முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 16

 


மௌனாவுடைய அழைப்பை நிராகரித்து விட்டு தந்தையிடமும், தாயிடமும்,"என்னோட வருங்கால பொண்டாட்டிக்கு ஏதாவது ஆபத்து வந்தால் நான் என்ன செய்யனும்?" என்று கர்ஜித்தான் மஹதன்.


"ப்ச்! அப்போ நீ ஆக்ஷன் எடு மஹத்! ஆனால், முக்தாகிட்ட அப்படி என்ன சிடுசிடுப்பு, குரோதம்?" என்று காட்டமாக கேட்டார் கௌசல்யா.


"எனக்குக் குரோதம் இல்லைம்மா. முக்தாவுக்கு இருந்து விடக் கூடாதுன்னு தான்!" என்று இவனும் குரலை உயர்த்தினான்.


"நீ இன்னும் அந்தப் பொண்ணை நம்பலையா?" என்றார் திருமூர்த்தி.


நண்பனின் மகள் மனம் மாறிய பிறகும் மகனுக்கு அவள் மேல் நம்பிக்கை வரவில்லை என்றால், இவருக்குச் சங்கடமாக இருந்தது.


"நம்பிக்கை இல்லை ப்பா!" என்று உறுதியாக கூறினான் மஹதன்.


ஏனெனில், இந்தளவிற்கு, முக்தாவை நம்புவதற்கு மனம் இடம் தரவில்லை அவனுக்கு.


"ப்ச்! ஒரு சாரி கூட கேட்காமல் அப்படியே நின்னுட்டு இருந்த!" என மீண்டும் ஆரம்பிக்க,


"போதும் அப்பா. முக்தாவே அதைப் பெருசு பண்ணலை. நீங்க ரெண்டு பேரும், அவளுக்காகப் பேசி எனர்ஜியை வேஸ்ட் பண்ணிக்காதீங்க!" என்று அதற்கு மேல் நில்லாமல் அறைக்குள் போய் விட்டான் மஹதன்.


"நீங்க நீலகண்டன் சார் கிட்டப் பேசுங்க" எனக் கணவனிடம் சொன்னார் கௌசல்யா.


இதே சமயம், மண்டபத்திலிருந்து வந்த, வெளியில் நிற்காமல், காரினுள் ஏறி அமர்ந்து கொண்டாள் முக்தா.


மஹதனுடனிடம் தங்களது மனக்கிலேசத்தைக் கொட்டிய பிறகு வந்து சேர்ந்தனர் கிஷானும், நீலகண்டனும்‌.


"எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? ஏறுங்க! ஏறுங்க!" என்று தன் மனநிலை மாறியதைப் போலக் காட்டிக் கொண்டாள் முக்தா.


அதைப் பார்த்த இருவருக்குமே, வருத்தம் மேலிட்டது.


தந்தையின் முகம் கசங்கிப் போயிருப்பதைப் பார்த்தவுடன்,"அப்பா!" என்று அவரை அழைத்தாள் மகள்.


"என்னம்மா?" 


"உங்களுக்கும், இவருக்கும் என்னைப் பத்தித் தெரிஞ்சால் போதும் ப்பா! வேற யாருக்கும் சொல்லி, அதுக்கப்புறம் என்னை நம்பனும்ன்றது தேவையே இல்லை. நீங்க இடிஞ்சுப் போய் இருக்கிற அளவுக்கு இது வொர்த்தும் கிடையாது" என வார்த்தைகளைக் கொண்டு அவரைச் சமாதானம் செய்தாள் முக்தா.


தனக்காக மஹதனின் அன்னைக் கௌசல்யா செய்தவை எல்லாம் பிராயச்சித்தம் செய்யும் அளவிற்கு முக்கியமானவை தான். ஆனால், முதலில் தன்னுடைய புத்திரனின் எண்ணத்தை மாற்றாமல், சுற்றி வாழும் மற்ற மனிதர்களின் மனதை மாற்றிப் புனிதமாக்கச் செய்யும் முயல்வது நியாயமற்ற செயல் தானே?


"அதுவும் சரி தான் - னு நாங்களும் பேசாமல் வந்துட்டோம். நம்மளோட கண்ணியத்தை விட்டுத் தரக் கூடாதே?" எனக் கூறினான் கிஷான்.


