முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நங்கையின் மறவோன் 13

 


அழைப்பு மணியின் ஒலியில், காஃபிக் கோப்பையை வைத்து விட்டு, சென்று கதவைத் திறந்தாள் மௌனா. 

வெளியே களைந்து போன முகத்துடன், நலிந்த தோற்றத்துடன் நின்றிருந்தாள் அகதா. 

சட்டென்று அவளைத் தாவி அணைத்துக் கொண்ட மௌனா, 
"அகி!! என்ன ஆச்சு? இப்படி உடைஞ்சு போயிருக்க?" என்று விசாரித்தவாறே, 
உள்ளே அழைத்துச் சென்றாள். 

ஒரு குவளைத் தண்ணீரைக் குடித்து, ஆசுவாசமான பிறகே, அவளிடம் மேற்கொண்டு விசாரிக்க ஆரம்பித்தாள் மௌனா. 

அவளே மெதுவாக சொல்லட்டும் என்று தோழியைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

அவள் எதிர்பார்த்தது போல, 
"அழுகக் கூடாதுன்னு அடக்கி வச்சிருக்கேன் மௌனா. எனக்கு அழுகுறதும் சலிப்பாகிடுச்சு" என வெறுத்துப் போய்ப் பேசினாள். 

"ஏன் அகி? அங்கே தீபக் ரொம்ப ஹார்ஸ் ஆக நடந்துக்கிட்டாரா?" என்று வினவினாள் மௌனா. 

"இல்லை.ஆனால் மனசாட்சியே இல்லாமல் நடந்துக்கிட்டார்" என்று நடந்ததை விவரித்தாள் அகதா. 

தன் மாமியார் வீட்டிற்குச் சென்றதும், 
தீபக்கும் , அவனது தாயும் பேசிக் கொள்வதைக் கேட்டாள். 

"பணம் மட்டும் கொடுத்தால் போதும், அவளை ஊருக்கு அனுப்பி வச்சிடலாம்.அக்கவுண்ட்டில் அனுப்பி வச்சிட்டா, எவ்ளோ இருக்குன்னு தெரிய மாட்டேங்குது. இப்போ நேராக இங்கே வந்தா , செக் பண்ணிப் பார்த்துடலாம்" என்று மகனுக்குத் தூபம் போட்டுக் கொண்டிருந்தார் லலிதா. 

இதுதான் நடக்கும் என்பதை முன்பே தெரிந்து இருந்ததால், அகதாவோ சாதாரணமாக உள்ளே நுழைந்தாள். 

அவளை அலட்சியமாகப் பார்த்த லலிதா, 
"இந்தா வந்துட்டா உன் பொண்டாட்டி. பேச வேண்டியதை பேசிடு"என்று பணம் கேட்பதை முடுக்கி விட்டு சென்றார். 

" வா! இப்போ தான் வர முடிஞ்சுதா?" அதட்டிக் கேட்டான் அவளது கணவன் தீபக். 

"ஆமாம். எனக்கு ஆஃபீஸில் லீவ் கிடைக்க வேண்டாமா? வேலையை விட்டுட்டு வந்துடவா?" என்று அவளும் நக்கல் தொனியில் பதில் கூறினாள். 

"ஏய்! கிண்டலா பேசினா நடக்கிறதே வேற!" என்று அவளை மிரட்ட, 

"என்ன நடக்கும்? அப்படி எதாவது நடந்தால், நான் வேலைக்குப் போக வேண்டியது இல்லை. இங்கேயே தங்கிடுவேன். எப்படி வசதி?" என்று அவனது பலவீனத்தை ஞாபகப்படுத்தி விட்டாள் அகதா. 

"ப்ச்! கம்முனு இருந்திடு. போய் ஃப்ரெஷ் ஆகிட்டு , சாப்பிட்டு வா. இன்னைக்கு நிறைய பேசனும் " என வலியுறுத்தி விட்டு, அகன்றான் தீபக். 

பணம் என்னவெல்லாம் செய்கிறது பார்! என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டாள் அகதா. 

அரை மணி நேரம் சென்றதும், உணவை அருந்தி தான் ஆக வேண்டுமா? என்று தோன்றி விட்டது. 

