டு வாங்க" என்று கூறியதைக் கேட்டதும், 


"என்னது!!! எப்படி நடந்துச்சு மஹத்?" 

நெஞ்சு வலியே வரும் போலிருந்தது அவருக்கு. 


"இப்போ லாயரைக் கூப்பிட்டுட்டு ஸ்டேஷன் போங்க அங்கிள். 

ஈவ்னிங் வீட்ல பேசுவோம்" 


செல்லை அணைத்து விட்டு, அலுவலகத்தினுள் நுழைந்து கொண்டான் மஹதன். 


பிறகென்ன, மௌனா காவல் நிலையத்தில் இருந்து கிளம்பி, ஆட்டோ பிடித்து அலுவலகம் போகும் நேரத்தில், முக்தாவின் தந்தை நீலகண்டன் அடித்துப் பிடித்துக் அங்கே வந்தார்.அவருடன் வக்கீலும் வந்திருந்தார். 


அவரும் சமுதாயத்தில் பெரும் புள்ளி என்பதால், மஹதனைப் போலவே இவருக்கும் நல்ல வரவேற்பும் , மதிப்பும் கிடைத்தது. 


"நீலகண்டன் சார்! நீங்க திடீரென இங்கே வந்திருக்கீங்க? என்ன விஷயம் சார்?" 


அவர் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, முக்தாவும் சற்று முன்னர் தான் தந்தையின் பெயரைக் கூறி எதாவது முயற்சித்துப் பார்ப்போமா? என்று நினைத்திருந்தாள். அதற்குள் தந்தையே பிரசன்னம் ஆனதில், அவளது கண்ணீர்த் துளிகள் கன்னங்களை அடைந்தது. 


"அப்பா!" 


கலங்கிய குரலில் தன்னை அழைத்த மகளைப் பார்த்ததும், நீலகண்டனுக்கு அதிர்வு ஏற்பட்டது. 


"முகி... உனக்கு எப்படி இந்த நிலைமை? யாரு மஹதனா? அவன் தான் எனக்குக் கால் செய்து விஷயத்தைச் சொன்னான்" என்று மகளை ஆதரவாகத் தோளில் சாய்த்துக் கொண்டார். 


"இல்ல அப்பா. ஆனால் அவனும் ஒரு காரணம் தான். என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தது ஒரு பொண்ணு. விஷயத்தை நான் வீட்டுக்குப் போய் சொல்றேன். ப்ளீஸ் இப்போ என்னை ஜாமீனில் எடுங்கள் அப்பா. இங்கே இருக்க எனக்குப் பிடிக்கல" 


கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த மகளிடம், 

"அழாத முகி. நான் இப்போவே உன்னை வீட்டுக்குக் கூப்பிட்டுப் போறேன்"

என்று அதிகாரியிடம் வந்தார். 


"சார்! இவங்க உங்கப் பொண்ணா?" இவர்களது பேச்சைக் கேட்டு தெரிந்து கொண்டார் போலும்! 


"ஆமாம் ஆஃபீஸர். இவள் என்னோட பொண்ணு முக்தா. ஜாமீனில் எடுக்கனும்" 


வக்கீலையும் அறிமுகப்படுத்தினார் நீலகண்டன். 


அதிகாரி தயக்கத்துடன், "மஹதன் சார் கம்ப்ளைண்ட் கொடுத்து இருக்கார் சார்" என்கவும், 


"ஓஹோ! அவர் தான் என்கிட்ட இன்ஃபார்ம் செய்து இங்கே வரச் சொன்னார்" இறுகிய குரலில் சொன்னார் நீலகண்டன். 


அவனே புகாரளித்து விட்டு, தனக்கும் கால் செய்திருக்கிறானே! என்று அவரது மனம் குமுறியது. 


பிறகு, "டவுட் ஆக இருந்தா கால் பண்ணித் தர்றேன். கேளுங்க" என்று சொல்ல, 


"இல்லை வேண்டாம் சார்" 


 அடுத்த நிமிடமே முக்தாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 


காரில் ஏறியதும், "அப்பா!" என்று தன் தோளில் முகம் புதைத்துக் கொண்டு கதறி அழுத மகளைச் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார் நீலகண்டன். 


வெளிநாட்டில் தங்கிப் படித்ததாலும், மாதக் கணக்கில் இங்கே வராததாலும் அவளை ஒரு விழா ஏற்பாடு செய்து அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க எண்ணினார். ஆனால் அவர் கணக்குத் தவறி, நிகழ்ந்ததோ வேறாக இருந்தது. 


அலுவலகத்திற்குள் முன்னர் நடந்த சச்சரவின் தடமே இல்லாதது போல் இருந்தது. 


மௌனாவும் இந்தப் பிரச்சனையை மறந்து விட்டு, வேலையைத் தொடர்ந்தாள். 


                                - தொடரும்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...