முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நங்கையின் மறவோன் 10

 


"அப்பா!" என்று பலவீனமான குரலில் தந்தையை அழைத்தாள் முக்தா. 


"சொல்லு முகி" என்று தன்னுடைய மகளைப் பார்த்தார் நீலகண்டன். 


"மூர்த்தி அங்கிள் கிட்ட பேசுனீங்கள்ல, அதுக்கு மஹதன் எனக்கு கால் பண்ணினார்" என்று தோய்ந்த குரலில் ஆரம்பித்தாள். 


அதிலேயே புரிந்து கொண்டார் நீலகண்டன். 


மஹதன் கோபத்தைத் தன் மகளிடம் காட்டியுள்ளான் என்று தான் யோசித்தார். 


"எதாவது கோபமாக பேசிட்டானா முகி?" 


"இல்லை அப்பா. ஆனால் அவர் தன்னோட அப்பாவுக்காக பேசினார்"


என்று செல்பேசியில் மஹதன் பேசியவற்றைக் கூறினாள். 


"மஹதன் ஏதோ தனியாக பிஸினஸ் பண்றான். அவன் மூர்த்தி கூட இல்லைன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் மூர்த்திக்கு நிழலாக இருந்துக்கிட்டு இருக்கான்னு இப்போ தான் தெரியுது. நான் பிஸினஸை வச்சு பிளாக் மெயில் பண்ணினால் அவன் அதைவிட நம்மளை பிளாக் மெயில் பண்றான்" என்று கோபத்தில் பல்லைக் கடித்தார். 


"நாம விஷயத்தை ரொம்ப கிரிட்டிக்கல் ஆக்கிட்டோம் அப்பா" என முற்றிலும் நம்பிக்கை உடைந்த குரலில் கூறினாள் முக்தா. 


"அப்படி இல்லை முகி" என்று மகளைத் தேற்ற முயன்றார் நீலகண்டன். 


"அப்படித்தான் நடந்துருக்கு அப்பா. மஹதனோட பேசியதில் எனக்கு எல்லாமே புரிஞ்சிருச்சுப்பா. கட்டாயப்படுத்தினாலும் கூட என்னை அவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டான். இத்தோடு எல்லாம் முடியட்டும் அப்பா" என்று அறைக்குள் போய் விட்டாள் முக்தா. 


எல்லாரும் எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள் தானே! அதுபோல, முக்தாவிற்கு ஞானோதயம் வந்திருக்கலாமே! தன்னிலை உணர்ந்து விட்டாள் போல! அப்படியானால் நிம்மதி தான், இல்லையென்றால் கஷ்டம். 


மகள் கூறியதை மூளைக்குள் செலுத்துவதற்கே நீலகண்டனுக்கு நேரம் எடுத்தது. 


பெண்ணின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் உருவி எடுத்து விட்டோமோ? உள்ளத்தை வாட்டியெடுத்தது. 


திருமூர்த்தியின் நிலையில், இப்போது நீலகண்டன் இருக்கிறார். 


முக்தாவின் மனம் சுக்குநூறாக உடைந்து விட்டது.அது உடைந்ததில், தன் பங்கும் பெரும்பான்மையானது என்று உணர்ந்து கொண்டார். 


மகள் முழுமையாக மனதளவில் சரியாக வேண்டும் என்பதே அவரது தற்போதைய விருப்பம். 


விரக்தியின் உச்சக்கட்டத்தில், ஒரு சில நேரங்களில் வருவது புன்னகை தானே! 


முக்தாவின் இதழ்கள் விரக்திச் சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருந்தது.


ஏமாற்றம் தரும் வலிகளுக்கு வீரியம் அதிகம் தானே? 


அதையும் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டாள் முக்தா. 


இனி வரும் காலங்கள் அவளுக்கு வாழ்வில் உதயத்தைக் கொடுக்கட்டும். 


தான் செய்ததை சரி பண்ண நினைத்த நீலகண்டன், நண்பனுக்குக் கால் செய்தார். 


உறக்கம் சற்றே கலைந்து போயிருந்த திருமூர்த்தி கால் வருவதைப் பார்த்து, 

'மறுபடியுமா?' என்று அட்டெண்ட் செய்தார். 