இந்த வீட்டில் உணவுண்பது அத்தனை பிடித்தமில்லை அவளுக்கு. இருந்தாலும் பசிக்கு உண்டாள்.

எதிரெதிர் அமர்ந்திருந்த தாயையும், மகனையும் வெறுப்புடன் நோக்கியவள், 

"என்ன பேசனும்?" என்று கேட்டாள். 

"புதுசா வேற என்ன கேட்கனும்? அதே விஷயம் தான்" என்று பணத்தில் குறியாக இருந்தார் லலிதா. 

இவளைப் பார்த்த நேரத்திலிருந்து, அலட்சியம் நிறைந்திருந்த தீபக்கின் கண்களில் இப்போது, ஆசை தெரிந்தது. 

"எவ்வளவு வேணும்?" 

"உன்னோட மொத்த சம்பளத்தில், எங்களுக்குப் பெரிய தொகையை நீ தாராளமாக கொடுக்கலாம். ஆனால் அக்கவுண்ட்டில் போட்றதால் , அதில் பாதி கூட நீ தர்றது இல்லைன்னு தோணுது" என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினான் தீபக். 

"நான் வேலைக்குப் போகும் போது, சம்பளம் இவ்ளோ தான் என்று சொல்லிட்டேன். அதுக்கும் மேல என்ன சொல்றது? எனக்கு மாதா மாதம், வர்ற சம்பளம் இவ்ளோ தான்!" என்று தன் செல்பேசியில் மாத சம்பளம் வந்து விட்ட, குறுஞ்செய்தியைத் தீபக்கிற்குக் காண்பித்தாள் அகதா. 

அதில் பார்த்து உறுதி செய்து கொண்ட தீபக், 
"ம்ம்! புரிஞ்சுது. இதில் முக்கால்வாசி பணம் அனுப்பி விடு" என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, லலிதாவும் அங்கே வந்தார். 

"முடியாது" என்று மறுத்து விட்டாள் அகதா. 

"முடியாதா? உனக்கு அவ்ளோ தைரியமா?" என்று கொதித்து எழுந்தார் லலிதா. 

தீபக்கும் அவளை முறைத்துப் பார்த்தான். 

"ஆமாம்.நான் இருக்கிற வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டாமா? சாப்பாட்டு செலவு இதெல்லாம் இருக்குல்ல?" என தன் பக்க நியாயத்தைக் கூறினாள் அகதா. 

"ஓஹ்! வேற எவ்ளோ பணம் தருவீங்க?" என்று நக்கலாக வினவினான் தீபக். 

"அதில் பாதி பணம் தான் தருவேன்" என கறாராக கூறி விட்டாள். 

அதில் வெகுண்டெழுந்த லலிதா, 
"பாதி பணத்தை வச்சு என்னப் பண்ண முடியும்?" என்று மருமகளிடம் கத்தினார். 

"அவ்ளோ தான் என்னால் முடியும்" என்று கத்தரித்துப் பேசினாள் அகதா. 

"உன் தோரணை எல்லாம் எனக்கு வேற மாதிரி தெரியுதே?" 

"எப்படியோ தெரிஞ்சிட்டுப் போகட்டும். எனக்கு உங்களைத் தவிர வேற யாரும் இல்லைன்றதால் தான் நீங்க இப்படி பண்றது எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கேன். என்னைக்கு அதுவே எனக்கு வெறுப்பாக மாறுதோ , அப்போ உங்களைத் தூக்கிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன்" 

அதிர்ச்சியின் விளிம்பில் இருந்தனர் லலிதாவும் , அவரது மகன் தீபக்கும். 

"இப்போ பணத்தை அனுப்பி விட்றேன்" என்று அவர்கள் முன்னிலையிலேயே பணத்தை அனுப்பி வைத்தாள் அகதா. 

"நீ பண்றது சரியே இல்லை அகதா!" என்று தீபக் முறையிட்டான். 