"ஆமா. நீங்க சண்டை எதுவும் போட்டுடுவீங்களோன்னுப் பதறிட்டேன்" என்று அவனிடம் சொன்னாள் முக்தா.


யதேச்சையாகப் பார்ப்பது போல தன் செல்பேசியை எடுத்து ஆராய்ந்து விட்டு,


இருவரிடமும்,"ஆஃபீஸில் வேலை வந்துடுச்சு. என்னை அங்கே டிராப் செய்துட்டு, முக்தாவை வீட்டில் விட்டுடறீங்களா?" என்று கிஷானிடம் வினவினார் நீலகண்டன்.


அவரது யுக்தியைத் தெரிந்து கொண்ட கிஷானும்,"சரிங்க அங்கிள்" என்று சம்மதித்தான்.


இவர்களது இந்தச் சம்பாஷணைகளை, முக்தா உன்னிப்பாக கவனிக்கவில்லை. ஆதலால், அதை ஆராயவும் முற்படவில்லை.


எனவே,"முகி ம்மா! அப்பா இறங்கி ஆஃப்ஸூக்குப் போயிட்டு வர்றேன். நீ மாப்பிள்ளைக் கூட வீட்டுக்குப் போ" என்று மகளிடம் எடுத்துச் சொன்னார் நீலகண்டன்.


"ஓகே ப்பா" என்று அவருக்கு விடையளிக்கவும், மகிழுந்தில் இருந்து இறங்கிக் கொண்டார் அவளது தந்தை.


அவர்களுக்குக் கையசைத்து விட்டு, அலுவலகத்திற்குள் போய் விட்டார் நீலகண்டன்.


வாகனத்தை இயக்கும் ஓட்டுநரிடம்,"டிரைவர்! நீங்களும் பஸ் ஸ்டாப்பில் இறங்கிக்கோங்க. வீட்டுக்குப் போயிட்டு, நாளைக்கு எப்பவும் போல, வேலைக்கு வந்துடுங்க.இப்போ கீழே இறங்குங்க"என்று உத்தரவிட்டாள் அவனது எஜமானியான முக்தா.


ஏன் இந்த திடீர் உத்தரவு? எனத் திகைத்தாலும், அவள் சொன்னதைச் செய்தான் வாகன ஓட்டுநர்.


"முகி!" என்ற கிஷானின் அழைப்பிற்கு,


"எனக்கு உங்க கூட தனியாக நேரம் செலவழிக்கனும்!" என அவனிடம் கெஞ்சினாள் முக்தா.


குறுநகையுடன், பின் இருக்கையிலிருந்து எழுந்து இறங்கி வந்து, ஓட்டுநர் இடத்தில் அமர்ந்தான் கிஷான்.


அவளையும் முன்னே வருமாறு கண்ணசைக்க, சில நொடிகளுக்குப் பிறகு, அவனது இடப்புறக் கையைச் சுற்றித் தன்னுடையதைச் சேர்த்திருந்தாள் முக்தா.


"நாம இவங்களுக்கு முன்னாடியே கல்யாணம் செய்திருக்கனும்மா" என்றான்.


"ம்ஹூம்"


"ஏன்?" 


"இதுக்காகவா நாம உடனே கல்யாணம் பண்ணி இருந்திருக்கனும் கிஷான்? நமக்குப் பிடிக்கிற அப்போ மேரேஜ்ஜைப் பத்தி யோசிச்சா தான், எல்லாம் நல்லா நடக்கும். அதுவுமில்லாமல், இப்போ ரிவெஞ்ச் எடுக்கிறப் பழக்கம் எல்லாம் எனக்கு மறந்து போச்சு!" என்று மெல்லப் புன்னகை செய்தாள் முக்தா.


"கெஸ்ட்ஸ் குறைஞ்ச அப்பறம் தான் அவன் அப்படி உங்கிட்ட கேட்டான்! மொத்தக் கூட்டமும் இருக்கும் போது, பேசியிருந்தால், சத்தியமாகச் சட்டை போட்டிருப்பேன் முகி!" என்று அவளது கன்னத்தில் இதழ் பதித்து விலகினான் கிஷான்.


"அதை விடுங்க. இதுக்கு மத்தியில் மௌனாவும், அவங்க அப்பா, அம்மாவும் தான் பாவம். இந்நேரம், மஹதனுக்குக் கால் செய்திருப்பாங்க மௌனா. சண்டை வெடிக்கப் போகுது! அதுவும் என்னால்! ப்ச்!" என்று கழிவிரக்கம் கொண்டாள் முக்தா.