"மூர்த்தி" என்றழைத்த குரலைக் கேட்டு திகைத்தார். 


"என்னாச்சு நீலகண்டா?" 


"ஒன்னும் இல்லை மூர்த்தி. நான் உன் கிட்ட பார்ட்னர்ஷிப் பத்தி சொன்னேன்ல. அதை கேன்சல் பண்ண வேண்டாம். எப்போதும் போலவே நாம பார்ட்னர்ஷிப்பில் இருக்கலாம்" என்றார். 


தயக்கம் களைந்து, 

"உண்மையாகவா நீலகண்டா?" என்று வினவினார். 


"ஆமாம் மூர்த்தி. எல்லாத்துக்கும் உங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்" எனவும், 


உடனே நெகிழாமல், இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து பேச ஆரம்பித்தார் திருமூர்த்தி. ஒரு தடவை பெற்ற அனுபவம் பல பாடங்களுக்கு சமம் அல்லவா! 


"மன்னிப்பு வேண்டாம் நீலகண்டா. நீ டிசிஷனை மாத்திக்கிட்டதே போதும்" என்று பட்டும் படாமல் பேசினார். 


அதற்குப் பிறகு இருவரும் கல்யாண விஷயத்தை தவிர்த்து மற்ற பொதுவான விஷயங்களைப் பேசி விட்டு, அழைப்பைத் துண்டித்தனர். 


ஒரு புத்துணர்வு வந்தது போல, அறையை விட்டு வெளியேறிய கணவரைப் பார்த்து யோசனையில் ஆழ்ந்தார் கௌசல்யா. 


அவரைப் புன்னகையுடன் ஏறிட்டு நீலகண்டனின் மறுமொழியைக் கூறினார் திருமூர்த்தி. 


கொசல்யாவிற்கு உடனே தோன்றியது மஹதனைப் பற்றித் தான்! 


தந்தைக்குப் பக்க பலமாக நிழலுருவாக இருப்பேன் என்பதை காப்பாற்றியிருக்கிறான். 


"ஸ்ட்ராங் ஆக காஃபி கொண்டு வா கௌசி" என்று கம்பீர குரலில் கூறினார். 


கௌசல்யா காஃபி கலக்கச் சென்று விட்டார். 


சுற்றிப் பார்க்கத் துடித்த மனதுடன் நின்றிருந்த மௌனாவைக் கிஷான் எதிர் கொண்டான். 


"குட் மார்னிங் சார்" என்று அவனைப் பார்த்ததுமே வணக்கம் செலுத்தினாள். 


"குட் மார்னிங் மௌனா. ஹோட்டலை சுற்றிப் பார்த்துட்டு வரனும்னு தோணுது போல?" என்று விழி இடுங்க கேட்டான் கிஷான். 


கண்கள் காட்டிக் கொடுத்ததை இதழ்கள் கொண்டு சரி செய்ய முயன்றாள்.


"அதெல்லாம் இல்லை சா.. ர்" என்க, 


"பரவாயில்லை போயிட்டு வாங்க. ஆனால் சீக்கிரம் வந்துடுங்க" என்று கூறிவிட்டு தன் அலுவலக அறைக்குள் அவன் நுழைந்ததும், கொடுத்த நேரத்தை வீணடிக்கப் பிடிக்காமல், வேகமாக விடுதியின் உள்ளே சென்றாள் மௌனா. 


அறைகள் அவ்வளவையும் அளவிட்டது அவளுடைய விழிகள். உள்ளே செல்லக் கூடாது என்று வெளியே இருந்து ஒவ்வொரு அறையின் முன்னும் இருந்த வேலைப்பாடுகள், அலங்காரப் பொருட்களைப் பார்வையிட்டாள். 


பிறகு, சத்தமில்லாமல் வந்த தடம் தெரியாமல், தன் இருப்பிடத்திற்கு வந்தாள். 


மஹதனின் தங்கும் விடுதியில் முக்தாவுடனான தனக்கு நேர்ந்த முதல் நாளைய அனுபவத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டது மனம். 


'லீவ் இட் மௌனா! கடந்த காலம் அது' என்று தனக்குள் உத்வேகத்தை வரவழைத்துக் கொண்டு வேலையைத் தொடங்கினாள்.