"அப்படித்தான் பண்ணுவேன். உங்க சம்பளம் எங்கே? அதில் பாதியை எனக்கு அனுப்பி வைங்க"என்று கூறவும், 

" ஏய்! என்னப் பேச்சுப் பேசுற நீ?" என்று அவளை அடிக்கப் பாய்ந்தான் தீபக். 

"என் மேல கை வச்சா அடுத்து ஒரு பைசா கூட உங்க ரெண்டு பேருக்கும் வராது" என தடாலடியாக கூறினாள் அகதா. 

இவளுடைய மாற்றம் லலிதாவிற்கும், தீபக்கிற்கும் உள்ளம் கொதித்தது. அவள் பேசுவதைக் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்பதால் கோபத்தை அடக்கிக் கொண்டனர். 

"என் பாதி சம்பளத்தை எப்படி தர முடியும்? அம்மாவுக்கு அனுப்பனும்ல?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான் தீபக். 

"அப்போ கால் அளவு சம்பளம் வேணும். அதை அனுப்பினால் தான், நானும் என்னோடதை அனுப்புவேன்" என்று தீர்க்கமாக கூறி விட்டாள் அகதா. 

"சரி! அனுப்புறேன்"

 அம்மாவிடம் சம்மதமாகத் தலையசைத்தான். 

"என்னமோ போ!" என்று மருமகளைக் கரித்துக் கொட்டினார் லலிதா. 

"நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்"என சாவகாசமாக அறைக்குள் புகுந்து கொண்டாள் அகதா. 

" இவ பேசியதைக் கேட்டியா தீபக்? எவ்ளோ திமிர்!" என்று மருமகளை அவனிடம் மூட்டிக் கொடுத்தார் லலிதா. 

"பணம் வரனுமே அம்மா! இல்லைன்னா இவளை எப்பவோ துரத்தி விட்டு இருப்பேன்" 

நல்லவேளை தீபக் மற்றும் அகதா தம்பதியருக்குக் குழந்தை இல்லை. இருந்திருந்தால், அந்தக் குழந்தையும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கும்.

கொண்டு வந்த தோல் பையை அறையின் மூலையில் வீசி விட்டு, கட்டிலில் பொத்தென்று சரிந்தாள் அகதா. 

இதற்கிடையில், தோழிக்கும் குறுந்தகவல் அனுப்பி வைத்தாள். 

அவளது அறைக்குள் நுழைந்த தீபக், 
"எல்லாத்தையும் பேசி முடிச்சாச்சே. நானும், அம்மாவும் கிளம்பறோம்" என்று கடுகடுவென்ற முகத்துடன் கூறினான். 

"ம்ம்...கிளம்புங்க" என்றதோடு முடித்தவள், விழிகளை இறுக மூடிக் கொண்டாள். 

"நீ எப்போ கிளம்பறே?" என கேட்டான். 

"நான் நாளைக்குக் காலையில் சீக்கிரம் கிளம்பிடுவேன். நீங்களும், உங்க அம்மாவும் தயவு செஞ்சு கிளம்பிடுங்க" என கையெடுத்துக் கும்பிட்டாள் அகதா. 

கோபத்தில் முழுதாக தன்னிலை இழந்திருந்த தீபக், அவளைக் காயப்படுத்தி விட்டால், வருவதும் வராது என்பதால், கட்டுப்படுத்திக் கொண்டு விருட்டென்று வெளியேறினான். 

அவளிடம் விடைபெறாமலே ஊருக்குச் சென்ற , கணவனையும், மாமியாரையும் நினைத்து கசப்புப் புன்னகையுடன் கதவைத் தாழிட்டு, அமைதியான உறக்கத்தைத் தொடர்ந்தாள் அகதா. 

அவளது தைரியம் மௌனாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அதைவிட, நிம்மதியாக இருந்தது. கூடிய விரைவில் அகதாவும் தன் வீட்டாரை உதறித் தள்ளப் போகிறாள். 

சுயநலவாதிகளை அனுசரித்துப் போய்க் கொண்டிருந்தால், தன் சுயத்தைத் தான் தொலைக்க முடியுமே தவிர, காலத்திற்கும் நிம்மதியாக வாழ முடியாது. அதனால் தான் மௌனா தோழிக்கு இந்த தைரியம் வந்ததை நினைத்து மகிழ்ந்தாள். 

