முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நங்கையின் மறவோன் - 1 (ரீரன்)

 


தன் அறையில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் பெண்ணவள். 


எல்லாம் நாளைப் போய்ச் சேரப் போகும் வேலையைப் பற்றிய யோசனை தான். 


"மௌனா! இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு வெய்ட் பண்ணிட்டு இப்படி பதட்டப்பட்றதுல நியாயம் இருக்கு. வேலையே கன்ஃபார்ம் ஆகிருச்சு.இன்னும் கொலுசு சத்தம் கேட்குறா மாதிரி டங் டங்ன்னு நடக்காதடி. தலை வலிக்குது" 


தலை வலி தந்த எரிச்சலில் குரலை உயர்த்தித் தோழியை அதட்டினாள் அகதா. 


"என்ன அகி! நீயே இப்படி பேசற? முதல் நாள் வேலை, நர்வஸா இருக்குடி" 


சினுங்கிக் கொண்டே பதிலளித்தாள் மௌனா. 


"அப்படித்தான் முதல்ல இருக்கும் டி. ஆனால் போகப் போக பிடிச்சிரும். அதுவுமில்லாமல் உனக்குப் பிடிச்ச வேலை வேற. சோ, நர்வஸ் ஆகாம ஃபர்ஸ்ட் டே எப்படி ஃபேஸ் பண்ணலாம்னு யோசி" 


சின்னதாக அறிவுரை தந்த அகதா உணவைச் சமைக்கப் போனாள். 


"ஆமால்ல! நமக்குப் பிடிச்ச வேலை.அதைச் செய்ய எதுக்கு இவ்ளோ பதட்டப்பட்றோம்" 


சற்றுத் தெளிந்தவள், கிச்சனுக்குப் போய், 

"அகி…! சோ ஸ்வீட் தாங்க்யூ" என்று தோழியிடம் நன்றி கூறினாள். 


அடுத்த நாள் வேலைக்குக் கிளம்பியவளுக்கு, 


"ஆல் தி பெஸ்ட் மௌனா!" 


புன்னகை ததும்பும் குரலில் தனக்கு வாழ்த்துச் சொல்லிய அகதாவைப் பார்த்து, 


"தாங்க்யூ அகி" என்று புன்னகைத்தாள் மௌனா. 


பிரம்மாண்டமான அந்த ஹோட்டலின் வரவேற்பறையில், தனக்கான வேலை காத்துக் கொண்டிருக்க, அதை ஆசையுடன் ரசித்தவாறே சென்று தனக்காக வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் மௌனா. 


அந்த நேரம் பார்த்து, அந்த தங்கும் விடுதியின் முதலாளி உள்ளே வந்தான். 


வந்தவன் நேரே அறைக்குச் செல்லாமல், 

"மிஸ்…" என்று அவளது பெயர் தெரியாததால், கேள்விக் குறியாக நோக்கினான். 


"மௌனா சார்" வெடவெடத்த போதும், பதில் சொன்னாள். 


"ம்ம்.மிஸ்.மௌனா.நியூ ஜாய்னி தான?" 


கேள்வி கேட்டுக் கொண்டே, பார்வையால் அவளது கண்களைத் துளைத்தான். 


"எஸ் சார்"


"மேனேஜர் செலக்ட் பண்ணினாலும் உன்னோட சர்டிபிகேட்டை மறுபடியும் செக் பண்றேன்" 


அதை அவளிடம் சொல்லாமல் கூட அவனால் செய்திருக்க முடியும். எதனால் தெரிவித்தான்? என்பது விளங்கவில்லை அவளுக்கு. 


'அதைச் செக் செய்துட்டு என்ன சொல்லப் போறாரோ?'


அவளுடைய அத்தனைச் சான்றிதழ்களும் சரியானவையே! அப்படி இருந்தாலும் இவனைப் பார்த்ததும் உள்ளே உதறல் எடுத்தது. இதில் சான்றிதழ்கள் அவனால் சரிபார்க்கப்பட உள்ளது எனவும், மிரண்டு போனாள் மௌனா. 


அவன் எப்போதோ அலுவலகத்தினுள்ளே போய் விட்டான். 