கிஷானும் அவளது வேலையையும், அணுகுமுறையையும் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறான். 


பெர்ஃபெக்ட் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவிற்கு தன்னுடைய முழுமையான பங்களிப்பை வேலையில் காட்டினாள். 


 இரண்டு முறையும் வேலை கிடைத்ததற்கு அகதாவை வெளியே அழைத்துச் சென்று, உணவு வாங்கிக் கொடுத்து உபசரிக்கவில்லை. அதனால் மாலை வேலை முடிந்ததும் அவளுடன் வெளியே செல்ல திட்டமிட்டிருந்தாள் மௌனா. 


மடமடவென்று வேலைகள் முடிந்து விடுதியில் இருந்து பணியாளர்கள் வெளியேறினர். அவர்களுடன் அன்றைய நாட்குறிப்பை சமர்ப்பித்து விட்டு மௌனாவும் வெளியேறி வீட்டை அடைந்தாள். 


"குட் ஈவ்னிங் மௌனா" என்று மலர்ந்த முகத்துடன் வரவேற்ற தோழியைக் ஓடிப் போய்க் கட்டிக் கொண்டாள் மௌனா. 


"அகி! இன்னைக்கு வொர்க் சூப்பராக இருந்துச்சு. ஒரு பிரச்சினையும் இல்லாமல், நிம்மதியாக வேலை பார்த்தேன்" என்று அவள் கூறவும், 


"இதுவே உனக்கு நிலைக்கனும் மௌனா" என்று மனதார வாழ்த்தினாள். 


"கண்டிப்பாக நிலைக்கும். இப்போ விஷயம் அது இல்லை அகி. நீ நாளைக்கு ஈவ்னிங் என் கூட வெளியே வரனும்" என்று ஆணையிடுவது போல கூறினாள் மௌனா.


"ஏன் திடீர்னு?" 


"எனக்கு வேலைக் கிடைச்சதுக்கு இன்னும் உனக்கு நான் ட்ரீட் கொடுக்கவே இல்லையே அகி? அதுக்குத் தான்" என்றாள். 


"இப்போ இது தேவையா மௌனா? உன் கிட்ட இருக்கிற பணத்தை முதலில் வீட்டுக்கு அனுப்பு. என்னை அப்பறம் பார்த்துக்கலாம்" என்று கூறினாள். 


"அகி! ப்ளீஸ்… வீட்டுக்கு முதல் மாச சம்பளத்தை அனுப்பிடுவேன். உனக்கு நான் எதுவுமே பண்ணியது இல்லை. அதனால் ட்ரீட் கண்டிப்பாக நீ அட்டெண்ட் பண்ணனும்" என்று உத்தரவிட்டாள் மௌனா. 


அதற்குப் பிறகு அகதாவின் மறுப்பு அங்கு வேலைக்கு ஆகவில்லை. 


"அண்ணா பேசினாரா அகி?" நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பேச்சை எடுக்கிறாள் மௌனா. 


காது கேளாதவள் போல அமர்ந்திருந்தாள் தோழி. 


"ப்ச் அகி" என்று அவளைத் தன்பால் திருப்பினாள். 


"என்ன மௌனா?" 


"உங்கிட்ட தான கேட்கிறேன்?" 


"ஆமாம்.அவர் கால் பண்ணலை போதுமா?" என்று அணைத்து வைத்திருந்த தொலைக்காட்சியை வெறித்தாள் அகதா. 


"வா சாப்பிடலாம்" 


மேலும் மௌனா இதைப் பற்றி வினவினால் தன்னால் பதிலளிக்க முடியுமா? என்பதாலேயே சாப்பாட்டில் பேச்சு போயிற்று. 


"சரி"


மௌனாவும் தோழியை தூண்டித் துருவாமல், எழுந்து சென்றாள். 


பிரம்மாண்டமான மால் ஒன்றிற்கு சென்றிருந்தனர் மௌனாவும், அகதாவும். 


அங்கே அகதாவிற்குப் பிடித்தவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று சுற்றிக் கொண்டிருந்தாள் மௌனா. 


அவளுடன் அமைதியாக நடை போட்டாள் அகதா. 


