முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நங்கையின் மறவோன் 12

 


"உன் பொண்ணுக்கு என்ன ஆச்சு நீலகண்டா? மறுபடியும் ஃபாரீன் போகப் போவதாக சொல்ற?" என்று திருமூர்த்தி தான் மனம் கேளாமல் விசாரித்தார். 


"முக்தாவுக்கு எதுவும் ஆகலை மூர்த்தி. இப்போ தான் மனசு தெளிஞ்சிருக்கா.அங்கே போய் வேலை பார்க்கப் போறா. வர்றதுக்கு இரண்டு வருஷம் ஆகும்" என்று விளக்கினார் நீலகண்டன். 


அதிசயித்துப் போனார் திருமூர்த்தி. 


"மஹதனைத் திருமணம் செய்ய வேண்டும்" என்று தினமும் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தவளோ இப்போது மனம் மாறி விட்டாள், அத்தோடு தந்தையின் பணம் வேண்டாம், சொந்த சம்பாத்தியம் வேண்டும் என்று முடிவெடுத்திருப்பது இவையெல்லாம் சேர்ந்து வியப்பை அளித்தது அவருக்கு. 


இதை மனைவியிடம் பகிர்ந்து கொண்டார். 


பிடிவாதம் பிடித்த போது, முக்தாவின் மேல் அதிருப்தி அடைந்த கௌசல்யா, இப்போது அவளது மனமாற்றத்தின் பிறகு, தட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். 


அதனால் யோசிக்காமல், முக்தாவிற்குக் கால் செய்து விட்டார். 


"ஹலோ முக்தா" என்ற கௌசல்யாவின் குரலைக் கேட்டதும், திகைத்து விட்டாள் முக்தா. 


"ஹாய் ஆன்ட்டி" என்று பதிலளித்தாள். 


"நீ வெளிநாடு போகப் போறன்னு சொன்னாங்க. அதுக்கு முன்னாடி இங்கே உனக்கு ஒரு விருந்து மாதிரி கொடுக்கலாம்னு நினைக்கிறேன். ப்ளீஸ் அட்டெண்ட் பண்ணுவியா முக்தா?" என்றவரது கோரிக்கையை தவிர்க்க இயலாமல், 


"சரிங்க ஆன்ட்டி. கண்டிப்பாக வர்றேன்" என்று சம்மதித்தாள். 


மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல், அவள் உடனே சரியென்று கூறியது அவருக்கு திருப்தியாக இருந்தது. 


'ஊர் சென்று சேர்ந்து விட்டேன்' என்ற அகதாவின் குறுஞ்செய்தி கண்ணில் பட்டவுடன் தான் மௌனாவிற்கு ஆசுவாசமாக இருந்தது. 


அலுவலகம் விரைந்தவளுக்கு தோழியின் நினைவாகவே இருந்தது. 


அகதாவின் மீது தீபக் கை நீட்டியதில்லை தான். ஆனால் இப்போது என்ன சூழ்நிலை என்று தெரியாததால், விபரீதம் எதுவும் அவளுக்கு நேர்ந்து விடக் கூடாது என வேண்டிக் கொண்டாள் மௌனா. 


சட்டென்று நெஞ்சு படபடப்பு ஏன் வருகிறது? என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் , எதிரில் பார்வையை வைத்தாள். 


காரணம் எதிரிலேயே வந்து கொண்டிருந்தது மஹதனின் உருவத்தில். 


அவள் வேலை செய்யும் விடுதி கிஷானுடையது என்றாலும், நண்பனைப் பார்க்கிறேன் பேர்வழி என மஹதனின் வருகை இவள் வரவிற்கு முன்பிருந்தே தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. 


இப்போதும் கிஷானைப் பார்க்க வந்தான் மஹதன். 


'இவரோட ஹோட்டலில் வேலைப் பார்த்தாக் கூட பயப்பட்றதுல ஒரு நியாயம் இருக்கு. வேற ஹோட்டலுக்கு வந்தாலும், துரத்திக்கிட்டே வர்றார்!'