"அதென்ன உன்னால்? அவன் வார்த்தையை அளந்து பேசியிருக்கனும் முகி. என்ன விஷயம்ன்னுக் கூடக் கேட்டிருக்கலாம். அதை விட்டுட்டு, இப்படி விசாரிக்கிறான்!" என்று இறுக்கம் கொண்டான் கிஷான்.


"அவங்க மேரேஜூக்கு நாமப் போக வேண்டாம் முகி!" என்று பட்டென்று கூறியவனை விழி விரித்து, மிரட்சியுடன் பார்த்தாள் முக்தா.


"ஹலோ! என்ன மௌனா?" என்று செல்பேசியில் பேசினான் மஹதன்.


"என்னப் பண்ணி வச்சிருக்கீங்கன்னுப் புரியுதா மஹி?" என்று அவனிடம் சிடுசிடுத்தாள் மௌனா.


மருமகனை எதிர்த்துக் கேட்க முடியவில்லை என்று பரிதவிப்புடன் வீடு வந்திருந்தனர் அவளது பெற்றோர்.


அதேபோல, தன்னால் தான் முக்தாவிற்கு இந்த அவமானம் கிட்டியுள்ளது என்ற குற்ற உணர்வு வேறு மௌனாவைப் படுத்தி இருந்தது.


"இல்லை புரியலை" என்று விட்டேற்றியாகப் பதில் உரைத்தான் மஹதன்.


"முக்தாவை நான் தான் எனக்கு மணப்பெண் தோழியாக நிற்கச் சொன்னேன் ங்க!" என்றாள்.


"சோ?" 


"அவ சுயநலம்ன்னுக் குறிப்பிட்டதுக்குக் காரணமிருக்கு மஹி!" என அந்தக் காரணத்தையும் விளக்கி முடித்தாள் மௌனா.


"ஓஹ்! நம்ம மேரேஜ் முக்தாவுக்கு ஒரு டிரையல் ஆ?" என்று ஏளனமாக வினவினான் மஹதன்.


"உங்ககிட்ட நான் இப்போ பேசலைங்க. ஒரு வாரம் கழியட்டும்‌. அப்பறம் பேசறேன்" என்று அழைப்பைத் துண்டித்து விட்டாள் மௌனா.


அதில் கடுப்பானவன், அவளுக்கு அழைத்து, "அப்போ நீ எங்கூட பேசக் கூப்பிடலை, அவளுக்காகப் பரிஞ்சிப் பேசக் கால் செய்திருக்கிற! அப்படித் தான?" என்று கேட்டவுடன் விக்கித்து நின்றாள் மௌனா.


"நாமளும் அவரை மாதிரி பிஹேவ் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டுக் கல்யாணத்துக்குப் போக வேண்டாம்னா, என்னங்க அர்த்தம்?" என்று மென்மையாக கேட்டாள் முக்தா.


"அப்பவும் நீ போய் மௌனா கூட ஹெல்ப்புக்குச் சுத்திட்டு இருப்ப, இவன் அதைப் பார்த்துட்டு, 'இப்போ என்ன சுயநலத்துக்கு இதைப் பண்றன்னுக்' கேட்பான். அதையெல்லாம் காதில் வாங்கிக்கிட்டு, அப்படி ஒன்னும் மேரேஜ் அட்டெண்ட் பண்ணனும்னு அவசியமே இல்லை முகி!" எனத் தீர்க்கமாக கூறி விட்டான் கிஷான்.


"அவரு உங்களோட பெஸ்ட் ஃப்ரண்ட் கிஷான்!" என்று அதிர்ச்சியில் அலறினாள் முக்தா.


"அவன் மனசில் மோனா இருக்காங்கன்னுத் தெரிஞ்சதும், அவங்களை என் கூடப் பிறக்காத தங்கிச்சியாகவே ஏத்துக்கிட்டேன். ஆனால், எனக்கு மனைவியாக வரப் போகிற உன் மேல, அடிப்படை நம்பிக்கையைக் கூட வைக்காமல் இருக்கிறான்! அப்பறம் என்ன ஃப்ரண்ட்ஷிப்?" என்று பாரம் அழுத்தியது அவனை.


"கிஷான்!" என அவனது தோளில் முகம் புதைத்துக் கொண்டாள் முக்தா.


 - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...