அவளுக்குத் தான் நிலை கொள்ளவில்லை. 


"இதுக்கு இவரே என்னை இண்டர்வியூ செய்து எடுத்து இருக்கலாம்" 


புலம்பித் தள்ளியவாறே இருந்தாள். 


தன்னுடைய அறைக்குள் வந்து,நாற்காலியில் அமர்ந்தவன் கணினியைக் கூட திறக்கவில்லை. 

அதற்குள், மஹதனுக்கு அழைப்பு வந்தது. 


"ஹலோ"


"மஹத்!! திஸ் இஸ் முக்தா. உங்களை மீட் பண்ணனும்? ஆஃபீஸூக்கு வர்றேன்" 


"வெய்ட் முக்தா. நான் இப்போது தான் ஆஃபீஸூக்கு வந்தேன்" என்று சொல்லும் போதே குறுக்கிட்டு, 


"இல்லை ப்ளீஸ். உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நான் இப்போ தான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கேன். உன்னை மீட் பண்ணனும்னு இங்க வந்ததில் இருந்து துடிச்சிட்டு இருக்கேன்" 


 அவனைப் பார்த்தே ஆக வேண்டும் என செல்பேசியை அணைத்து விட்டு,அவனைப் பார்க்க கிளம்பினாள் முக்தா. 


அவள் வருவதற்குள், மௌனாவின் வேலையைப் பற்றிக் காண்போம். 


ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் தான் தற் சமயத்தில், மஹதனுடைய தங்கும் விடுதியில் அவள் பார்க்கப் போகும் வேலை. 


புதிதாக வேலைக்குச் சேர்த்திருப்பதால்,இனி தான் இங்கிருப்பவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது மௌனாவிற்கு. 


தந்தையும், தாயும் ஊரில் இருக்க, இவள் மட்டும் வேலைக்காக இங்கே வந்திருந்தாள். 


தனியாக வீடு எடுத்துத் தன்னுடன் பள்ளியில் பயின்ற அகதாவுடன் தான் தங்கி இருக்கிறாள். 


அவளுக்குக் குறும்புத்தனம் தேவைக்கேற்ப இருந்தாலும்,சில நேரங்களில் பொறுப்பும் தலை தூக்கும். 


சொன்னது போலவே, மௌனாவின் சான்றிதழ்களைச் சரி பார்க்கத் தொடங்கி இருந்தான் மஹதன். 


அந்த நேரம் பார்த்து, அலுவலகத்திற்கு, வேண்டாத விருந்தாளியாக, வந்து சேர்ந்தாள் முக்தா. 


ரிசப்ஷனில் நிற்கும் போது, மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும் என்பதால், மௌனா தன்னுடைய ட்ரேட் மார்க் புன்னகையில் மிளிர்ந்தாள். 


முதல் நாள் வேலை என்று உள்ளுக்குள் பதட்டம் கொண்டாலும், சான்றிதழ்களைப் பார்க்கும், மஹதன் என்ன சொல்வானோ? என்று இருந்தாலும் தன் வேலையைச் செவ்வனே செய்ய வேண்டும் என்பதே அவளது தலையாயக் கடமையாக இருந்தது. 


மௌனாவின் சான்றிதழ்களைச் சரி பார்த்து மூடி வைத்தவன், 

"குட் க்ரேட்ஸ் தான்" என்று சொல்லிக் கொண்டான். 


 முக்தா தன்னுடைய காரை அலுவலகத்தின் முன்னால் நிறுத்தி விட்டு, உள்ளே வந்தாள். 


தான் செய்திருந்த அலங்காரத்தில் , முக்தாவும் ஜொலித்துக் கொண்டு இருந்தாள் தான்! 


ஆனால் அவ்வாறு ஜொலித்த முகமோ, மௌனாவைப் பார்த்ததும் விகாரமாக மாறியது.


மௌனா தன்னை விட அழகாகத் தெரிவது ஏனோ முக்தாவிற்குப் பிடிக்கவில்லை. 