"குட் மார்னிங் சார். ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?" என்று உபசரித்தாள் மௌனா. 


"ம்ம்.கிஷானைப் பார்க்கனும்" எனவும்,


"ப்ளீஸ் வெய்ட் சார்" என்று நிதானத்தைக் கடைபிடித்துக் கொண்டே கிஷானுக்கு அழைத்தாள். 


அவளைப் பார்வையால் துளைத்து எடுக்காமல், செல்பேசியில் கவனம் பதித்தான். 


"ஹலோ சார். உங்களைப் பார்க்க மஹதன் சார் வந்திருக்கார்" 


"ரூமுக்கு வர சொல்லுங்க மிஸ். மௌனா" 


"கிஷான் சார் உங்களை அவரோட ரூமுக்கு வர சொல்றார். ஹேவ் அ குட் டே" என்று மலர்ந்த முகமாக அவனுக்கு விடையளித்தவளை கூர்ந்து நோக்கி விட்டே கடந்து சென்றான். 


'ஹார்ட் பீட் இப்போ தான் குறையுது' என கிடைத்த அந்நேரத்தில், தண்ணீர் பருகிக் கொண்டவள், கணினியில் பார்வையைப் பதித்தாள் மௌனா. 


"வா மஹத்!" நாற்காலியை நண்பனுக்கு அருகிலேயே மாற்றிப் போட்டுக் கொண்டான் கிஷான். 


"ம்ம்.கிஷான் ! முக்தா வெளிநாட்டுக்குக் கிளம்பறா" என்றதும், ஷாக் அடித்தாற் போல, நிமிர்ந்தான். 


"என்ன சொல்ற மஹத்? ஏன் திடீர்னு?" என்று திடுக்கிட்டான் கிஷான். 


திருமூர்த்தி கூறியதை நண்பனிடம் சொன்னான் மஹதன். 


"அப்போ மனசு மாறிட்டாளா மஹத்?" எதிர்பார்ப்புடன் கேட்டான் கிஷான். 


"மனசு மாறினாளா என்று தெரியலை. ஆனால் அவளுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இப்போ இல்லை" என்று தெளிவாக உரைத்தான். 


"அது போதும் மஹத். ஆனால் அவ ஃபாரீன் போறதை தடுக்க முடியாதா?" 


"என்னால் எப்படி தடுக்க முடியும் கிஷான்? நான் எப்பவோ இதிலிருந்து விலகிட்டேன். முக்தாவோட தனிப்பட்ட விருப்பத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது கிஷான்" என்று தீர்க்கமாக கூறியவனிடம், 


"அப்போ நான் தான் எதாவது பண்ணனுமா?" என்று சோர்வடைந்தான். 


"உன் லவ்வுக்கு நீ தான் ட்ரை பண்ணனும்டா" என மெலிதாக புன்னகைத்தான் மஹதன். 


"உன் லவ்வுக்கு நீ என்னப் பண்றன்னு பார்க்கத் தானே போறேன்" என்று நண்பனைக் கிண்டல் செய்தான் கிஷான். 


"என் லவ்?" புரியாமல் கேட்டான். 


"மிஸ்.மௌனா" பெயரைக் கூறியவனை முடிந்த வரை முறைத்துப் பார்த்தான் மஹதன். 


"ஏன்டா உனக்கு எண்ணமெல்லாம் இப்படிப் போகுது?" 


"அடேய்! நீயா அதை ஒத்துக்கிற வரைக்கும் நான் இனிமேல் அவங்க பேச்சு எடுக்க மாட்டேன்" என்று கிஷான் சபதம் எடுத்தான். 


"இருந்தால் தானே ஒத்துக்கிறதுக்கு" சலித்துக் கொண்டான். 


"இல்லைன்னு சொல்லுவியோ?" 


பேச்சால் கிடுக்குப் பிடி பிடித்தான் தோழன். 


"நீ தானே அன்னைக்கு சொன்ன,அவங்களாவது என்னை லவ் பண்றதாவதுன்னு? இப்போ என்னாச்சு?" என்று கேட்டான். 