ஒரு கட்டத்தில் எதேச்சையாக முக்தாவை எதிர் கொண்டனர் இருவரும். 


அகதாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள் மௌனா. 


முக்தாவையும், மௌனாவின் செயலையும் ஒரு சேர அறிந்து கொண்ட அகதா, தங்கள் எதிரிலிருப்பது முக்தா என்பதை அறிந்து கொண்டாள் அகதா. 


மருட்சியான பார்வையில் தன்னைப் பார்த்துக் கொண்டு , அருகில் நின்றிருப்பவளின் கரத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இருந்த மௌனாவை வெற்றுப் பார்வை பார்த்தாள் முக்தா. 


திடீரென்று தான் முன்னால் வந்து நிற்கவும் அவளுக்குள் ஏற்பட்ட பதட்டம் தான் இவற்றிற்கு காரணம். 


"இவங்க தான் முக்தாவா?" என்று கேட்பது போல பார்வைப் பரிமாற்றம் செய்தாள் அகதா. 


"ஆமாம்" என தலையசைத்தாள் மௌனா. 


"ஹாய் மௌனா" என்று பேருக்குப் புன்னகை புரிந்தாள் முக்தா. 


"ஹா.. ய் மேடம்" என்று திணறியவளிடம், 


"பதட்டப்படாத.இனிமேல் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்" என்று உறுதியாக கூறியவளை விழி விரித்துப் பார்த்தாள் மௌனா. 


"உண்மையைத் தான் சொன்னேன். பை" என்று அவர்களைத் தாண்டிச் சென்றாள் முக்தா. 


"அகி!! என்னைக் கொஞ்சம் கூட்டிட்டுப் போய் சேரில் உட்கார வை" என்று கூறவும், 


அவளைத் தாங்கிப் பிடித்து அங்கே இருந்த நாற்காலியில் அமர வைத்தாள் அகதா. 


தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தாள். 


"அகி! இப்போ என்ன நடந்தது? முக்தா மேடமா அவங்க?" 


"ஆமா மௌனா. எனக்குமே ஆச்சரியம் தான். நீ அவங்களைப் பத்தி சொன்னதுக்கும், இப்போ நடந்துக்கிட்டதுக்கும் சம்பந்தமே இல்லையே? ஒருவேளை மனசு மாறிட்டாங்களோ?" என்று சந்தேகமாக கேட்டாள். 


"இருக்கலாம் அகி. அது அவங்களுக்குத் தான் நல்லது. நிம்மதியாக இருக்கட்டும்" 


 முக்தாவின் வாழ்க்கையில் இனி நல்லது நிகழட்டும் என பிரார்த்தித்துக் கொண்டாள் மௌனா. 


"உனக்குப் பிடிச்ச திங்க்ஸ் எல்லாம் வாங்கியாச்சு. அப்பறம் என்ன சாப்பிடலாம்?" என்று உணவு உண்பதற்காக வந்தார்கள். 


"நான்வெஜ் வேணுமா? வெஜ் வேணுமா அகி?" என்று கேட்டாள். 


"வெஜ் போதும் மௌனா" என சைவ உணவுகளைப் பார்வையிட்டாள் அகதா. 


"அப்போ பன்னீர் பட்டர் மசாலா, நாண். இதை ட்ரை பண்ணு. உன்னோட ஃபேவரைட்" 


முதலில் அதை ஆர்டர் செய்தனர். 


மௌனாவிற்கான உணவையும் தருவித்தனர். 


"டெஸர்ட் என்ன ஆர்டர் பண்ணலாம் அகி?" 


"சிஸிலிங் ப்ரௌனி" என்றாள். 


"எனக்குச் சாக்லேட் ஐஸ்கிரீம்" என்று ஆர்டர் செய்து கொண்டனர். 


கிளம்பத் தயாராகும் போது, மற்றுமொரு அதிர்ச்சியை எதிர் கொண்டனர் மௌனாவும், அகதாவும். 


இப்போது மௌனா மயங்கி விழுந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. 


ஆனால், எதிரே நின்றிருந்தவனோ இவர்களைப் பாராமல், ஒதுங்கிச் சென்று விட்டான். 


ஆணியடித்தாற் போன்று நின்று விட்டாள் மௌனா. 


- தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...