ரிசப்ஷனில் வந்து நின்று தன்னை கூரிய விழிகளால் ஆராயும் இந்தப் பெண் யாரென்று பார்த்துக் கொண்டே, 

"குட் மார்னிங் மேம்.வெல்கம் டூ அவர் ஹோட்டல்! ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ மேம்?" (காலை வணக்கம் மேம். எங்கள் விடுதிக்குத் தங்களை வரவேற்கிறேன்! உங்களுக்கு நான் எவ்வாறு உதவி செய்ய வேண்டும்?) என்று பணிவாகக் கேட்டாள் மௌனா. 


அவளது பணிவை ஏற்காது, அலட்டலான விழிகளுடன், அலட்சியமானக் குரலில், 

"மஹதனைப் பார்க்கனும்" என்றாள் முக்தா. 


"அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா மேம்?" 


"நான் அவனோட ஃப்ரண்ட். அப்பாயிண்ட்மெண்ட் தேவையில்லைன்னு நினைக்கிறேன்" என்று பேசியவளிடம், 


"ஜஸ்ட் வெய்ட் மேம்" என்று மஹதனை இண்டர்காமில் அழைத்தாள் மௌனா. 


தன்னிடம் அதற்கு அனுமதி கேட்காமல், முதலாளியை அழைத்தது சத்தியமாக முக்தாவிற்குப் பிடிக்கவில்லை, 


அது மட்டும் இல்லாமல், மஹதன் தன்னைப் பார்க்க வர வேண்டாம் என்று கூறிய பிறகு, வம்படியாக 'வந்தே தீருவேன்' என வந்திருப்பவளை நிச்சயமாக அவன் வரவேற்க மாட்டான். 


"ஹலோ"


"சார்! உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க"அவனிடம் கூறிவிட்டு, 


" உங்கப் பேர் மேம்?" என்று வந்தவளைக் கேட்டாள் மௌனா. 


"முக்தா!!!" 


மஹதனே கோபத்தில் அவளது பெயரை உச்சரிக்கவும், தெரிந்த பெண் தான் போலும், 


"சார் அவங்களை உள்ளே அனுப்பவா?" என்று கேட்டாள். 


"வேண்டாம்.அப்படியே வீட்டுக்குக் கிளம்ப சொல்லிடு" என்று அழைப்பைத் துண்டித்து விட்டான் மஹதன். 


தெரிந்தவள் தான் ஆனால் பிடித்தமானவள் இல்லை போல! 


மௌனா அவன் கூறியதை முக்தாவிடம் தெரிவிக்க, அவள் கொதித்து எழுந்து விட்டாள். 


"அவன் என்மேல் கோபமா இருக்கான். அதனால் தான் அப்படி பேசிட்டான். நான் உள்ளேப் போய்ப் பேசிக்கிறேன்" 


இவளுடைய பேச்சைக் காதில் வாங்கப் போவதில்லை என்று தெரிந்தாலும், தன்னால் ஆன மட்டும் அவளைத் தடுக்க எண்ணினாள் மௌனா. 


"மேம் ப்ளீஸ்! சார் உங்களுக்கு பர்மிஷன் குடுக்கல. இது ரொம்ப தப்பு" என்று புரிய வைக்க முயன்றாள். 


ஆனால் முக்தாவிற்கோ, இந்த வாய்ப்பை விட்டால், வேறு வழியில்லை என்று அவளைத் தள்ளி விடக் கூடத் தயாராக இருந்தாள். 


"வழியை விடு. இல்லன்னா நடக்கறதே வேற" 


எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்த முக்தாவின் குரல் கொடுத்தச் சத்தத்தில் அலுவலகத்தில் இருப்பவர்கள் ஸ்தம்பித்துப் போயினர். 


பிறகு விஷயம் மஹதனுக்குத் தெரியாமல் இருந்து விடுமா? 


இங்கு நடந்த களேபரத்தை அவனுக்கு ஊழியர் ஒருவர் தெரிவிக்கவும்,முக்தாவின் மீதிருந்த கடுப்பை அவளிடம் நேரடியாகக் காட்டி விட எண்ணி, அவ்விடத்திற்கு விரைந்தான் மஹதன். 


அதற்குள் முக்தா தள்ளி விட்டதால், மௌனாவின் தலைக் கதவில் இடித்து விட்டது. 