"அவங்க லவ் பண்றது சந்தேகம் தான். ஆனால் நீ லவ் பண்ண மாட்டே என்று நான் சொல்லலையே? உனக்கு லவ் வந்துடுச்சு" 


"ஓஹோ! நான் உன்னைப் பார்க்க வர்றேன்னு சொல்லிட்டு மௌனாவைப் பார்க்க வர்றேன்னு நினைக்கிறியா?" 


நண்பன் தவறாக எண்ணி விட்டான் போல என்று கேட்டான் மஹதன். 


"இல்லையே! நீ என்னைப் பார்க்கத் தான் வர்ற. ஆனால் அவங்களையும் பார்க்கிற. உன்னைப் பத்தி எனக்குத் தெரியும் மஹத்" 


கிஷான் நண்பனைப் பேச்சால் மடக்கினான். 


"அவளையும் பார்க்கிற - நோட் பண்ணிக்கோ. மௌனாவை மட்டும் பார்க்கலை" என்று தோளைக் குலுக்கிக் கொண்டான் மஹதன். 


"அவங்களை மட்டும் பார்க்கிற நாள், நேரம் எல்லாம் வரும் நண்பா! அது வரை காத்திருக்கிறேன்" என்று வெடித்துச் சிரித்தான் கிஷான். 


"ப்ச்! நீ இதையே பேசாதேடா" என மிரட்டினான். 


அவ்வப்போது ஒருவரைப் பார்த்தால் மட்டும் காதல் பெருக்கெடுத்திடுமோ? சிரித்துக் கொண்டான் மஹதன். 


மௌனாவைப் பற்றிய சிந்தனையை மேற்கொண்டுள்ளான் என எண்ணினான் கிஷான். 


இவற்றையெல்லாம் அறியாத மௌனாவோ , வேலையில் கண்ணும், கருத்துமாக இருந்தாள். 


எப்போதும் முடியும் நேரத்தைக் கணக்கிடாதவள், இன்றோ எப்போது வேலை முடித்துச் செல்வோம் என்றிருந்தாள். 


தோழியிடம் இருந்து குறுந்தகவல் வந்தாலும், அவள் வீடு வந்து சேரும் வரை பொறுமையின்றி தவித்தாள் மௌனா. 


விடியற்காலையில் தான் வரப் போகிறாளோ? என்று ஐயம் வேறு. 


கைக்கடிகாரத்தில் தான் கவனத்தைப் பதித்திருந்தாள். அதனால் மஹதனைக் கவனிக்கவில்லை. 


மஹதன், "என்ன வொர்க் பண்ண சலிப்பாக இருக்கா?" என்று அழுத்தமாக கேட்டான். 


"இல்லை சா.. ர்! " என்று தடுமாறியவளிடம், 


"இது என்னோட ஹோட்டல் இல்ல. ஆனால் என் ஃப்ரண்ட் கிட்ட சொன்னால் இந்த வேலையும் உனக்குப் போயிடும். வீட்டுக்குப் போகிறதுக்கு ரொம்ப இன்ட்ரெஸ்ட் ஆக இருக்கியே!" என்று நக்கல் செய்தான். 


"சாரி சார். உங்களுக்குப் பதில் சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்லை. நீங்களும் என்னை இப்படி கேள்வி கேட்க ரைட்ஸ் கிடையாது. உங்க ஹோட்டலில் வொர்க் பண்ணும் போது என்ன நடந்துச்சுனு தெரியும் தான சார்? நானே ரிசைன் பண்ணினேன். இப்போதும் நான் அதே மௌனா தான்! கிஷான் சார் சொன்னால் மட்டுமே நான் வேலையை விட்டுப் போவேன். நீங்க உங்க ஃப்ரண்ட் கிட்ட போய் என்னைப் சந்திக்க கம்ப்ளைண்ட் செய்து வேலையை விட்டு துரத்துங்க" என்று அகதா எப்போது கிளம்புவாள்? என்று சேர்ந்திருந்தவள் இவனது வார்த்தைகளால் காயப்பட்டுப் போனாள். 