"உன்னோட அறிவுக்கும், வேலைக்கும் இந்த குணம் உனக்குப் பொருத்தமே இல்லை அகி. நீ ஏன் இப்படி இருக்க? என்னோட லைஃப்ல எதாவது முடிவு எடுக்கனும், இல்லைன்னா சஜஷன்ஸ் கேட்கனும்னா கூட உன்கிட்ட தான் வருவேன். எனக்கு அப்படியொரு மோட்டிவேஷன் கொடுப்ப. ஆனால் உன்னோட வாழ்க்கையை என்னப் பண்ணி வச்சிருக்க அகி?" என்று இப்போது தோழியைச் சரி செய்ய முயற்சித்தாள் மௌனா. 

"ம்ஹூம்! உண்மை தான் மௌனா. எனக்கு இருக்கிற ஒரே உறவு அவங்க தான் என்று நம்பினேன். அதனால் அவங்க செய்வதை எல்லாம் பொறுத்துக்கிட்டேன்.இப்போ முடியல. எனக்குன்னு ஒரு உறவு வேணும். எப்பவும் என் கூட இருக்கிற மாதிரி!" என்று மனம் கசந்து போய்க் கூறினாள் அகதா. 

"உனக்குப் புரிஞ்சுடுச்சு. நீ தெளிவாகிட்ட. சோ, சீக்கிரமே இதிலிருந்து வெளியே வந்துடுவ அகி" 

காலை உணவை இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர். 

இன்று முழுவதும் தான் ஓய்வு எடுப்பதாக கூறி விட்டாள் அகதா.அதனால், மௌனா மட்டும் வேலைக்குப் போனாள். 

விடுதியின் வரவேற்பில், எப்போதும் போல நின்றிருந்தவளுக்கு, தரிசனம் கொடுத்தான் மஹதன். 

வழக்கம் போல, கிஷானைப் பார்க்கப் போகிறான் என்ற ரீதியில் , 

"வெல்கம் சார்! வெரி குட் மார்னிங்!" என்று வரவேற்பு அளித்தவளைப் பார்த்து மயக்கும் புன்னகை வீசினான் மஹதன். 

'இது என்ன ஸ்மைல்? ஒரு தடவை கூட இவர் இப்படி நம்மளைப் பார்த்து ஸ்மைல் பண்ணியது இல்லையே?' 

கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு நிறைந்த ஆண்மகன் என்று தன் மனதில் அவனை உயர்த்தி வைத்திருந்தாள் மௌனா. 

அதெல்லாம் இடிந்து போய் விடுமோ? என்று வேறு தத்தளித்துக் கொண்டிருந்தாள். 

"குட் மார்னிங் மிஸ். மௌனா" மறுபடியும் ஒரு வசீகரப் புன்னகை அவனிடத்தில் இருந்து, இவளை நோக்கி வந்தது. 

'என்னாது!!! மஹதன் சார் இது நல்லா இல்லை' மனம் அடித்துக் கொண்டது மௌனாவிற்கு. 

இவர்களை மடிக்கணினி வழி கண்காணித்துக் கொண்டிருந்த கிஷான், 

"அப்போ மஹதன் அவங்களை மட்டும் பார்க்கப் போறது, சீக்கிரமே நிறைவேறப் போகுது" என்று அவர்களைக் கூர்ந்து கவனித்தான். 

மௌனாவின் உடல் மொழியில், பதட்டம் இருந்தது, ஆனால் மஹதனோ கூலாக நின்று கொண்டிருந்தான். 

முகத்தில் இருக்கும் உணர்வுகள் தெளிவாக தெரியாது அதனால் நண்பனிடமிருந்து விஷயத்தைக் கறக்கக் காத்திருந்தான் கிஷான். 

இங்கே மஹதனின் மர்மப்
 புன்னகையில், மொத்தமாக வீழ்ந்து கொண்டிருந்தவள், 

'என்ன சொல்லக் காத்திருக்கிறான்?' என்று வியர்த்து வழிந்து கொண்டிருந்தாள் மௌனா. 

            
                                   - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...