சரியாக மஹதன் கதவைத் திறக்க வரும் போது மௌனாவின் தலையில் இருந்து வடிந்த குருதியைக் கண்டான். 


வேகமாக பணியாளரை அழைத்தவன், 

"ஃபர்ஸ்ட் எய்ட் எடுத்துட்டு வந்து ட்ரீட் பண்ணுங்க. சீக்கிரம்!" என்று துரிதமாக செயல்பட்டவன், 


பயத்தில் வெலவெலத்துப் போய் நின்றிருந்த முக்தாவிடம், 

"என்ன செய்திருக்க முக்தா?" அடிக்குரலில் சீறினான் மஹதன். 


ஏற்கனவே அழையாமல் வந்து விட்டோம், இதில் இந்த செயல் வேறு. அவளைப் படுகுழியில் தள்ளப் போகிறது என்ற அச்சம் உள்ளம் எங்கும் பரவித் தகித்தது.


"சொல்லு?" 


அவன் வார்த்தைகள் சீறிப் பாய்ந்து கொண்டு இருந்ததை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மௌனா. 


"சாரி…மஹத்.." மன்னிப்பைக் கூட ஏனோ தானோ என்று கேட்டவளை பார்வையாலேயே எரித்துக் கொண்டு இருந்தான் மஹதன். 


"என்னைத் தள்ளி விட்டியா? எங்கிட்ட சாரி கேக்குற! அந்தப் பொண்ணுக் கிட்டப் போய் சாரி கேளு" 


ஆத்திரத்தில் கூறினாலும் சரியானதைக் கூறினான். 


"அவகிட்டயா?" முணுமுணுத்தவாறே மௌனாவின் அருகில் சென்றாள் முக்தா. 


தலையில் பிளாஸ்திரி முளைத்திருக்க, முக்தாவைப் பார்வையிலேயே தடுத்து நிறுத்திய மௌனா, 

"இங்க நான் வேலைக்குச் சேர்ந்து இருக்கேன் சார்.இவங்க உங்களுக்கு என்ன ரிலேஷன்னுத் தெரியாது. அதே மாதிரி உங்களோட பர்சனல் விஷயத்தில் தலையிட்ற உரிமையும் எனக்கில்லை. எல்லாத்துக்கும் முக்கியமாக, எனக்கு இப்படி தலையில் அடிபட்ற அளவுக்கு இவங்களை நான் எதுவும் ஹர்ட் பண்ணல.ஆனால் இவங்க கொஞ்சம் கூட, சென்ஸே இல்லாமல், எனக்குக் காயம் வரவழைச்சு இருக்காங்க " என்று பேசியவள், 


ஐந்து நொடிகள் மூச்சு வாங்கி விட்டு, 


"இவங்க மேல நான் கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் ஈசியா வெளியே வந்துருவாங்க. ஆனால் இதற்கான விலை அவங்கத் தந்து தான் ஆகனும்" என்றாள். 


அதற்குள் முக்தாவோ, 

"தர்றேன்.பணம் தான கேட்கப் போற?" என்று இளக்காரம் அவளது பேச்சில் அதிகமாகவே தென்பட்டது. 


"இதையே எத்தனை நாளைக்குச் சொல்லுவீங்க மேம்.எனக்கு உங்கப் பணம் வேண்டாம்" அவளிடம் கூறிவிட்டு, 


"இவங்க மேல என்னால் தான் கம்ப்ளைண்ட் கொடுக்க முடியாது. கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. அவங்க உங்களோட ரிலேடிவ் தானே? எனக்காக நீங்க கம்ப்ளைண்ட் ஃபைல் பண்றீங்களா சார்?"


என்று நிமிர்வாக கேட்டு விட்டு, உச்சபட்ச அதிர்ச்சியில் தடுக்கி விழுபவளைப் போல நின்றிருந்த முக்தாவையும் , ஆச்சரியத்தில் இருந்த மற்ற அலுவலக ஊழியர்களையும் கண்டு கொள்ளாமல், மஹதனைப் பார்த்துக் கொண்டு, அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தாள் மௌனா. 


                                    - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...