அதனால் தான் மௌனாவும் இப்படி அவனிடம் பொரிந்து தள்ளி விட்டாள். 


தன்னுடைய அலுவலக அறையிலிருந்து இதை கணிணியில் பார்த்துக் கொண்டிருந்தான் கிஷான். 


"என்கிட்ட வீராப்பாக பேசிட்டு, மௌனாகிட்ட அவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருக்கான்" என்று நினைத்தான் . 


ஆனால் மஹதனோ , தன்னை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்திப் பார்க்கும் இவளை மட்டும் அடக்க வழி தெரியாமல், கோபமாகி , அங்கிருந்து வெளியேறி விட்டான்.


செல்லும் வழியெல்லாம் மௌனாவின் மிடுக்கான பேச்சு அவனை இம்சித்தது. நண்பனுடைய தங்கும் விடுதியில் இருப்பவளை ஏறெடுத்தும் பார்க்காமல் இருப்பவன் இன்று அவளது பதட்டம் துணுக்குறச் செய்தது. 


வேலை அவளுக்கு விரைவில் சகிப்புத் தட்டி விட்டதோ? என்று தான் வாயைக் கிளறினான். 


மறைமுகமாக அவன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்காமல், மூக்கை உடைத்து அனுப்பி விட்டாள். 


"உன்னை நான் லவ் பண்றேன்னு சொன்னால் காமெடியாகத் தான் இருக்கும். அதுக்கு உன் பதில் என்னவாக இருக்கும்னு தெரிஞ்சிக்க ஆர்வமாக இருக்கே!"


தான் நினைத்ததை நடத்திக் கொள்ள துணிந்தால் , விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டும் தானே? 


அதற்குத் தயாராகி விட்டுத் தான் அந்த விபரீதத்தை நடத்த முடிவெடுத்தான் மஹதன். 


"அகி! எல்லாம் ஓகே தான?" 


வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்தவள், அழைத்தவுடன் அகதா காலை அட்டெண்ட் செய்து பேசி விட்டாள். 


"ஓகே தான் மௌனா. லேட் நைட் வர வாய்ப்பு இல்லை. விடியற்காலையில் வந்துடுவேன்.தீபக் கிளம்பியாச்சு. தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்" 


அகதாவின் குரல் பிசிறடித்தது. 


என்னவோ நடந்திருக்கிறது! அதை வந்தவுடன் கேட்டுக் கொள்வோம் என்று அன்றிரவு வீட்டில் தனியே உறங்கினாள் மௌனா. 


அகதா இங்கே வந்ததும், அடுத்த மூன்று நாட்கள் அவளுடன் தன் பெற்றோரைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறாள் மௌனா. 


இன்னும் சம்பளம் வரவில்லை தான். அதற்காக தன்னை நினைத்து கவலை கொள்ளும் தாய், தந்தையைப் பார்க்க இவளுக்கும் ஏக்கம் வந்தது. 


 தன்னிடம் இருக்கும் அளவான சேமிப்புப் பணம், போய், வர சரியாக இருக்கும். அதற்குப் பிறகு அடுத்த மாதம் சம்பளம் வந்து விடுமே! என்று கணக்குப் போட்டாள். 


குறிப்பு எடுத்து அனுப்புங்கள் என்று கூறியும், அவளது அப்பாவும், அம்மாவும் தங்களுக்குத் தேவையான பொருட்கள் இன்னதென்று அவளுக்கு அனுப்பி வைக்கவில்லை. 


அதையும் நேரில் போய்க் கேட்டுக் கொண்டு, அடுத்த தடவை செல்லும் பொழுது வாங்கிக் கொண்டு போகலாம்! இவ்வாறான பல திட்டங்களுடன் உறங்கிக் கொண்டு இருந்தாள் மௌனா. 


நாளைய விடியலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மௌனாவிற்கு , அவளைக் கலங்கடிக்கப் போகும், மஹதனின் திட்டம் தெரிந்தாள் அவளது நிலை என்னவாகும்? நிலை தடுமாறாமல் இருப்பாளா? 


                                - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...